மரணத்தின் வாசனை!

இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் ‘மரணத்தின் வாசனை’, ‘தனிமையின் நிழல்குடை’ ஆகியவையும், கருணாகரனின் ‘பலி ஆடு’ ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.

புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது அவசியமா என்று தோன்றினாலும், ஏதோ ஒரு உந்துதலில் வாங்கினேன்.

புத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை’ வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்’ ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.

இரு நாட்கள் முன்னாலும், நேற்றும் என் மனது மரத்துப் போனதா என்ற கேள்வியை நான் பல தடவை கேட்டுக் கொண்டேன். காரணம் உறவினர் ஒருவரின் மரணம் என் கண்ணில் நீரை வரவழைக்கவில்லை. எனக்கே வியப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல், கேள்விப்பட்ட உடனே ஏதோ ஒரு கவலை வந்தாலும், சிறிது நேரத்திலேயே, ஓரளவு நிதானத்துடன் அந்த மரணத்தை மனது ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியத்தை தந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து ஈழ மண்ணில் நடந்தேறியி்ருக்கும் ஆயிரம் ஆயிரம் மரணங்களாக இருக்குமோ? மரணத்தின் வாசனையை மட்டுமே தற்போது கொண்டிருக்க கூடிய வன்னிப் பகுதி நினைவிலும், உணர்விலும் கலந்து கிடப்பதாக இருக்குமோ?

மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனாலும், இப்படியா கொத்துக் கொத்தாக, ஏதுமறியா அப்பாவிகளின் உயிர் போயிருக்க வேண்டும். உலகிலேயே மனிதாபிமானம் என்பது செத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

மன அழுத்தமா?

மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்!

இன்றைய அவசர உலகத்தில், இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், மன அழுத்தம் என்பது சாதாரண விடயமாகிக் கொண்டு வருகிறது. நமது தேகத்தின் நிலை (posture), பழக்க வழக்கங்கள் (habits), எண்ணங்கள் (thoughts), நடத்தை (behavior) போன்றவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களால் மன அழுத்தத்தை தொடர்ந்து நீண்ட காலத்தில் குறைக்க முடியும். இங்கே மன அழுத்தத்தை விரைவாக குறைப்பதற்கான எட்டு எளிய முறைகள் தரப்பட்டு இருக்கின்றன.

1. கோபத்தை கட்டுப்படுத்துதல்!

அற்பமான, முக்கியத்துவமில்லாத, மிகச் சாதாரணமான விடயத்தையிட்டு சில சமயம் நமக்கு கோபம் வருவதுண்டு. அந்த கோபம் அவசியமற்றது என்பது புரிந்தே இருந்தாலும் நாம் அந்த கோபத்தை கட்டுப்படுத்தாமல் சில சமயங்களில் வெளிப்படுத்துகிறோம். அப்படி சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, நாம் கோபப்பட்டு நமது சக்தியை விரயம் செய்யும் அளவுக்கு அந்த விடயம் தகுதியற்றது என்று மனதிற்கு உணரவைத்து, அந்த கோபத்தை வர விடாமல் தடுங்கள். சக்திவாய்ந்த, கோபத்தை அடக்கியாளும் முயற்சி மன அழுத்தத்தை குறைப்பதற்கு மிகச் சிறந்த, உண்மையான வழியாகும்.

2. சுவாசம்!

மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுத்து விடுவது மன அழுத்தத்தை குறைக்கும். உங்களது மன அழுத்தம் அதிகரிக்கப்போகும் அடுத்த சந்தர்ப்பத்தில், மிக ஆழமாக மூன்று தடவைகள் மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளியேற்றுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் கிடைக்குமாயின், இந்த சுவாசிக்கும் பயிற்சியை தியானம் போல் செய்து பாருங்கள்.

3. மெதுவாக பேசுங்கள்!

மன அழுத்தம் ஏற்படும்போது, நாம் மிக விரைவாகவும், சத்தமாகவும் பேச ஆரம்பிக்கிறோம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுபோல் தோன்றினால், உடனே உங்கள் பேச்சை வழமையை விட மெதுவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பிப்பதுடன், மன அழுத்தத்தை தரும் அந்த சூழ்நிலையை நியாயமாகவும், கட்டுப்பாட்டுடனும் எதிர்கொள்ளத் தயாராவதை உணர்வீர்கள்.

4. நேரத்தை பயன்தரும் வகையில் கையாளுதல்!

நீங்கள் ஒத்திப்போட்டு வரும் வேலைகளில் ஏதாவது ஒரு வேலையை தெரிவு செய்து உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். உங்களை இழுத்தடித்து வந்த பொறுப்புக்களில் ஒன்றையேனும் நிறைவேற்றிய திருப்தி, உங்களுக்கு புதிய சக்தியையும் உற்சாகத்தையும் தருவதுடன், உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.

5. சுத்தமான காற்றை சுவாசியுங்கள்!


ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களேனும் வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசியுங்கள்.

6. பசி, உலர்வை தவிருங்கள்!

நிறைய திரவ ஆகாரத்தை உட்கொள்வதனால் உலர்வை தவிர்ப்பதுடன், நேரத்துக்கு சிறிய அளவிலேனும் உணவருந்துவதன் மூலம் பசியைத் தவிருங்கள். பசியும், உலர் நிலையும் நீங்கள் உணர்வதற்கு முன்னரே ஒரு ஆக்கிரமிப்பு மனோநிலையையும், மனவிசாரம், கவலையையும் தூண்டும் சக்தி உள்ளவையாக கருதப்படுகிறது.

7. தேகநிலை சோதிப்பு (quick posture check)!

இடையிடையே விரைவான ஒரு தேகநிலை சோதிப்பை மேற்கொள்ளுங்கள். தலையையும், தோள்களையும் நேராக நிலை நிறுத்தி, வளைந்திருக்கும், மந்தமான நிலையை தவிருங்கள். வளைந்த நிலையில் தசைகளில் ஏற்படும் இழுவிசை அல்லது இறுக்கமானது மன அழுத்தத்தை கூட்டுகிறது.

8. நாளின் முடிவில் உற்சாகமேற்படுத்தல்!

ஒவ்வொரு நாளின் முடிவிலும், உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய எதையாவது ஒன்றையாவது, சில நிமிடங்களாவது செய்யுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, சில நிமிட நேர ஓய்வான குளியல், அல்லது அரை மணி நேர அமைதியான வாசிப்பு, அல்லது கண்ணை மூடியபடி சில நிமிடங்களேனும் அமைதியாக இசையை ரசித்தல்… இப்படி எதையாவது செய்யுங்கள். அந்த நேரத்தில் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளையோ, அல்லது அன்று நடந்து முடிந்த விடயங்களைப் பற்றியோ யோசிக்காதீர்கள். உங்கள் வேலை பற்றியோ, வீட்டில் செய்ய இருக்கும் வேலைகள் பற்றியோ, குடும்ப பிரச்சனைகள் பற்றியோ, எதைப் பற்றியுமே அந்த சில நிமிடங்களாவது நினைப்பதை தவிர்த்து விடுங்கள்.

அப்படி செய்வீர்களேயானால், அழுத்தம் நிறைந்த அடுத்த நாளைச் சந்திக்க உற்சாகமாக தயாராகி விடுவீர்கள்.

எரியும் நினைவுகள் – யாழ் நூலகம்!

எரியும் நினைவுகள்!

எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் ‘எரியும் நினைவுகள்’ என்ற விவரணப் படம் பார்த்தேன்.

நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, இப்படி ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்த வேண்டும் என்று தோன்றியது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விடயமே.

பிரசித்தி பெற்ற, பழம் பெருமை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது பலருக்கும் வேதனை கொடுத்த ஒரு நிகழ்வு. பழைய நூலகம் இருந்த அதே இடத்தில், நூலகம் எரிக்கப்பட்டதற்கான  அடையாளங்களை முற்றிலும் மறைத்து புதிய நூலகத்தை கட்டி எழுப்பியதன் மூலம், வரலாற்று சாட்சி்யம் ஒன்றை  அழித்து விட்டார்கள் என்பது பலரது ஆதங்கம். ஆனால் சோமீதரன் தனது இந்த விவரணப் படம் மூலம், அந்த சாட்சிக்கு உயிர் கொடுத்து வைத்திருக்கின்றார். அதையிட்டு அவர் பெருமை கொள்ளலாம்.

இப்படியான அவரது பணிகள் மேலும் தொடரட்டும்.

குழந்தையின் பெயர்!

இன்றைக்கு இந்தப் பதிவைப் பார்த்தேன். நகைச்சுவையோட நிறைய விசயம் சொல்லியிருந்தார். அங்கே ஒரு பின்னூட்டம் போடப் போன இடத்தில, அட இதை என்னுடைய பதிவேட்டிலயும் (அதான் என்னுடைய வலைப்பதிவு) ஒரு இடுகை  போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய  வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது :) .  

ரவி கீழ்வருமாறு எழுதியிருந்ததுதான் இந்தப் பதிவுக்கு காரணம் :) .

//பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு சந்தோஷத்தையும் பார்த்திருக்கேன். //

குழந்தை கிடைப்பதற்கு 4 வருடத்திற்கு முதலே பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு பெயர் நினைத்தாயிற்று. ஆசைப்பட்டது பெண் குழந்தை. பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்காமலே, பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசையிலும், பெண்தான் பிறக்கும் என்ற ஏதோ ஒரு  நம்பிக்கையிலும்  குழந்தைக்கு அதே பெயரை வைப்பது என்று குழந்தை 3 மாதக்கருவாக இருக்கும்போதே முடிவாகி மற்றவர்களிடம் சொல்லியுமாச்சு.

என்ன குழந்தை என்று அறிய வேண்டுமா என்று வைத்தியர் கேட்டதற்கு, வேண்டாம் என்றும் சொல்லியாச்சு. நாள் செல்ல செல்ல, என்ன குழந்தை என்று பார்த்திருக்கலாமோ, கடைசி நேரத்தில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அது ஏமாற்றமாகப் போய் விடுமோ என்று சின்னதாய் ஒரு தவிப்பும் வந்தது. அப்படி என்னதான் பெயர்? அந்தப் பெயர் ”அஞ்சலி“.

ஆனால், நல்ல வேளையாக ஆசைப்பட்டபடியே பிறந்தது பெண் குழந்தை. குழந்தை பிறந்தபோது நான் மயக்கத்தில். கண்விழித்த முதல் கணத்தில், அரைகுறை மயக்கத்தில் நான் கேட்ட முதல்கேள்வி, “அஞ்சலிதானே?”. “ஆம்” என்ற பதில் தந்த ஆனந்தத்திற்கு அழவேயில்லை :) .  

கண்விழித்தபோது குழந்தையை என்னிடம் காட்டினார்கள். தலை நிறைந்த தலை முடியுடன் இருந்த மகளுக்கு தாதிமார், ribbon எல்லாம் கட்டி, அலங்காரம் செய்திருந்தார்கள். மகளை முதன்முதல் பார்த்த அந்த நேர உணர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

குழந்தை பிறக்கப்போவதுபற்றி மற்றவர்களிடம் அறிவித்தபோது, “அஞ்சலி பிறந்திட்டாள்”, என்று சொல்ல முடிந்தது. அதைவிட குழந்தை பிறந்ததுபற்றி அறிந்த ஒருவர் தொலைபேசியில், “என்ன, அஞ்சலி பிறந்தாச்சா?” என்று கேட்டது மிகுந்த மகிழ்ச்சி.

மகளுக்கு, தனக்கு பெயர் வைத்த விதம்பற்றி கேட்கும்போது பெருமையும், மகிழ்ச்சியும். அவளுக்கு தான் பிறந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் இப்போதும் தணியாத ஆர்வம். நல்ல வேளையாய் அவளுக்கும் அந்தப் பெயர் மிகவும் பிடிச்சிருக்கு :) .  மற்றவர்கள் அவளது பெயரைக் கேட்டுவிட்டு, “அழகான பெயர்” என்று சொன்னால் அவள் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை வரும். தமிழ் தெரியாதவர்கள்கூட, ஒரு தடவை பெயரை மீண்டும் சொல்லிப் பார்த்து ‘அழகான பெயர்’ என்று சொல்லும்போது மகிழ்ச்சி. தவிரவும் ஒரு சிலர் “It sounds like ‘angel’” என்று சொல்வார்கள். அதில் அவளுக்கு இன்னும் பெருமை கூடிவிடும்.

எனக்கும் அழகான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய தமிழ்ப் பெயர்கள்தான் அதிகம் பிடிக்கிறது :) . 

 

இலங்கைத் தமிழர் பிரச்சனையில்!

இன்று காலையில் மின்னஞ்சல் பெட்டியை திறந்தால் ஒரே ஒரு மின்னஞ்சல். கூடப் படித்த ஒரு சிங்கள நண்பரிடமிருந்து வந்திருந்தது. அந்த நண்பர்பற்றி  கூற  வேண்டுமானால்,  மிகவும் நல்லவர். கூடப் படித்த காலங்களில் சக தமிழ் மாணவர்களுக்காக எல்லா  விதத்திலும் பேசவும், உதவிகள் செய்யவும் தயங்காதவர். தமிழர்களுக்கு எங்கே துன்பம் நேர்ந்தாலும், எங்களுக்கு முதலேயும், எங்களை விடவும் அதிகமாயும் அதற்காக கவலை கொள்பவர்.

சில காலத்திர்கு முன்னர், அவருடனும், வேறு சில அவரைப் போன்ற சில சிங்கள நண்பர்களுடனும், மின்னஞ்சல் மூலமாக இலங்கைப் பிரச்சனைபற்றி ஒரு பெரிய தொடர் விவாதம் போய்க் கொண்டிருந்தது. Australia வில் வாழும், தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் Brian Seneviratne என்பவரது ஒரு அறிக்கையை யாரோ எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதை நான் பலருக்கும் அனுப்பி வைத்தேன். ஒரு சிங்கள நண்பருக்கும் அந்த மின்னஞ்சல் போனதில், இந்த விவாதம் ஆரம்பித்தது.

அந்த விவாதத்தில் பல வகையான கருத்துக்கள் பலருடனும் பரிமாறிக்  கொள்ளப்பட்டன. சிங்கள நண்பர்களிடையே, அவர்களுக்குள்ளேயே பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் எல்லோரும் நண்பர்களாக இருந்ததில், ஒரு நட்புடனே அனைவரும் கருத்துக்களை சொன்னார்கள். அதிலே எனக்கும் அவர்களுக்குமிடையே, பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நல்ல நண்பர்கள் என்ற முறையில், அவர்களிடம் எனது கருத்துக்களை தயக்கமின்றி சொல்ல முடிந்தது. எனது தமிழ் நண்பர்கள் சிலர், “இவங்களிட்டை இதுகளை கதைக்காதையுங்கோ. எங்க கொண்டுபோய் எப்படி மாட்டி விடுவாங்களோ தெரியாது” என்று சொன்னார்கள். ஆனால் அந்த சிங்கள நண்பர்கள் விடயங்களை சொல்லும் விதத்திலும், தமிழர்கள் மேல் உண்மையான அக்கறையோடு  அவர்கள்  பேசியதாலும்,  ஏற்கனவே அவர்களைப்  பற்றி  நான்  தெரிந்து  வைத்திருந்ததாலும், அவர்கள்  மேலுள்ள  நம்பிக்கையாலும், அந்த விவாதத்தில் என் கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வந்தேன்.

இப்படி நாம் பேசிக்கொண்டே இருக்காமல், இந்த போரை நிறுத்த நாம் ஏதாவது செய்தால் என்ன என்று ஒருவர் கேட்டார் (அதாவது இன்று மின்னஞ்சல் போட்டிருந்த அதே நண்பர் முன்னரும் கேட்டிருந்தார்). சிங்கள, தமிழ் நண்பர்கள் அனைவரும்கூடி அதை செய்ய வேண்டும் என்று சொல்லி, அவர் சில விடயங்களை முன்மொழிந்திருந்தார். அதிலுள்ள சில கருத்து வேறுபாடுகளை சொல்லிவிட்டு, இவையெல்லாம் நாம் செய்து நடை முறை சாத்தியமாகுமா என்ற எனது சந்தேகத்ததயும் அவரிடம் தெரிவித்திருந்தேன். அதேபோல்  மற்றவர்களும், முழுமையான ஈடுபாட்டைக் காட்டாததால், அந்த  தொடர்  விவாதம்  அத்துடன் நின்று போனது.  

இன்று அதே நண்பர் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன், சில விடயங்களை முன்மொழிந்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அவரது இந்த முன் மொழிதல்கள்பற்றி மற்றவர்கள் நினைப்பதுபற்றி அறிய வேண்டும் போல் இருக்கிறது. அதனால் அவரது மடலை கீழே இணைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

அவர் சிங்களவராய் இருந்தும், இத்தனை அக்கறையெடுத்து ஏதாவது செய்ய முயற்சிக்கும்போது, பாதிக்கப்படும் (அல்லது அதிகமான பாதிப்புக்குட்படும்) தமிழராய் இருந்து நாம் அதில் ஏதாவது செய்ய வேண்டாமா என்ற கேள்வி எழுந்து உறுத்துகின்றது. அதே வேளை நாம் எதையும் செய்து எதையாவது சாதிக்க முடியுமா, அது சாத்தியமா என்ற அவநம்பிக்கையும் எழுகின்றது. அவருக்கு என்ன பதில் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கருத்துக்கள் எனக்கும் வழி காட்டலாம்.

……………………………………………………….

Hope you guys are doing fine.

I had been planning to write this note for several weeks, but did not get a time
till today. This is again about the ethnic issue. I will make this as short as
possible.

According to my little knowledge, I feel that today every human should force the
govt and LTTE to stop their military campaigns immediately “once and for all”
and “in a genuine and practical way”. By saying “once and for all” I mean that
both parties should come to an ever lasting peace. By saying “genuine and
practical”, I mean that both groups should do this NOT to cheat each other
until they can regroup and resolidify.

I believe this is the responsibility of each Sri Lankan or each citizen on this
earth, who is concerned about continuing loss of lives, blood and every penny
with this war.

When I wrote you guys earlier, I proposed about appealing to the Govt. to stop the war and for implementing the 13th amendment (Rajeev formula) as the first step. That appeal
was mainly aimed at the govt, so, a Sinhalese could have initiated or lead that campaign. However, today, our appeals must be directed both to the govt and LTTE. We must urge both of them to stop their campaigns. Accordingly, the Tamil friends of ours should take the initiative to appeal to LTTE while our singhalese friends must take the initiative to appeal to the govt.

According to my understanding, today we can do the following:
1.      Appeal the govt of SL to pardon every member of LTTE including Prabhakaran
and Pottu Amman, get them pardoned by the Indian law enforcement agencies,
release all LTTE members in custody, hold provincial council elections for
North, and implement every step of the 13th amendment.

2.      Appeal LTTE to give up their military campaign, give up every piece of
weapon, and accept the 13th amendment as an initiating step for a political
solution

Please kindly think about this and let me know if there is any value of what I am writing, or if this is another naïve idea. Let me know if you have any kind of alternative ideas.

Hope I am not opening a can of worms. Please disregard this message if this is a useless idea. Sorry if I bothered you.

With regards,
…………………………………………………………

மொக்கை பத்தின மொக்கை!!

நீண்ட நாள் கழிச்சு, 3 நாட்களுக்கு முன்னால, நான் ஒரு இடுகை போட்டிருந்தேன். அதைப் பாத்துட்டு என் தம்பி எனக்கு சொன்னது “உன்னோட இடுகை பார்த்தேன்கா, ஆனா அது ஒரு பெரிய மொக்கை”. மொக்கைன்னா என்னன்னு ஓரளவுக்கு புரிஞ்சிருந்ததுனால, “என்னோட இடுகைகள் எல்லாமே மொக்கைதானேடா. இதுல புதுசா என்ன மொக்கை போட்டுட்டேன்”னு கேட்டேன். “அப்படியில்லை, உன்னோட இடுகைகள்ல ஏதாவது ஒண்ணு சொல்லியிருப்பதான” அப்படின்னு சொன்னான். அப்படியே அசந்து போய்ட்டேன் :) . ஏன்னு கேக்கிறீங்களா? அட, எனக்கே தெரியாம நான் ஏதேதோ சொல்லியிருக்கேன் போல இருக்கேன்னுதான் :) .

சரி, அப்ப அதைப் பத்தியும் ஒரு மொக்கை பதிவு போடலாமேன்னுதான் இப்போ இந்த இடுகை எழுத வந்தேன். மொக்கைன்னா என்னன்னு சரியா தெரிஞ்சுக்காம எதையும் எழுதிடக் கூடாதின்னுட்டு, “மொக்கைன்னா என்ன?” அப்படிங்கிற மிக முக்கியமான கேள்வியை கூகிளிடம் கேட்டேன். அவர் கொடுத்த பதில் ஒண்ணே ஒண்ணுதான். அது இதுதான். என்னோட தம்பி எனக்கு சொன்னதன் முழு அர்த்தமும் அந்த இடுகையின் முதல் வரியிலேயே புரிந்து போனது :) . அந்த முதல் வரியில இருந்தது, இதுதான். “பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. ஆனா சரக்கு எதுவும் இல்ல. அதனால இந்த மொக்கை :) ”. நானும் பதிவு எழுதி ரொம்ப நாளாச்சே, எதையாவதுபத்தி எழுதுவமேன்னுதான் அந்த இடுகையை எழுதினேன் :). அப்ப மொக்கைதான்.

மொக்கை + அகராதி ன்னு போட்டு இன்னொரு தடவை கூகிளிடம் கேட்டேன். அங்கே  முதலாவதா இது  வந்தது.  ‘கணிமை:  தமிழ்  வலைப்பதிவர்  கலைச்சொல்’  னு  வந்தது.  அங்கே போய் அழுத்தினால், ஒன்றையும் காணோம் :( . இத்துடன் மொக்கைக்கான தேடல் முடிவடைந்தது. :)

பி.கு. > இப்படி ஒரு இடுகை போடப் போவதுபத்தி சொன்னதுக்கு தம்பியின் comment, “அப்ப நீ எதையுமே எழுதாம இருந்துடுக்கா” :) . நல்லதை யாரும் சொல்லி கேக்கலாமா? அதான் இடுகையை போட்டுட்டேன். :)

என்னோடு பாட்டு பாடுங்கள்!

எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு.

ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு பொழுதுபோக ஏதாவது வேண்டுமே என்று தமிழ் தொலைக்காட்சி எடுத்தாச்சு. நாங்கள் எல்லோரும் வேலை, பாடசாலை என்று போனதும், அவர் தனியாக இருப்பது கடினமாக இருக்குமென்பதால் இந்த ஏற்பாடு.

Sun TV, கலைஞர் TV, Jeya TV, தீபம் தொலைக்காட்சி, தென்றல், இன்னும் சில மலையாள TV எல்லாம் வீட்டினுள்ளே வரத் தொடங்கி இரண்டு கிழமையாச்சு. இருந்தாலும், அவற்றை போய் உட்கார்ந்து பார்ப்பதில்லை. செய்திகள் போகும்போது சில சமயம் உட்கார்ந்து பார்த்ததுண்டு. அங்கே இங்கே நடந்தபடி, அல்லது வேலை செய்தபடி, இடை இடையே அங்கே கண்ணையும், காதையும் வைத்ததோடு சரி.

இன்றைக்கு கலைஞர் TV ல ‘வேட்டையாடு விளையாடு’ படம்னு சொன்னாங்க. படம் எப்படி, கதை என்ன ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும், அட நான் தமிழ் படம் பாத்து நீண்ட நாளாச்சே. இன்றைக்கு பார்க்கலாம் என்று திட்டம் போட்டேன். ஆனா, அந்த படம் தொடங்க கொஞ்ச நேரம் முதல் Jeya TV ல பாலசுப்ரமணியம் நடத்தும், ‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ இசை நிகழ்ச்சி இருக்குன்னு தெரிஞ்சது. அதைப் பார்க்கிற ஆசையில், படத்தை துறந்து விட்டு, அதைப் பார்த்தேன்.

முதலில் எனக்குப் பிடித்தமான ஒரு பாடலை ஒரு பெண் பாடினார். ‘காக்க காக்க’ படத்திலிருந்து, ‘தூது வருமா தூது வருமா’ பாடல். அதை அவர் பாடிய விதம் மிக அருமையாக இருந்தது. ஆனால், அவர் பாடி முடிந்ததும், அதுபற்றி பாலசுப்ரமணியம் எந்த கருத்துமே சொல்லாமல் அடுத்தவரை கூப்பிட்டது கொஞ்சம் கவலையாகி விட்டது. அத்தனை அருமையாகப் பாடினாரே, எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டாரே என்று இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த நிகழ்ச்சியில் அவர் பொதுவாகவே எந்த கருத்தையும் சொல்லவில்லை. நிகழ்ச்சியில் நடுவர்களின் முடிவில் தான் தலையிடக் கூடாதென்று நினைத்திருப்பாரோ. இடை இடையே வேறு விடயங்களை நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆறு பேர் பாடினார்கள். அனைவரும் நன்றாகப் பாடினாலும், எனக்கென்னவோ, முதலில் பாடியவர் எல்லா விதத்திலும் அருமையாக பாடியதாகவே தோன்றியது. இடையில் அதிக விளம்பரங்கள் எதுவும் வராமல் இருந்ததும் நன்றாக இருந்தது.

நடுவர்களான இசையமைப்பாளர் M.S.Visvanathan, இயக்குனர் பாலாவும், இடை இடையே தமது சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். M.S.Visvanathan சொன்ன ஒரு விடயம், ஒரு பாடல் இந்த தலை முறைக்கு என்றில்லாமல், எல்லா தலை முறையினரையும் ரசிக்க வைக்குமானால், அதுவே பாடலின் வெற்றி என்று. அதற்கு ஒரு உதாரணமும் சொன்னார். ஒரு இசைநிகழ்ச்சியில் 18 வயது ஆண் ஒருவர், அந்த சமயத்தில் 38 வயதான பாடலான, நெஞ்சில் ஓர் ஆலயம் படப் பாடல் ஒன்றை விரும்பிக் கேட்டாராம். உண்மைதான், சில பாடலகள் எத்தனை தலைமுறை கடந்தாலும், மனதில் நிறைந்திருக்கத்தான் செய்கின்றது. ‘எண்ணப்பறவை சிறகடித்து’ பாடலும் அப்படிப்பட்ட பாடலில் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.

இரண்டாம் சுற்றில், பாலசுப்ரமணியம் ஒரு பாடலின் மெட்டை இடையில் கொடுக்க, அந்த பாடலைக் கண்டு பிடித்து பாட வேண்டும். எல்லோரும் இலகுவாக கண்டு பிடித்துப் பாடினார்கள். அவர்கள் பாடும்போது பாலசுப்ரமணியமும், அவர்களுடன் இணைந்து பாடியது இன்னும் அழகாக இருந்தது. அதில கடைசிப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடலான ‘இளையநிலா பொழிகிறது’.

முடிவில் நான் எதிர் பார்த்தபடி முதலில் ‘தூது வருமா தூது வருமா’ பாடிய பெண்ணே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனக்கும் மகிழ்ச்சி. இறுதியில், அந்த பெண்ணுடன் பாலசுப்ரமணியம், இன்னொரு அழகான பாடலைப் பாடினார்.

‘ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ butterfly butterfly
ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காக திறந்தேன் மனதின் கதவை’

பாடலைப் பாடியபடியே, அந்தப் பெண்ணை வாழ்த்தியும் வரிகளை மாற்றி பாலசுப்ரமணியம் பாடியது நன்றாக இருந்தது. அதுனால, முதலில் அவர் அந்த பெண்ணின் பாடலுக்கு கருத்து எதுவும் சொல்லலையே என்ற குறையும் தீர்ந்தது. :)

அந்த நிகழ்ச்சி முடிந்ததும், கலைஞர் TV யைப் போட்டால், கமலும், Jothika வும், தங்கள் தங்கள் அறைகளிலிருந்து வெளியே வந்து ஏதோ பேசிக் கொண்டார்கள். முன்னுக்கு போனது என்னவென்று புரியாததில், சரியாக விளங்கவில்லை. இருந்தாலும் கொஞ்ச நேரம் பார்த்தேன். படம் பிடிக்கலை. எழுந்து எனது வேலைகளை செய்யப் போனேன். ஆனாலும் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தபோது, ’உயிரிலே எனது உயிரிலே’ பாடல் போனது. அட, இது ஒரு நல்ல பாடலாச்சே, அது இதில்தானா என்று நினைத்த போதுதான், ‘பார்த்த முதல் நாளே’ பாடலும் இந்தப் படத்தில் என்பது நினைவுக்கு வந்தது. சரி, பாட்டு போகும்போது, கேட்கலாம் என்று இருந்தால், அந்த பாடல் வரவில்லை. முதலே போய் விட்டதுபோல. 

வேலைகள் எல்லாம் முடிய, அதில் வந்து உட்கார்ந்தேன். கமல், Jothika விடம் ‘இனி நீயும் மாயாவும் என் சொந்தம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இனி ஒரு வேலையும் இல்லைத்தானே என்று அதிலேயே உட்கார்ந்து படம் முடியும்வரை பார்த்தேன். ஆனால் படம் பிடிக்கவில்லை. 

‘என்னோடு பாட்டு பாடுங்கள்’ ஒவ்வொரு கிழமையும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே எழுந்து வந்து இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கேன். :) 

இன்றைய இணைப்பு :)

இன்று கிடைத்த அருமையான ஒரு மின்னஞ்சல் இணைப்பு.

http://www.raisingsmallsouls.com/wp-content/themes/179/form.html

எழுத முடியாவிட்டாலும், இவற்றையாவது இங்கே பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. :)

படங்களும், பாடலும்!

http://www.greatdanepro.com/Chiquitita/index.htm

இன்று காலையில் மின்னஞ்சலில் இந்த இணைப்பு வந்திருந்தது. அழகழகான படங்களும், ஒரு பாடலும். நன்றாக இருக்கிறது. கேட்டுப் பபருங்கள். ஆங்கிலத்தில் பாடலைக் கேட்க, பக்கத்தின் கீழே போய்ப் பாருங்கள்.

புதிய வீடு!

எனக்கு இந்த வீடு என் செல்ல தம்பி வாங்கிக் கொடுத்தது. வாங்கிக் கொடுத்து ரொம்ப நாளாகுது. வீட்டுல குடியேற இத்தனை நாளாச்சு. :)

 

 

←Older