இரசாயன ஆதிக்கம்!

மட்டக்களப்பு நவம் அரவிந்தன்

இரசாயன ஆதிக்கம்!

புறாக்களும்
ஒலிவஞ்செடிகளும்
கருகிப்போயின
மனிதன் மனிதனை
அடித்துக் கொண்டான்
சின்ன நாடுகளை
பெரிய நாடுகள்
ஏப்பம் விட்டு விட்டு
எச்சில் துண்டுகளை
தூர வீசியது
அனேகம்பேர்
பழமை சொல்லியே
குளிர் காய்ந்தார்கள்
அனேகமாய்
இரசாயனம்
முழுவதுமாய்
மனிதனை ஆண்டு கொள்ளும்!
நன்றி: “காத்திருத்தல்!”, மட்டக்களப்பு நவம் அரவிந்தன்

Related posts

Leave a comment

Your comment