மெளனமும் ஒரு மொழி!
மெளனமும் ஒரு மொழி!
இதழ்களை
இறுக மூடி
இதயத்தால் பேசும்
மொழியே மெளனம்
காதலில் மெளனம்,
அழகாய் பேசும்,
ஆயிரமாயிரம்,
கதை பல பேசும்…
அழுகையில் மெளனம்,
சோகத்தை பேசும்,
சொந்தங்கள் மறந்து,
ஆரவாரமாய் பேசும்….
கோபத்தில் மெளனம்,
சினத்தை பேசும்,
சீண்டிப் பார்த்தால்,
கொந்தளித்து பேசும்….
அன்பில் மெளனம்,
உள்ளத்தில் பேசும்,
ஊமையாய் இருந்து,
ஆழமாய் பேசும்…..
வார்த்தைகள் அற்ற
புத்தகம் மெளனம் – ஆனாலும்
வாசிக்க வாசிக்க
வாக்கியங்கள் ஆயிரம்
இன்பத்தில் மெளனம்
இதயத்தால் சுவாசிக்கும்,
துன்பத்தில் மெளனம்
துயரங்களை மூடும்
பேசாத மெளனத்தில் அர்த்தமில்லை,
எனினும்… மெளனமும் பேசும்…..
மெளனம் ஒரு தவம்
ஆழ்ந்து போனால் அமைதி கிட்டும்

i love this poem…nanthan muthal comment poduren
))))))))
கிறுக்கல் ரொம்ப பழசுதான். இருந்தாலும் புதிதான பின்னூட்டம் போட்டிருக்கிறீங்க சினேகிதி. நன்றி.