தடையங்கள்!!!

கடலோர
புதை மணலில்
அதோ
சிலகால் சுவடுகள்,
பெண் அவள் மனதில்
அவன் விட்டுப் போன
பாரமான
தடையங்கள்
அழியாமல்,
ஆரவாரமாய்
எழப்போகும்
கடல் நீர்
அழித்துவிடும்
கால் சுவடுகளை,
ஆனால்
அவள் நெஞ்சின்
தடையங்கள்
அழியுமா
இவ்வாழ்வில்???
Related posts
August 5th, 2005 in
காதல், கிறுக்கியவை

ஆறு அது ஆழமில்ல…
அது சேரும் கடலும் ஆழமில்ல…
ஆழம் இது அய்யா!…
இந்தப் பொம்பள மனசுதாய்யா…
ஞானபீடம்
கலை,
தங்களின் படம் பார்த்து கவிதை எழுதும் திறமை அபாரம்.. ஒவ்வொரு கவிதையும் அருமை..
நிறைய கவிதை எழுத்துங்கள்…விரைவில் ஒரு கவிதை தொகுப்பு புத்தகம் போட வாழ்த்துக்கள்..
வீ எம்
ஞானபீடம், வீ.எம் இருவருக்கும் எனது நன்றிகள்.
சுவடுகள்,தடையங்கள் இல்லா மனிதம் மனமும் உண்டோ இவ்பாரில்!
சில வகையான சுவடுகள் இதமானவை! உடலுக்குள் இரத்தோட்டத்தினை அதிகரிக்க செய்து புத்துணர்வை ஏற்படுத்துபவை!
உண்மைதான் றெனிநிமல், இதமான சுவடுகளும் உண்டு. கூடவே இரணமான சுவடுகளும் உண்டே.