எப்போதோ எழுத ஆரம்பித்து பின்னர் draft இலேயே இருந்த இடுகை இன்று கண்ணில் பட்டது. அதை இங்கே பதிவேற்றுகிறேன்.
”இண்டைக்கு library க்கு போனீங்களா? என்ன புத்தகம் எடுத்து வந்தீங்க?” என்று மகளிடம் கேட்டேன். அவள் உடனே ஒரு வெட்கச் சிரிப்புடன், ”ஓம், போனனான், புத்தகம் எடுத்தனான். ஆனா உங்களுக்கு காட்டக் கூடாது.” என்றாள். ஆஆஆஆஆஆஆஆஅ, எனக்கு காட்டக் கூடாத அப்படி என்ன புத்தகத்தை மகள் எடுத்து வந்திருக்கிறாள் என்று ஆச்சரியப்ப்பட்டுப் போனேன்.”அதென்ன புத்தகம் எனக்கு காட்டக் கூடாதது? அப்படி ஒண்டும் இருக்காதே. எனக்கும் உங்களுக்குமிடையில no secrets எண்டு அண்டைக்கு சொன்னனீங்களே. காட்டுங்கோ எனக்கும்” என்று சொன்னேன்.
எனக்கோ curiosity தாங்க முடியேல்லை
. அவளோ ஒளிச்சுக் கொண்டு ஓடித் திரியிறாள். நான் படும் அவதியைச் சகிக்காமல், அவளே கடைசியில் புத்தகத்தை காட்டினாள். புத்தகத்தின் தலைப்பு, “How to handle your mom?”. தலைப்பை பார்த்ததும் நான் சிரித்தேன், ”நல்ல புத்தகம்தான் எடுத்து வந்திருக்கிறீங்க.” என்றேன். அவள் உடனே முன்னுரையில் இருந்த ஒரு வசனத்தையும் காட்டி, “இப்பிடி இருக்கு இங்க. அதான் நான் உங்களுக்கு காட்டக் கூடாது” என்றாள். அப்படி என்னதான் இருக்கு என்று பார்த்தேன். அங்கே இருந்தது…..
It’s dangerous when it falls into the wrong hands, that’s yr mom’s.
உடனே புத்தகத்தை திருப்பிக் கொடுத்து, “Good luck to handle your mom” என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே புத்தகத்தை பறிக்காத குறையாய் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் ஓடினாள். அவள் மகிழ்ந்தால் எனக்கும் மகிழ்வுதானே?
{ 4 comments… read them below or add one }
நல்ல வெவரமாதா இருக்கா அஞ்சலி
பிள்ளைகள் விவரமாய்த்தான் இருக்கிறார்கள்
எதுக்கெல்லாம் புத்தகம் படிக்கிறாங்க பாருங்க…