Archive for 'அழகு'
படங்களும், பாடலும்!
http://www.greatdanepro.com/Chiquitita/index.htm
இன்று காலையில் மின்னஞ்சலில் இந்த இணைப்பு வந்திருந்தது. அழகழகான படங்களும், ஒரு பாடலும். நன்றாக இருக்கிறது. கேட்டுப் பபருங்கள். ஆங்கிலத்தில் பாடலைக் கேட்க, பக்கத்தின் கீழே போய்ப் பாருங்கள்.
Posted: January 30th, 2008 under அழகு.
Comments: none
நாடு நல்ல நாடு - நோர்வே 5
நோர்வே 5
முந்தைய பதிவில் களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன்.
நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும் பனிநிலைகளைக் (Glaciers) குறிக்கும். இப்படிப்பட்ட உருகும் பனிநிலைகள் நோர்வேயின் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளில் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய பனிப்பாறைகள் நோர்வேக்கு சொந்தமான, ஆனால் பெரு நிலப் பரப்பிலிருந்து தனியாக அமைந்திருக்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) என்றழைக்கப்படும் கூட்டமான தீவுகளில் அமைந்திருக்கின்றன. இந்த [...]
Posted: May 9th, 2007 under அழகு, உலகம், நோர்வே.
Comments: none
நாடு நல்ல நாடு - நோர்வே 4
நோர்வே - 4!
நோர்வே நாடானது உலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. இதன் பரப்பளவு ஜேர்மனின் பரப்பளவுக்கு ஒத்திருக்கிறது. (ஜேர்மனை இரு எதிர் புள்ளிகளில் பிடித்து இழுத்து போட்டால் நோர்வே வரும் ).
ஆனால் அதிகளவு நிலப்பரப்பை மலைகள், மலைத் தொடர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் (prehistoric), பனிக்காலத்தின் (ice age) [...]
Posted: May 8th, 2007 under அழகு, உலகம், நோர்வே.
Comments: none
அம்மாவே குழந்தை!
இந்த பதிவை எழுத தூண்டியது என்னுடைய ‘என்னைப் பாதித்தவை’ வலைப்பதிவின் நாடு நல்ல நாடு - நோர்வே 2 பதிவில் ரவிசங்கர் போட்டிருந்த பின்னூட்டத்தில் இருந்த ஒரு விஷயம்.
“முதல் பனி என்னைக்குமே மறக்காது.” உண்மைதான். ஆனா இது சம்பந்தமா எனக்கு இன்னொரு மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை அங்கே போடாமல், இங்கே ‘சும்மா சும்மா’ வில் எழுதலாம் னு தோணிச்சு.
அந்த நிகழ்ச்சி அம்மாவை குழந்தையாய் பார்த்த நிகழ்ச்சி!
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இந்த நோர்வே நாட்டை [...]
Posted: May 8th, 2007 under அழகு, நினைவில்.., நோர்வே.
Comments: none
இலையுதிர்காலம்!!
இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் மரங்களின் அழகே தனிதான். அந்த அழகு ஓரிரு மாதங்களில் மங்கிப் போய், சோபையிழந்த தோற்றத்தை மரத்துக்கு கொடுத்து விடுகிறதே
:((((
கீழே…..
இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் செந்நிற இலைகளுடன் அழகாய் இருந்த மரம் ஒரே மாதத்தில் எப்படியாகி விட்டது பாருங்கள். ம்ம்ம்.
Posted: December 28th, 2006 under அழகு, படங்கள்.
Comments: none
பூக்கள் மட்டும்!!
இன்றைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது, இந்த செடி வித்தியாசமாக கண்ணில் பட்டது. அதை கைத்தொலைபேசியில் கிளிக்கிக் கொண்டேன்.
இந்த செடியை, அதில் நீலமும், வெள்ளையும் கலந்த நிறத்தில் அழகழகாய் தொங்கும் பூங்கொத்துக்களை பல தடவை இரசித்துப் பார்த்திருக்கிறேன். இலையுதிர் காலத்தின் மாற்றத்தால் இப்போது இப்படி இருக்கிறது. பாருங்கள் மரத்தில் இலைகள் எல்லாமே உதிர்ந்து போய் விட்டன. ஆனால் பூக்கொத்துகள் மட்டும் (நிறம் மாறி விட்டாலும் கூட) மரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை.எனக்கு ஏனோ (சம்பந்தமே இல்லாமல்) ஒரு விஷயம் [...]
Posted: December 7th, 2006 under அழகு, சிந்தனை, சோகம், படங்கள், வாழ்க்கை.
Comments: none
வானவில்!!
வானவில்!!
வண்ணங்களை குழைத்து
அங்கே அழகாய்
வானத்தில் தெளித்தது யார்?
வெயிலும் மழையும்
காதலில் நெருங்கி வர….
ஒளிக்கதிர் எனும்
தளிர்க்கரம் நீட்டி…..
மழைத்துளியை
வெயில் இதமாய் தழுவிட…..
ஒளிச்சிதறல்கள் அங்கே…
வானில் தெறித்தது
வண்ண கோலமாய்……
நேரத்தின் அவசரத்தில்…
மழைதுளி - தன்
இனிய அனுபவத்தில்..
தன்னையே இழந்து செல்ல
கோலங்கள் கரைகிறது
துளிகளினூடே……..
Posted: May 15th, 2005 under அழகு, கிறுக்கியவை.
Comments: none



