<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உயிர்ப்பு &#187; நிகழ்வுகள்</title>
	<atom:link href="http://kalaiarasy.com/category/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kalaiarasy.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 24 Jun 2010 09:10:25 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>அழகோ அழகு!</title>
		<link>http://kalaiarasy.com/2010/02/beautiful/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/02/beautiful/#comments</comments>
		<pubDate>Tue, 23 Feb 2010 13:38:34 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=631</guid>
		<description><![CDATA[இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.
எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.

இன்று, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.</p>
<p>எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/">இந்த இடுகையில்</a> குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.</p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165.jpg"><img class="aligncenter size-medium wp-image-601" title="CIMG1165" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p>இன்று, அந்த கடல்நீரேரியின் வெண்கம்பளத்தை மூடி, ஆளை மறைக்கும் உயரத்துக்கு புகை மூட்டம் சூழ்ந்து அழகோ அழகாக இருக்கு. (ஐயோஓஓஒ அந்த அழகை விபரிக்க முடியேல்லையே). கையில் புகைப்படக் கருவி இருக்கவில்லை. கைத் தொலைபேசியில் எடுக்கும் படம் தெளிவில்லை. அந்த நீரேரியின் மேல் தற்போது நடக்க முடியும். சில நாட்கள் முன்னர், அதன்மேல் நடந்து படம், அசையும் படம் எல்லாம் எடுத்தோம். ஆனாலும் இப்படி இந்த புகை மூட்டத்தி்ற்குள் ஓடி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்றைக்கு அதை நடை முறைப்படுத்த முடியவில்லை. நாளையும் இந்த அழகு தொடர்ந்து இருந்தால், எப்படியாவது இதை எடுத்தே ஆக வேண்டும். பார்க்கலாம்.</p>
<p>1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த ஆண்டில்தான், பேர்கனில் இவ்வளவு பனிவிழுந்து நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருக்கிறதாம். பேர்கன்தான் மழைநகரமாச்சே. அடிக்கடி மழைபெய்து, பனியை கழுவிச் சென்று விடும். ஆனால், இந்த ஆண்டு மழை ஓய்வு பெற்றுக் கொண்டு, பனிமழைக்கு இடம் விட்டுச் சென்றிருக்கிறது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<hr><h2>1 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/beautiful/#comment-540">February 23, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>தங்களது மகிழ்ச்சியை குதூகலத்தை உணர முடிகிறது. பார்க்க ஆவலாகவும் இருக்கிறது. :-)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/02/beautiful/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>என் செல்லக் குட்டிம்மா!</title>
		<link>http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comments</comments>
		<pubDate>Fri, 05 Feb 2010 10:07:23 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Kids world]]></category>
		<category><![CDATA[human nature]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[அன்பு]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நினைவில்..]]></category>
		<category><![CDATA[பாசம்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=605</guid>
		<description><![CDATA[நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.
அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.</p>
<p>அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே கிடைத்த ஒரு பேனாவை எடுத்து, &#8216;I love you, I love you&#8217; என்று எழுதி எனது புத்தகம் ஒன்றின் மேல் வைத்திருந்தாள்.</p>
<p>பின்னர் இருவரும் வெளியே போனோம். ஒரு மணி நேரத்தின் பின்னர், வீடு திரும்பும்போது ஆறுதலாய், நடந்த விடயங்களைப்பற்றி அவளிடம் சமாதானமாகப் பேசினேன். பின்னர் வீடு வந்து குளித்து, சாப்பிட்டு படுக்கைக்குப் போனதும், அவசரமாய் ஒரு தாள் எடுத்து எழுதினாள். ”அப்படி என்ன எழுதுறீங்க?” என்று கேட்டேன். பதிலில்லை. எனக்கு காட்டாமல் ஒளித்து ஒளித்து எழுதினாள். எழுதி முடித்ததும் என்னிடமே கொண்டு வந்து தந்தாள்.</p>
<p>அதில் சின்னதாய் ஒரு கடிதம்.</p>
<p>To my dear mother,</p>
<p>You always love me and kiss me,</p>
<p>But will never, ever miss me.</p>
<p>You are nice and pretty,</p>
<p>and you are also witty.</p>
<p>You are posh and kind,</p>
<p>And you have good thought in your mind,</p>
<p>I do not know what to write,</p>
<p>But one thing</p>
<p>WE SHOULD NOT FIGHT</p>
<p>By: Amma&#8217;s favourite Kutty</p>
<p>அன்பாக அணைத்து முத்தமிட்டேன். &#8220;நான் அப்பிடி செய்ததுக்கு Sorry அம்மா&#8221; என்று சொல்லி முத்தம் தந்து விட்டு, அந்தக் கடிதத்தை கடைசிவரை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு, படுத்து, உடனேயே தூங்கி விட்டாள் என் செல்ல மகள்.</p>
<hr><h2>10 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-526">February 5, 2010</a>, <a href="http://vidhoosh.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://vidhoosh.blogspot.com');"  rel='external nofollow' class='url'>Vidhoosh</a> wrote:</p><p>ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துக்கள்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-527">February 5, 2010</a>, <a href="http://varadaradj.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://varadaradj.blogspot.com');"  rel='external nofollow' class='url'>Varadaradjalou</a> wrote:</p><p>நெகிழவைத்துவிட்டது உங்கள் இந்த பதிவு.</p><p></p><p>குட்டியுடன் இனி சண்டை போடாதீர்கள், ப்ளீஸ்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-528">February 5, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>Very touchy!!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-529">February 5, 2010</a>, <a href="http://naanirakkappokiraen-aruna.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://naanirakkappokiraen-aruna.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>aruna</a> wrote:</p><p>ஆஹா...குட்டிம்மா கலக்குறாங்க!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-530">February 5, 2010</a>, <a href="http://mazhai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://mazhai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>`மழை` ஷ்ரேயா</a> wrote:</p><p>நல்லாருக்கு. </p><p>இதெல்லாம் பொக்கிசச் சாமான்... பத்திரமா வைச்சிருப்பீங்க என்டு தெரியும். அம்மாமாருக்குக் கை வந்த கலை இது. :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-532">February 7, 2010</a>, <a href="http://naanvijay.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://naanvijay.blogspot.com');"  rel='external nofollow' class='url'>விஜயநரசிம்மன்</a> wrote:</p><p>கவிதை அழகென்றால், அந்தக் குட்டிக் கவிதாயினி அதைவிட அழகு...</p><p>அழகான நிகழ்வு... ஒரே ஒரு சின்ன வருத்தம், குழந்தை ஆங்கிலத்தில் எழுதியது, ”குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் - கவிதை எழுதும் அளவிற்கு” -என்று நான் உங்களைக் கேட்டுக்கொண்டால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்! அழகான ஒரு குட்டிக் கவிதாயினி கிடைக்கப்பெற்றால் தமிழ் மிகவும் பேறுபெறும் - அதற்காகவே சொல்கிறேன்!</p><p>பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!</p><p>விஜய் :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-533">February 9, 2010</a>, கலை wrote:</p><p>பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.</p><p></p><p>விஜயநரசிம்மன்!</p><p></p><p>மகள் தமிழில் நன்றாக கதைக்கவும், அத்தோடு கொஞ்சமாய் எழுதவும், வாசிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாள். சின்ன சின்ன கவிதைகள்கூட எழுதியிருக்கிறாள். அம்மம்மா, தாத்தாவிற்கு, (தனக்குத் தெரிந்த) அழகு தமிழில் குட்டிக் கவிதை கூட எழுதிக் கொடுத்திருக்கிறாள். தொடர்ந்து தமிழில் எழுத உற்சாகப்படுத்தி வருகின்றேன். பார்க்கலாம்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-551">March 6, 2010</a>, Karitha Shalee wrote:</p><p>மிகவும் அருமையான பதிவு</p><p>வாழ்த்துக்கள்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-596">April 24, 2010</a>, பாலாஜி (மேம்) wrote:</p><p>என் குட்டிம்மா நினைவு வந்து விட்டது! </p><p></p><p>மனமார்ந்த நன்றி!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-597">April 24, 2010</a>, <a href="http://tamilsowimya.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://tamilsowimya.blogspot.com');"  rel='external nofollow' class='url'>VELU.G</a> wrote:</p><p>அருமையான பதிவு </p><p></p><p>இது போல் குழந்தைகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமனாலும் படிக்கலாம்</p><p></p><p>நன்றி</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>இன்றைய கனவு!</title>
		<link>http://kalaiarasy.com/2009/09/todaysdream/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/09/todaysdream/#comments</comments>
		<pubDate>Tue, 08 Sep 2009 09:39:06 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கனவு]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சோகம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=317</guid>
		<description><![CDATA[வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன்  . நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலையை நினைத்தால்&#8230;&#8230;. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
3 Comments At September 8, 2009, சின்னம்மணி wrote:இந்த கனவுக்கு பதில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலையை நினைத்தால்&#8230;&#8230;. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.</p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/09/todaysdream/#comment-399">September 8, 2009</a>, சின்னம்மணி wrote:</p><p>இந்த கனவுக்கு பதில் கண்ணீர் மட்டும்தான் கலை. :(</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/09/todaysdream/#comment-402">September 10, 2009</a>, <a href="http://adaleru.wordpress.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://adaleru.wordpress.com');"  rel='external nofollow' class='url'>அடலேறு</a> wrote:</p><p>வணக்கம் கலை ,</p><p>நான் அடலேறு ,(http://adaleru.wordpress.com) லும் என்னை காணலாம், நண்பர் வினைஊக்கியின் வலைப்பக்கம் வாயிலாக தங்களின் அறிமுகம் கிட்டியது. நோர்வே தேசத்தில் படிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் தங்களுடைய தனி மின் மடல் முகவரி கிடைக்கவில்லை, தயவு செய்து தங்களுடைய தனி மின்மடல் முகவரியை விருப்பத்திற்கு இணங்க என்னுடைய infosat06@gmail.com என்ற  இந்த முகவரிக்கு அனுப்பவும்.</p><p></p><p>அழியாத அன்புடன்</p><p>அடலேறு</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/09/todaysdream/#comment-415">September 20, 2009</a>, கலை wrote:</p><p>//இந்த கனவுக்கு பதில் கண்ணீர் மட்டும்தான் கலை. :( //</p><p></p><p>ம்ம்ம்ம். அதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியுமான்னு தெரியலை. :(</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/09/todaysdream/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>என்னோடு பாட்டு பாடுங்கள்!</title>
		<link>http://kalaiarasy.com/2008/09/ennodupaaddu/</link>
		<comments>http://kalaiarasy.com/2008/09/ennodupaaddu/#comments</comments>
		<pubDate>Sat, 20 Sep 2008 23:19:59 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=142</guid>
		<description><![CDATA[எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு.
ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு பொழுதுபோக ஏதாவது வேண்டுமே என்று தமிழ் தொலைக்காட்சி எடுத்தாச்சு. நாங்கள் எல்லோரும் வேலை, பாடசாலை என்று போனதும், அவர் தனியாக இருப்பது கடினமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #0000ff;">எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு.</span></p>
<p><span style="color: #0000ff;">ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு பொழுதுபோக ஏதாவது வேண்டுமே என்று தமிழ் தொலைக்காட்சி எடுத்தாச்சு. நாங்கள் எல்லோரும் வேலை, பாடசாலை என்று போனதும், அவர் தனியாக இருப்பது கடினமாக இருக்குமென்பதால் இந்த ஏற்பாடு.</span></p>
<p><span style="color: #0000ff;">Sun TV, கலைஞர் TV, Jeya TV, தீபம் தொலைக்காட்சி, தென்றல், இன்னும் சில மலையாள TV எல்லாம் வீட்டினுள்ளே வரத் தொடங்கி இரண்டு கிழமையாச்சு. இருந்தாலும், அவற்றை போய் உட்கார்ந்து பார்ப்பதில்லை. செய்திகள் போகும்போது சில சமயம் உட்கார்ந்து பார்த்ததுண்டு. அங்கே இங்கே நடந்தபடி, அல்லது வேலை செய்தபடி, இடை இடையே அங்கே கண்ணையும், காதையும் வைத்ததோடு சரி.</span></p>
<p><span style="color: #0000ff;">இன்றைக்கு கலைஞர் TV ல &#8216;வேட்டையாடு விளையாடு&#8217; படம்னு சொன்னாங்க. படம் எப்படி, கதை என்ன ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும், அட நான் தமிழ் படம் பாத்து நீண்ட நாளாச்சே. இன்றைக்கு பார்க்கலாம் என்று திட்டம் போட்டேன். ஆனா, அந்த படம் தொடங்க கொஞ்ச நேரம் முதல் Jeya TV ல பாலசுப்ரமணியம் நடத்தும், &#8216;என்னோடு பாட்டு பாடுங்கள்&#8217; இசை நிகழ்ச்சி இருக்குன்னு தெரிஞ்சது. அதைப் பார்க்கிற ஆசையில், படத்தை துறந்து விட்டு, அதைப் பார்த்தேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">முதலில் எனக்குப் பிடித்தமான ஒரு பாடலை ஒரு பெண் பாடினார். &#8216;காக்க காக்க&#8217; படத்திலிருந்து, &#8216;தூது வருமா தூது வருமா&#8217; பாடல். அதை அவர் பாடிய விதம் மிக அருமையாக இருந்தது. ஆனால், அவர் பாடி முடிந்ததும், அதுபற்றி பாலசுப்ரமணியம் எந்த கருத்துமே சொல்லாமல் அடுத்தவரை கூப்பிட்டது கொஞ்சம் கவலையாகி விட்டது. அத்தனை அருமையாகப் பாடினாரே, எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டாரே என்று இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த நிகழ்ச்சியில் அவர் பொதுவாகவே எந்த கருத்தையும் சொல்லவில்லை. நிகழ்ச்சியில் நடுவர்களின் முடிவில் தான் தலையிடக் கூடாதென்று நினைத்திருப்பாரோ. இடை இடையே வேறு விடயங்களை நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.</span></p>
<p><span style="color: #0000ff;">ஆறு பேர் பாடினார்கள். அனைவரும் நன்றாகப் பாடினாலும், எனக்கென்னவோ, முதலில் பாடியவர் எல்லா விதத்திலும் அருமையாக பாடியதாகவே தோன்றியது. இடையில் அதிக விளம்பரங்கள் எதுவும் வராமல் இருந்ததும் நன்றாக இருந்தது.</span></p>
<p><span style="color: #0000ff;">நடுவர்களான இசையமைப்பாளர் M.S.Visvanathan, இயக்குனர் பாலாவும், இடை இடையே தமது சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். M.S.Visvanathan சொன்ன ஒரு விடயம், ஒரு பாடல் இந்த தலை முறைக்கு என்றில்லாமல், எல்லா தலை முறையினரையும் ரசிக்க வைக்குமானால், அதுவே பாடலின் வெற்றி என்று. அதற்கு ஒரு உதாரணமும் சொன்னார். ஒரு இசைநிகழ்ச்சியில் 18 வயது ஆண் ஒருவர், அந்த சமயத்தில் 38 வயதான பாடலான, நெஞ்சில் ஓர் ஆலயம் படப் பாடல் ஒன்றை விரும்பிக் கேட்டாராம். உண்மைதான், சில பாடலகள் எத்தனை தலைமுறை கடந்தாலும், மனதில் நிறைந்திருக்கத்தான் செய்கின்றது. &#8216;எண்ணப்பறவை சிறகடித்து&#8217; பாடலும் அப்படிப்பட்ட பாடலில் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">இரண்டாம் சுற்றில், பாலசுப்ரமணியம் ஒரு பாடலின் மெட்டை இடையில் கொடுக்க, அந்த பாடலைக் கண்டு பிடித்து பாட வேண்டும். எல்லோரும் இலகுவாக கண்டு பிடித்துப் பாடினார்கள். அவர்கள் பாடும்போது பாலசுப்ரமணியமும், அவர்களுடன் இணைந்து பாடியது இன்னும் அழகாக இருந்தது. அதில கடைசிப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடலான &#8216;இளையநிலா பொழிகிறது&#8217;.</span></p>
<p><span style="color: #0000ff;">முடிவில் நான் எதிர் பார்த்தபடி முதலில் &#8216;தூது வருமா தூது வருமா&#8217; பாடிய பெண்ணே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனக்கும் மகிழ்ச்சி. இறுதியில், அந்த பெண்ணுடன் பாலசுப்ரமணியம், இன்னொரு அழகான பாடலைப் பாடினார்.</span></p>
<p><span style="color: #0000ff;">&#8216;ஓ butterfly butterfly<br />
ஏன் விரித்தாய் சிறகை வா வா<br />
ஓ butterfly butterfly<br />
ஏன் விரித்தாய் சிறகை<br />
அருகில் நீ வருவாயோ<br />
உனக்காக திறந்தேன் மனதின் கதவை&#8217;</span></p>
<p><span style="color: #0000ff;">பாடலைப் பாடியபடியே, அந்தப் பெண்ணை வாழ்த்தியும் வரிகளை மாற்றி பாலசுப்ரமணியம் பாடியது நன்றாக இருந்தது. அதுனால, முதலில் அவர் அந்த பெண்ணின் பாடலுக்கு கருத்து எதுவும் சொல்லலையே என்ற குறையும் தீர்ந்தது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<p><span style="color: #0000ff;">அந்த நிகழ்ச்சி முடிந்ததும், கலைஞர் TV யைப் போட்டால், கமலும், Jothika வும், தங்கள் தங்கள் அறைகளிலிருந்து வெளியே வந்து ஏதோ பேசிக் கொண்டார்கள். முன்னுக்கு போனது என்னவென்று புரியாததில், சரியாக விளங்கவில்லை. இருந்தாலும் கொஞ்ச நேரம் பார்த்தேன். படம் பிடிக்கலை. எழுந்து எனது வேலைகளை செய்யப் போனேன். ஆனாலும் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தபோது, &#8217;<span>உயிரிலே எனது உயிரிலே&#8217; பாடல் போனது. அட, இது ஒரு நல்ல பாடலாச்சே, அது இதில்தானா என்று நினைத்த போதுதான், &#8216;பார்த்த முதல் நாளே&#8217; பாடலும் இந்தப் படத்தில் என்பது நினைவுக்கு வந்தது. சரி, பாட்டு போகும்போது, கேட்கலாம் என்று இருந்தால், அந்த பாடல் வரவில்லை. முதலே போய் விட்டதுபோல. </span></span></p>
<p><span style="color: #0000ff;">வேலைகள் எல்லாம் முடிய, அதில் வந்து உட்கார்ந்தேன். கமல், Jothika விடம் &#8216;இனி நீயும் மாயாவும் என் சொந்தம்&#8217; என்று சொல்லிக் கொண்டிருந்தார். இனி ஒரு வேலையும் இல்லைத்தானே என்று அதிலேயே உட்கார்ந்து படம் முடியும்வரை பார்த்தேன். ஆனால் படம் பிடிக்கவில்லை. </span></p>
<p><span style="color: #0000ff;">&#8216;என்னோடு பாட்டு பாடுங்கள்&#8217; ஒவ்வொரு கிழமையும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே எழுந்து வந்து இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கேன். :) </span></p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2008/09/ennodupaaddu/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பெண்கள் vs ஆண்கள்!</title>
		<link>http://kalaiarasy.com/2007/12/malesfemales/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/12/malesfemales/#comments</comments>
		<pubDate>Sat, 01 Dec 2007 11:42:28 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/12/01/malesfemales/</guid>
		<description><![CDATA[பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார்.
1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் சம அளவில் shoping செய்து, தேவையில்லாத [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார்.</p>
<p>1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் சம அளவில் shoping செய்து, தேவையில்லாத பொருட்களை வாங்குகின்றார்கள் என்று சொல்கின்றதாம். ஆண்கள் வாங்கும் பொருட்களும், பெண்கள் வாங்கும் பொருட்களும் வேறு படலாம். ஆனால் தேவையற்ற பொருட்களை வாங்குவதில் இருபாலாரும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>2. பெண்கள் ஆண்களை விட அதிகமாக கதைக்கின்றார்களா என்பதும் ஆராயப்பட்டிருக்கின்றது. பெண்கள் நாளொன்றுக்கு 20,000 சொற்கள் கதைப்பார்கள் என்று நம்பப்பட்டு வந்ததாகவும், அது உண்மையல்ல என்றும், சராசரியாக நாளொன்றுக்கு 16,000 சொற்கள் மட்டுமே (அம்மாடியோவ், அத்தனை சொற்களா) கதைக்கின்றார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கின்றதாம். அந்த ஆராய்ச்சி தரும் அதிகப் படியான தகவல், ஆண்களும் கிட்டத்தட்ட அதே 16,000 சொற்களைப் பேசுகின்றார்கள் என்பதுதானாம். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>3. ஆண்கள் பெண்களை விட புத்திசாலிகள் என்பது பலருடைய (பல ஆண்களுடைய) கருத்து. ஆனால் உண்மையில் பெண்களும் ஆண்களும், சம அளவிலேயே புத்திசாலித் தனத்தை கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த ஆராய்ச்சி முடிவாம்.</p>
<p>4. பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் sex பற்றி நினைப்பதாகவும், ஆண்கள் வெறும் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மட்டுமே sex பற்றி நினைப்பதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவு சொல்கின்றதாம்.</p>
<p>5. ஆண்களா, பெண்களா அதிக காலம் வாழ்கின்றார்கள் என்று ஆராய்ந்த போது, பெண்களே ஆண்களை விட அதிக வாழ்க்கைக் காலத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளதாம். நோர்வேயில் பெண்களின் சராசரி வாழ்க்கைக்காலம் 81.6 ஆகவும், ஆண்களின் வாழ்க்கைக் காலம் 76.4 ஆகவும் இருக்கிறதாம்.</p>
<p>இத்தனையும் சொன்னவர் இறுதியில் பெண்களுக்கு அதிக வாழ்க்கைக் காலம் என்பதற்கு, பெண்களை நோக்கி கொடுத்த comment, &#8220;you deserve it ladies&#8221;.</p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/12/malesfemales/#comment-365">January 29, 2008</a>, <a href="http://xavi.wordpress.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://xavi.wordpress.com/');"  rel='external nofollow' class='url'>சேவியர்</a> wrote:</p><p>//பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை//</p><p></p><p>அப்படியே... பெண்கள் ஷாப்பிங் செய்யும் நேரத்தையும், ஆண்கள் ஷாப்பிங் செய்யும் நேரத்தையும் கூட ஆராய்ச்சி பண்ண சொல்லுங்களேன் :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/12/malesfemales/#comment-364">January 29, 2008</a>, கலை wrote:</p><p>சொன்னால் போச்சு. ஆனா பாருங்க, எங்க வீட்டுல, ஆண்தான் அதிக நேரம் செலவளிக்கிறார். எனக்கு அந்த பொறுமை கிடையாது. :)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/12/malesfemales/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>என் குட்டி சினேகிதி!</title>
		<link>http://kalaiarasy.com/2007/11/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/11/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Mon, 26 Nov 2007 10:38:32 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[பாசம்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/11/26/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[என் பிரியமான குட்டி சினேகிதி!
நேற்று அவசரம் அவசரமாக பஸ் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டை பூட்டி விட்டு கிளம்புவதற்காக கைப் பையினுள் வீட்டுச் சாவியை தேடினேன். மோபைல் போன், பஸ் கார்ட், சுவிங்கம், பேனா, இப்படி சின்ன சின்ன பொருட்கள் கையில் அகப்பட்டது. அத்துடன் ஒரு சின்ன காகிதத் துண்டு. இது என்னது? இப்படி கிளிந்த காகித துண்டு எனது கைப்பையுனுள் வரும் சாத்தியமில்லையே. நினைத்தபடி, அதை பார்க்க அவகாசமில்லாமல், அதை அப்படியே உள்ளே வைத்து விட்டு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><font color="#800080">என் பிரியமான குட்டி சினேகிதி!</font></strong></p>
<p><font color="#0000ff">நேற்று அவசரம் அவசரமாக பஸ் பிடிப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டேன். வீட்டை பூட்டி விட்டு கிளம்புவதற்காக கைப் பையினுள் வீட்டுச் சாவியை தேடினேன். மோபைல் போன், பஸ் கார்ட், சுவிங்கம், பேனா, இப்படி சின்ன சின்ன பொருட்கள் கையில் அகப்பட்டது. அத்துடன் ஒரு சின்ன காகிதத் துண்டு. இது என்னது? இப்படி கிளிந்த காகித துண்டு எனது கைப்பையுனுள் வரும் சாத்தியமில்லையே. நினைத்தபடி, அதை பார்க்க அவகாசமில்லாமல், அதை அப்படியே உள்ளே வைத்து விட்டு (நல்ல வேளையாய் வீசவில்லை), வீட்டுச் சாவியை தேடிப் பிடித்து, வீட்டைப் பூட்டிக் கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடி, பஸ்ஸில் ஏறியாச்சு.</font></p>
<p><font color="#0000ff">இடம் தேடி அமர்ந்ததும், மீண்டும் அந்த காகிதத் துண்டு நினைவில் வந்தது. அதை தேடி எடுத்துப் பார்த்தால், அதில் இப்படி இருந்தது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </font><br />
<a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2007/11/bestfriends.jpg" title="bestfriends.jpg"><img src="http://kalaiarasy.files.wordpress.com/2007/11/bestfriends.thumbnail.jpg" alt="bestfriends.jpg" /></a></p>
<p><font color="#0000ff">ஆஹா, என் குட்டித் தேவதையினுடைய வேலைதான் என்று எண்ணியபடியே, மறு பக்கத்தைப் பார்த்தேன். அங்கே இந்த sticker ஒட்டி இருந்தது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </font></p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2007/11/bestfrineds1.jpg" title="bestfrineds1.jpg"><font color="#0000ff"><img src="http://kalaiarasy.files.wordpress.com/2007/11/bestfrineds1.thumbnail.jpg" alt="bestfrineds1.jpg" /></font></a></p>
<p><font color="#0000ff"> <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  எனக்கு புரிந்து போனது. அன்றொருநாள், இந்த குட்டி, எனது பொறுமையை கொஞ்சம் அதிகமாகவே சோதனைக்குட்படுத்தி, என்னைக் கொஞ்சம் கோபப்படுத்திய பிறகு, அவசரம் அவசரமாக ஓடிப் போய், இரண்டு stickers எடுத்து வந்து என்னுடைய பையில் ஒட்டினாள். ஒரு smiley face sticker ஒட்டிக் கொண்டது. மற்றது ஒட்டவில்லை. ஒட்ட முடியாமல் போன அந்த மற்ற sticker தான், எனது கைப்பையினுள், அவளது சொந்தக் கையெழுத்துடன் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறது.</font></p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/11/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf/#comment-361">January 18, 2008</a>, <a href="http://snegethyj.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://snegethyj.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>சினேகிதி</a> wrote:</p><p>ahhh that's so cute :-))) உங்கட மகளா அந்தத் தேவதை?</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/11/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf/#comment-362">June 19, 2008</a>, <a href="http://premkumar.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://premkumar.blogspot.com');"  rel='external nofollow' class='url'>Premkumar</a> wrote:</p><p>வலைச்சரத்தில் உங்கள் பதிவின் சுட்டி சேர்க்கப்பட்டது</p><p>http://blogintamil.blogspot.com/2008/06/blog-post_19.html</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/11/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf/#comment-363">June 19, 2008</a>, <a href="http://tamilamudam.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://tamilamudam.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>ராமலக்ஷ்மி</a> wrote:</p><p>வலைச்சரம் சுட்டிய வழியில் வந்தேன்.</p><p>மழலை மனது மல்லிகைப் பூ போன்றது.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/11/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>வெறும் கனவா?</title>
		<link>http://kalaiarasy.com/2007/07/dream/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/07/dream/#comments</comments>
		<pubDate>Fri, 06 Jul 2007 08:03:39 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[கனவு]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நினைவில்..]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/07/06/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%be/</guid>
		<description><![CDATA[இது கனவா?
பொதுவாக நான்தான் இரவு முழுவதும் கனவுகள் காண்பதும், அதில்  நினைவிருக்கும் கனவை (அனேகமாக  கண்  விழிக்கும்போது  கண்டு  கொண்டிருந்த கனவாக இருக்கும்), அதை காலை எழுந்ததும்  சொல்லுவதும் வழக்கம். இப்போதெல்லாம் அப்படி சொல்வதை கூட விட்டு விட்டேன்.
மூன்று நாட்கள் முன்னால், வழக்கம்போல் லேட்டாக (லேட்டுக்கு காரணம் மகளுக்கும், கணவருக்கும் லீவு விட்டாச்சு) காலையில் எழுந்து வேலைக்குப் போவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். லீவுதானே, மற்றவர்கள் நன்றாக தூங்கி எழும்பட்டும் என்ற நல்லெண்ணத்தில் (நான் எழுந்து போக வேண்டியிருக்கே என்று உள்ளுக்கு கொஞ்சம் எரிச்சல்தான்) சத்தம் அதிகம் போடாமல் தயாராகிக் கொண்டிருந்தேன்.
ஆனால் கணவரும் எழுந்து வந்தார். அவர் என்னிடம் கேட்டார் &#8221;என்ன புதினம்?&#8221;. &#8217;காலங்காத்தால இது என்ன [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>இது கனவா?</strong></p>
<p>பொதுவாக நான்தான் இரவு முழுவதும் கனவுகள் காண்பதும், அதில்  நினைவிருக்கும் கனவை (அனேகமாக  கண்  விழிக்கும்போது  கண்டு  கொண்டிருந்த கனவாக இருக்கும்), அதை காலை எழுந்ததும்  சொல்லுவதும் வழக்கம். இப்போதெல்லாம் அப்படி சொல்வதை கூட விட்டு விட்டேன்.</p>
<p>மூன்று நாட்கள் முன்னால், வழக்கம்போல் லேட்டாக (லேட்டுக்கு காரணம் மகளுக்கும், கணவருக்கும் லீவு விட்டாச்சு) காலையில் எழுந்து வேலைக்குப் போவதற்கு தயாராகிக் கொண்டிருந்தேன். லீவுதானே, மற்றவர்கள் நன்றாக தூங்கி எழும்பட்டும் என்ற நல்லெண்ணத்தில் (நான் எழுந்து போக வேண்டியிருக்கே என்று உள்ளுக்கு கொஞ்சம் எரிச்சல்தான்) சத்தம் அதிகம் போடாமல் தயாராகிக் கொண்டிருந்தேன்.</p>
<p>ஆனால் கணவரும் எழுந்து வந்தார். அவர் என்னிடம் கேட்டார் &#8221;என்ன புதினம்?&#8221;. &#8217;காலங்காத்தால இது என்ன கேள்வி&#8217; என்று இந்தக்  கேள்வி ஆச்சரியத்தை தந்தாலும், அவசரமாய்  வேலைக்கு  புறப்பட  வேண்டி இருந்ததில்  ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை.   அதனால் நான் கடைசியாக கண்டிருந்த அன்றைய கனவை சொன்னேன். ஒரு பெரிய முதலையை எங்கள் வீட்டு குளியலறையில் கொண்டு வந்து கட்டி வைத்திருக்கிறோம். அந்த முதலையின் வாயே குளியல் தொட்டியை விடப் பெரிது. அது எப்படி அந்த தொட்டிக்குள் இருக்கிறதென்பதெல்லாம் தெரியாது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>நான் கனவு சொல்லும்போது &#8220;வேறு வேலையில்லை.&#8221; என்று திட்டுபவர், பேசாமல் நான் சொன்ன கனவை கேட்டுவிட்டு, அவரும் ஒரு கனவு சொன்னார். அவர் கண்ட கனவில் ஒரு பாலத்தின் அருகில் கார் விபத்து நடந்ததாகவும், அந்த காரின் ஒரு பக்க சில்லுகள் இரண்டும் மேலே எழுந்து இருந்ததாகவும் சொன்னார். நான் கனவுகளையும், நிஜமான நிகழ்வுகளையும் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை என்றதால் அப்படியே அந்த கதையை விட்டு விட்டு சென்று விட்டேன்.</p>
<p>அன்று மாலை லண்டனில் இருக்கும் ஒரு தம்பிக்கு தொலைபேசினேன். அப்போது அவர்கள் சொன்னது மிகவும் ஆச்சரியமான விடயம். அன்று காலையில் அவருக்கு எனது கணவர் கனவில் கண்டது போன்ற அதே நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. அவர் high way யில் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி, இரு சில்லுகளும் மேலெழுந்து, பாதையின் ஒரு புறம் இருந்து மறு புறத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. நல்ல வேளையாக அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பொலீஸ் அவர்களுக்கு உடனடியாக உதவிகள் செய்தார்களாம். வாகனம், முழுமையாக சரிந்து பாதையில் இழுபட்டுக் கொண்டு சென்றும்கூட, அவர்கள் உயிர் தப்பியிருப்பது மிகவும் ஆச்சரியப் படக்கூடிய விடயம் என்று சொன்னார்கள். அந்த விபத்தை நேரில் கண்ட அனைவரும் மிகவும் ஆச்சரியப் பட்டார்களாம். லண்டனில், அந்த high way யில், மிகப் பெரிய வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் அந்த காலை வேளையில் அப்படி ஒரு விபத்து நடந்தும், இவர்களது வாகனம் தவிர, வேறு எந்த வாகனமும் அடித்துக் கொண்டு சேதப்படாமல், இவர்களும் உயிர் தப்பியது மிகவும் ஆச்சரியம் என்று பொலீஸ் உட்பட அனைவரும் சொன்னதாகச் சொன்னார்கள்.</p>
<p>இதில் என்னுடைய ஆச்சரியம், எப்படி அதே போன்ற கனவு, கிட்டத்தட்ட, அதே நேரத்தில் என் கணவருக்கு வந்தது என்பதுதான். எனது பாட்டியார் இறந்த ஒருநாள் அதிகாலையில், பல மைல் தொலைவில் இருந்து படித்து வந்த எனக்கு, நானே இறந்து போனதாகவும், என்னை சுற்றி பலர் நின்று அழுவதாகவும் நான் கண்ட கனவும் இப்போ நினைவுக்கு வருகின்றது. அன்று முழுவதும் நான் என்னவென்று புரியாத ஒரு மனக் கஷ்டத்தில் இருந்ததும், அன்று மாலை, பாட்டி இறந்த செய்தி என்னை வந்து சேர்ந்ததும் இப்போதும் தெளிவாக நினைவில் நிற்கின்றது.</p>
<p>I&#8217;m not a superstitious person. ஆனாலும் இந்த கனவுகளும், தொடர்ந்த நிகழ்வுகளும் ஆச்சரியமாக இருக்கின்றது.</p>
<p>கனவுகளைப்பற்றி பேசும்போது உங்களிடம் இன்னொரு கனவுபற்றியும்  சொல்லத் தோன்றுகின்றது. சோகக் கனவுபற்றி சொன்னதால், இனி ஒரு சந்தோஷக் கனவு. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>உங்களில் யாராவது கனவில் பறந்ததுண்டா? நான் கனவுகளில் பறந்திருக்கின்றேன். யாராவது என்னை துரத்திக் கொண்டு வரும்போது, அவர்களிடமிருந்து தப்பிக்கவோ, அல்லது எனக்கு அவசரத் தேவையாக எங்கேயாவது விரைவாக செல்ல வேண்டும் என்று தோன்றும்போதோ நிலத்திலிருந்து மேலெழுந்து பறப்பேன். இறக்கை எதுவும் முளைத்திருக்காது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  . ஆனாலும் இலகுவாக பறக்க முடியும். அது கனவாகவே இருந்தாலும், மிகவும் அபூர்வமான அனுபவமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதை உணர்ந்திருக்கின்றேன்.</p>
<p>ஆனால் இப்போ நீண்ட நாட்களாக அப்படி கனவு வரவில்லை. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> </p>
<p>ஒருவேளை எந்த ஆபத்தும் எனக்கு இல்லாததாய் உணர்கின்றேனோ? அல்லது எந்த அவசரமும் இப்போது இல்லையோ தெரியவில்லை. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<hr><h2>4 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/07/dream/#comment-400">September 8, 2009</a>, சின்னம்மணி wrote:</p><p>//நானே இறந்து போனதாகவும், என்னை சுற்றி பலர் நின்று அழுவதாகவும் நான் கண்ட கனவும் இப்போ நினைவுக்கு வருகின்றது. /</p><p></p><p>உங்களுக்கு ஆயுசு கெட்டின்னு அர்த்தம்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/07/dream/#comment-404">September 18, 2009</a>, <a href="http://kalaiarasy.com/sharing/"   rel='external nofollow' class='url'>பகிர்ந்துகொள்வதற்கு சில!</a> wrote:</p><p>[...] பார்க்க விரும்பினால்?  இன்றைய கனவு, வெறும் கனவா, எனது [...]</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/07/dream/#comment-407">September 18, 2009</a>, <a href="http://kouthami.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://kouthami.blogspot.com');"  rel='external nofollow' class='url'>kanmani</a> wrote:</p><p>மனது சஞ்சலப்பட்டு எதையேனும் நினைத்துக் கவலையோ அதிக சந்தோஷமோ படும்போதுதான் கனவுகள் வருமாம்.ஆழ்மன எண்ணங்களின் நமக்கு மட்டுமே தெரியும் நிழலுருவம் தான் கனவுகள்.</p><p>ஆச்சரியப்படும்படி சில நேரம் நம் கனவுகள் நிஜங்களின் அலைவரிசையில் வந்து நம்மை வியக்க வைக்கிறது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/07/dream/#comment-408">September 19, 2009</a>, கலை wrote:</p><p>ஓ, அப்படியா? அப்படின்னா நான் எப்பவும் அதிக கவலை, அல்லது அதிக மகிழ்ச்சியில இருக்கேன்னு அர்த்தம் போல :). ஏன்னா எனக்கு மனவில்லாத நாள், அல்லது கனவில்லாத தூக்கம் இருக்கான்னே சில நேரங்கள்ல சந்தேகம் வரும். அப்படி, படுத்தால் எழும்பும்வரையில் கனவுதான் :).</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/07/dream/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>பகல் ராத்திரி!</title>
		<link>http://kalaiarasy.com/2007/07/norway8/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/07/norway8/#comments</comments>
		<pubDate>Thu, 05 Jul 2007 11:07:57 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/07/05/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[நோர்வே &#8211; 8
நோர்வேயில் இந்த நாட்களுக்கு என்ன விசேட முக்கியத்துவம்? நோர்வேயில் மட்டுமல்ல, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்கண்டினேவிய நாடுகளிலும், இந்த நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஜூன் 21 ஆம் நாள் ஒவ்வொரு வருடத்திலும் மிக நீண்ட பகல் கொண்ட நாள். நீண்ட இரவுகளைக் அதிக காலத்துக்கு கண்டு மனம் வரண்டு போயிருக்கும் மக்களுக்கு நீண்ட பகல் காலங்கள் மகிழ்ச்சி தருபவை. அதனால் நீண்ட பகல்களைக் கொண்ட இந்த கோடை காலத்தில்  சூரியன்  வானத்தில்  வந்து புன்னகைப்பதுபோல், மக்களும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நோர்வே &#8211; 8</p>
<p>நோர்வேயில் இந்த நாட்களுக்கு என்ன விசேட முக்கியத்துவம்? நோர்வேயில் மட்டுமல்ல, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்கண்டினேவிய நாடுகளிலும், இந்த நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.</p>
<p>ஜூன் 21 ஆம் நாள் ஒவ்வொரு வருடத்திலும் மிக நீண்ட பகல் கொண்ட நாள். நீண்ட இரவுகளைக் அதிக காலத்துக்கு கண்டு மனம் வரண்டு போயிருக்கும் மக்களுக்கு நீண்ட பகல் காலங்கள் மகிழ்ச்சி தருபவை. அதனால் நீண்ட பகல்களைக் கொண்ட இந்த கோடை காலத்தில்  சூரியன்  வானத்தில்  வந்து புன்னகைப்பதுபோல், மக்களும் அறிந்தவர் அறியாதவர் என்ற வேறுபாடு பார்க்காமல், எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது புன்னகைத்து செல்லும் காலமாக இருக்கும்.</p>
<p>பைபிளில் குறிப்பிடப்படும் Johannes என்பவரின் பிறந்தநாள் 24 ஜூன் என்றும், அந்த நாளை குறிப்பிடும் விதமாக, அந்த நாளுக்கு முதல் நாள்  மாலையில், அதாவது 23 ஜூன் அன்று மாலை இந்த கொண்டாட்டம் நடாத்தப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. Sankthansaften என்று குறிப்பிடுகின்றார்கள்.</p>
<p>Sankthansaften  நாளில் பகலில் இரு குழந்தைகளை மணமக்களாக அலங்கரித்து, அவர்களுக்கிடையே, விளையாட்டுத் தனமான திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவர்களை  குதிரை  வண்டிலில்  ஊர்வலமாக  அழைத்துச் செல்வார்கள்.  அந்த ஊர்வலத்தில் நிறைய மக்கள் கலந்து கொள்வார்கள் (சிறப்பிப்பார்கள் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ). இது நடந்த நேரம் நாங்கள் போய்ச் சேரவில்லை. அதனால் படம் எடுக்க முடியவில்லை. ஆனாலும் கூடியிருந்த மக்களின் ஒரு பகுதி இங்கே&#8230;</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020893.jpg" height="240" /></p>
<p>ஒரு சில நாட்கள் முன்னராக குறிப்பிட்ட இடங்களில், மிக உயரமான கோபுரங்களை கட்டுவார்கள்.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020886.jpg" height="240" /> </p>
<p>இங்கே இருக்கும் படத்தில் ஒரு  பெரிய  கோபுரமும்,  பக்கத்திலேயே  ஒரு குட்டிக் கோபுரமும் இருப்பதை காணலாம்.</p>
<p>அவற்றை அந்த நாள் மாலையில் எரிப்பார்கள்.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020895.jpg" height="240" /></p>
<p> பெரிய கோபுரத்தின் உச்சியில் ஏறி தீ மூட்டும் காட்சி.  அப்போது நேரம் மாலை 9.30.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020896.jpg" height="240" /></p>
<p>தீ வைத்த பின்னர், அவசரமாக இறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020899.jpg" height="240" /></p>
<p>உச்சியில் உள்ள கூர்மையான முனை எரிகின்றது.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020901.jpg" height="240" /></p>
<p>எரிந்து கொண்டு போகும்போது முனை கீழே விழுகின்றது, புகை கிளம்புகின்றது. அடிக்கடி நீரை அடித்து சூட்டை குறைப்பதுடன், மெதுவாக எரியும்படி பார்த்துக் கொள்கின்றார்கள்.</p>
<p>அதற்கு எங்கள் ஊரில்போன்று பழங்கதைகளும் உள்ளன. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />    ஊரில்,  மலைகளில்  வந்து தங்கி இருக்கும்  தீய  சக்திகள்,  பேய்,  பிசாசு  போன்றவை, இந்த  பெரிய  தீப்பிழம்பைக்  கண்டு  ஓடிப்  போய்  விடுமாம்.  தற்போது யாரும் இந்த  கதைகளை நம்புவதில்லை என்றாலும், ஒரு  மகிழ்ச்சியான  பொழுது  போக்காகவும்,  முழு  பகலைக்  கொண்ட நாளில் ஒரு கொண்டாட்டமாகவும் இதை   தொடர்ந்து  செய்து  வருகின்றார்களாம். அந்த கோபுரம் எரிக்கும் நாளில் , ஜூன் 23 ஆம் திகதி, கோபுரம் இருக்கும் இடத்தை சுற்றி கூடாரங்கள் எல்லாம் போட்டு, ஒரு திருவிழா மாதிரி அமைத்து வைத்திருப்பார்கள். பல இடத்திலிருந்தும் அங்கே வந்து கூடி, குடித்து, கும்மாளமடிப்பார்கள். மாலை 9.30, 10 மணிக்கு அந்த கோபுரம் எரிக்கப்படும். அதன் பின்னர் இரவிரவாக (இரவு எங்கே வருது, அதுதான் வெளிச்சமாக இருக்குமே <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />   ) சுற்றித் திரிவார்கள்.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020937.jpg" height="240" /></p>
<p>தீ அந்த மாலை (இரவு) வேளையில் அழகாக கொழுந்து விட்டு எரிகின்றது.</p>
<p><a href="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020941.jpg"><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020941.jpg" height="240" /></a></p>
<p>நேரம் நடு இரவு 12 மணி. இன்னும் தெளிவான வெளிச்சம் இருப்பதை பார்க்கலாம்.</p>
<p>எங்கள் நாட்டில் சில கோவில்களில், சிவராத்திரி நாளன்று இப்படி  கோபுரம் கட்டி எரிப்பதையும், இரவிரவாக  மக்கள்  விளித்திருந்து  கொண்டாடுவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கே சிவராத்திரி, இங்கே அது &#8220;பகல்ராத்திரி&#8221;. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/07/norway8/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மொழி!</title>
		<link>http://kalaiarasy.com/2007/06/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/06/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Mon, 11 Jun 2007 09:52:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/06/11/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[மொழி!

நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.மெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா மெளனமொழியில் பேசும்போது, அதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அதை விளங்கிக் கொள்ளும்படி எவரும் பதில் கூட கொடுக்காமல் இருந்தாலும், நம்மால் அர்ச்சனா பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது, மொழிப் படத்தில், மெளனத்திற்கு கிடைக்கும் வெற்றி.
படத்தில் அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள். கதையைக் கெடுக்காமல், கூடவே இணைந்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#6600cc;"><strong>மொழி!<br />
</strong></span><br />
<span style="color:#3333ff;">நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.</span><span style="color:#3333ff;">மெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா மெளனமொழியில் பேசும்போது, அதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அதை விளங்கிக் கொள்ளும்படி எவரும் பதில் கூட கொடுக்காமல் இருந்தாலும், நம்மால் அர்ச்சனா பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது, மொழிப் படத்தில், மெளனத்திற்கு கிடைக்கும் வெற்றி.</p>
<p>படத்தில் அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள். கதையைக் கெடுக்காமல், கூடவே இணைந்து வரும் நகைச்சுவை நன்றாக உள்ளது. விஜி தனது காதலை வெளிப்படுத்தும் விதம் இரசிக்கும்படியாக இருந்தது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . பெண்ணின் பெற்றோரிடம், &#8220;நீங்க நாளைக்கே முடிவு சொல்லணும் னு அவசியமில்லை, இன்னைக்கே கூட சொல்லிடலாம்.&#8221; என்று சொல்வது நன்றாக இருந்தது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசைக்கு என்ன அர்த்தம் என்ற நண்பரின் கேள்விக்கு, அர்ச்சனாவின் பதில் மனதைத் தொட்டது. வாய்பேச முடியாத, காதும் கேட்காத அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசையும் ஒரு மொழி. தனக்குத் தெரியாத மொழிகளில் ஒன்றாக இசையையும் சேர்த்துக் கொண்டு, அதை எதிர்மறையான பாதிப்பு எதுவுமின்றி சாதாரணமாக சொல்லும் மனப்பக்குவம் மனதைத் தொட்டது.</p>
<p>படத்தின் சில இடங்கள் நெகிழ்வைத் தந்ததுடன், தொண்டை அடைக்க (வலிக்க) வைத்தது. பூ விற்கும் ஒரு சின்னக் குழந்தையுடன், கார்த்திக் மெளன பாஷையில் பேசியதும், முழுப் பூவையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்வதும் தொண்டையில் இருந்த நீரை கண்ணுக்கு இடம் மாற்றியதால், தொண்டை வரண்டு வலித்தது. ஏனென்று தெரியவில்லை.</p>
<p>மேலும், மகன் இறந்ததை ஏற்றுக் கொள்ளாமல், மகன் இறந்த காலத்திற்கு முன்னைய காலத்தில் வாழும் proffessor செருப்பு வாங்கிக் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டதும், கார்த்திக் வாங்கிக் கொடுத்ததை சந்தோஷத்துடன் மற்றவரிடம் காட்டி மகிழ்வதைக் கண்டு கார்த்திக் மன நிறைவுடன் செல்வதும், கடைசியில் மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கார்த்திக்கிடம் சொல்லும்போது, அவரை உண்மையை சொல்லி உணர வைத்து, அவரை கார்த்திக் வாய்விட்டு அழ வைக்கும் காட்சி, எனக்கும் கண்ணில் நீரை வரவழைத்தது.</p>
<p>காதுக்கு இனிமையான, உணர்வுக்கு அருமையான பாடல்கள்.</p>
<p>ஆனாலும், அந்த &#8216;பேசா மடந்தையே&#8217; என்ற பாடலுக்கு சிவப்பு உடையணிந்த பெண்கள் வந்து அவசியமே இல்லாமல் நடனம் ஆடிவிட்டுப் போவது பொருத்தமில்லாமல் இருக்கின்றது.</p>
<p>எனக்கு தமிழில் மிகப் பிடித்த இரண்டு சொற்களுக்கு இந்த படத்தில் இருக்கும் முக்கியத்துவம் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்துப் போகச் செய்திருக்கின்றது. அவை<strong> &#8216;மொழி&#8217;, &#8216;மெளனம்&#8217;.</strong><br />
<span style="color:#3333ff;"></span><br />
<span style="color:#3333ff;"><strong>அன்புக்கு மொழி அவசியமில்லை!!!<br />
</strong></span><br />
<span style="color:#6600cc;">பி.கு&gt; இந்த படத்தை ஒரிஜினல் VCD யில் அல்லாமல் திருட்டுத் தனமாக தான் பார்த்ததும் அல்லாமல், என்னையும் பார்க்க வைத்த ரவிசங்கருக்கு நன்றி! படத்தை பார்ப்பதில் இருந்த ஆர்வம் குற்றம் செய்கின்றோம் என்ற எண்ணத்தை மறக்கச் செய்து விட்டது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<p></span></p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/06/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/#comment-338">June 11, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>நடிகர்களின் பெயரைச் சொல்லாமல் பாத்திரங்களின் பெயரைக் கொண்டு எழுதி இருப்பதிலேயே படம் எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. இது போன்று பாத்திரங்களைப் பாத்திரங்களாகப் பார்க்கச் செய்யும் படங்கள் அடிக்கடி வருவதில்லை. <br/><br/>நெஞ்சைத் தொட்டது, தொண்டை அடைத்தது, கண்ணீர் முட்டியதுன்னு over senti ஆகிடுறீங்களே ;) இதை விட இன்னும் பல மடங்கு மனதை உருக்கும் படங்களை எல்லாம் அப்புறம் எப்படிப் பார்ப்பது?<br/><br/>//பி.கு> இந்த படத்தை ஒரிஜினல் VCD யில் அல்லாமல் திருட்டுத் தனமாக தான் பார்த்ததும் அல்லாமல், என்னையும் பார்க்க வைத்த ரவிசங்கருக்கு நன்றி! படத்தை பார்ப்பதில் இருந்த ஆர்வம் குற்றம் செய்கின்றோம் என்ற எண்ணத்தை மறக்கச் செய்து விட்டது. :)//<br/><br/>ஏற்கனவே என் பதிவில் ஒரு வாக்குமூலம் இருக்கிறது. இதையும் சேர்த்து படத் தயாரிப்பாளருக்கு அனுப்பினால் நாட்டுக்கு ஒருவராய் கம்பி எண்ணலாம் :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/06/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/#comment-339">June 11, 2007</a>, கலை wrote:</p><p>//நெஞ்சைத் தொட்டது, தொண்டை அடைத்தது, கண்ணீர் முட்டியதுன்னு over senti ஆகிடுறீங்களே ;) இதை விட இன்னும் பல மடங்கு மனதை உருக்கும் படங்களை எல்லாம் அப்புறம் எப்படிப் பார்ப்பது?//<br/><br/>அது என்னமோ தெரியலை. சில சமயம் இப்படித்தான். மத்தவங்க கவலையோட பார்க்கிற சில காட்சிகள் என்னை அதிகம் பாதிக்காது. ஆனால் மத்தவங்க பெருசா எடுத்துக்காத சின்ன சின்ன விஷயங்கள் ரொம்பவும் பாதிக்கும். ஏன்னு தெரியாது. வருகின்ற அழுகையை உள்ளேயே அடக்கி வைக்க முயற்சித்தால் தொண்டை வலிக்கும். <br/><br/>பல மடங்கு மனதை உருக்கும் படங்கள் பார்க்கும்போது, பக்கத்தில் இருப்பவர், யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று அழ ஆரம்பித்து விடுவேன்.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/06/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நகரில் அலைந்தோம்!</title>
		<link>http://kalaiarasy.com/2007/05/city/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/05/city/#comments</comments>
		<pubDate>Thu, 31 May 2007 14:11:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/05/31/%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[நேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13 வருடங்களாக, இவ்வளவு அண்மையில் இருந்த இடத்தை சரியாகப் பார்க்காமலும், அதன் சரித்திர வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருந்து விட்டேனே என்பது கொஞ்சம் எனக்கே விநோதமாக இருந்தது. ஆனால் நான் பரவாயில்லை. சில பேர்கன்வாசிகளே, இந்த சரித்திர வரலாற்றை நேற்றுத்தான் சரியாக தெரிந்து கொண்டதாக கூறியபோது, அட, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13 வருடங்களாக, இவ்வளவு அண்மையில் இருந்த இடத்தை சரியாகப் பார்க்காமலும், அதன் சரித்திர வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருந்து விட்டேனே என்பது கொஞ்சம் எனக்கே விநோதமாக இருந்தது. ஆனால் நான் பரவாயில்லை. சில பேர்கன்வாசிகளே, இந்த சரித்திர வரலாற்றை நேற்றுத்தான் சரியாக தெரிந்து கொண்டதாக கூறியபோது, அட, நாம பரவாயில்லையே என்று தோன்றியது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>தொடரின் கடைசிப் பகுதியில், கடைகோடித் தமிழன் &#8220;இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே&#8221; என்று முன்மொழிய, அதை பொன்ஸ் வழி மொழிந்திருந்தார். இன்னும் கொஞ்சம் எழுதுவதன் மூலம், அவர்கள் ஆசையையும் கொஞ்சம் பூர்த்தி செய்யலாமே என்று தோன்றுகின்றது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>நேற்று மாலை Byen med paraply யில் (Byen med paraply = The town with umbrella = Bergen) வழிகாட்டிகளின் துணையுடன் ஒரு சின்ன Byvandring = town wandering = நகர அலைச்சல் = நகர் உலா <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  க்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலில் பேர்கனில் இருப்பவர்களுக்கு நகரத்தில் &#8216;என்னத்தை பெருசா சுற்றிக் காட்டப் போறாங்க&#8217; என்று ஒரு சின்ன ஏளனத்தோடு நினைத்தேன். இருந்தாலும், &#8216;அப்படி என்னதான் காட்டுறாங்க பார்ப்போமே&#8217; என்ற எண்ணத்தில் போனேன். போனதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. நகர் சுற்றிப் பார்த்து முடிந்ததும், இரவு உணவும் இருக்கு என்று சொல்லியிருந்தார்கள் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . போய் வந்த பின்னர் இத்தனை அருகில் இருந்தும், எவ்வளவு விஷயம் இத்தனைநாள் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது.</p>
<p>நேற்று நல்ல காலநிலை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்தும், அந்த நேரத்தில் மழையும், குளிரும் ஆரம்பித்து விட்டது. பேர்கனில் இருந்துகொண்டு மழைக்குப் பயந்தால் முடியுமா என்று விட்டு அனைவரும் நடக்கத் தொடங்கியாச்சு. நல்ல காலநிலையை எதிர் பார்த்திருந்ததால், மழைக்கேற்ற, குளிருக்கேற்ற ஆடைகள், காலணிகள் அணியாததால், குளிரில் நடுங்கி, விறைத்துப் போக வேண்டி வந்து விட்டது. ஆனாலும் வழிகாட்டியின் சுவாரசியமான தகவல்களைக் கேட்டுக் கொண்டே நகர் அலைந்து முடித்தாயிற்று. அந்த சுவாரசியமான தகவல்கள் அடுத்த நோர்வே -7 பதிவில் வரும்.</p>
<p>நம்ம பேர்கன் நகரத்துக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. The city with Rhododenrons. பேர்கன் நகரின் மிதமான காலநிலை, ஈரப்பதன் என்பன இந்த Rhododenrons க்கு மிகவும் உகந்ததாக அமைந்திருப்பதால், வசந்த காலத்தில் இந்த பூக்கள் பேர்கன் நகரின் பல பகுதிகளிலும் சிரித்துக் கொண்டிருக்கும்.</p>
<p><a href="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/Rl7eCO1lxNI/AAAAAAAAAHk/c6mjdWOEAr4/s1600-h/rhododenrons.jpg"><img border="0" src="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/Rl7eCO1lxNI/AAAAAAAAAHk/c6mjdWOEAr4/s320/rhododenrons.jpg" style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" /></a><br />
நமது நகர் அலைச்சல் முடிந்ததும், மிக தொன்மையான கட்டடம் ஒன்றின் ஒரு பகுதியில், வரலாற்றுப் பதிவுகளை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பகுதியில் இரவு உணவை அருந்தினோம்.</p>
<p>சரி வரலாறு அடுத்த பகுதியில் வரும். அப்போ இந்த பதிவு எதுக்கா? சும்மா ஒரு முன்னோட்டம்தான் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/city/#comment-336">June 1, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>எப்பவும் நாம இருக்க ஊர்ல உள்ள, அருகில் உள்ள விசயங்களைத் தான் பார்க்காம அசட்டையா இருந்திடுறோம். ஊர்ல குடுமியான்மலை, சித்தன்னவாசல் இரண்டு பழமையான இடங்கள் ரொம்ப பக்கத்தில் இருக்கு. ஆனா, இன்னும் போய் பார்க்கலை. போன மாசம் தான் லைடன்ல ஒரு guided tour போனேன். நாம தினம் தினம் போகிற சாலைல இத்தனை வரலாறாற்று ஆச்சர்யமா இருந்தது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/city/#comment-337">June 1, 2007</a>, மலைநாடான் wrote:</p><p>கலை!<br/>நல்லா(த்தான்)அலையிறியள் போல. :))<br/><br/>ரவி!<br/>சித்தன்ன வாசலுக்குப் பக்கத்திலயா நீங்க..! பாத்துக்கலாம்:)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/05/city/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
