<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உயிர்ப்பு &#187; ரசித்தவை</title>
	<atom:link href="http://kalaiarasy.com/category/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kalaiarasy.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 24 Jun 2010 09:10:25 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>இது ஒரு பனிக்காலம்!</title>
		<link>http://kalaiarasy.com/2010/01/life-in-norway/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comments</comments>
		<pubDate>Mon, 25 Jan 2010 09:15:37 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=582</guid>
		<description><![CDATA[இது ஒரு அழகான பனிக்காலம்! 
நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.

அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை   . வேறொன்றுமில்லை. ஊரில் அதி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #993366;"><strong>இது ஒரு அழகான பனிக்காலம்! </strong></span></p>
<p><span style="color: #0000ff;">நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.</span></p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/IMAG0071.jpg"><img class="aligncenter size-medium wp-image-593" title="IMAG0071" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/IMAG0071-300x200.jpg" alt="" width="300" height="200" /></a></p>
<p><span style="color: #0000ff;">அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  . வேறொன்றுமில்லை. ஊரில் அதி குறைந்த வெப்பநிலை காரணமாக கடல்நீரேரிகளின் மேல் மட்ட நீரில் 15 cm ஐ கடின உறைபனியாகி விட்டிருக்கிறது. அதனால், நீரின் மேல் நடக்கலாம், ஓடலாம், நடனம் செய்யலாம். Skating, skiing, cycling எது வேண்டுமானாலும் செய்யலாம். மாநகர சபையினர் கடல்நீரேரியை சோதித்துப் பார்த்து, அதன்மேலாக நடப்பது பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏதாவது நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள் <img src="http://www.ularal.com/wp-includes/images/smilies/icon_smile.gif" alt=":)" /> . ஏரியின் சில இடங்கள் உறைபனியின் கடினத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த எந்த இடமென்பது சரியாகப் புரியவில்லை <img src="http://www.ularal.com/wp-includes/images/smilies/icon_smile.gif" alt=":)" /> . கடல்நீரேரி முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்த பெரீஈஈஈய விளையாட்டு மைதானம்போன்று அழகாக இருக்கிறது. </span></p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165.jpg"><img class="aligncenter size-medium wp-image-601" title="CIMG1165" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p><span style="color: #0000ff;">வெண்பனி கொட்டிய நிலையில் மரங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. விளக்குக் கம்பங்கள், சுவர்கள், வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளைத் தொப்பியணிந்து அழக்காக இருக்கின்றன.</span></p>
<p><span style="color: #0000ff;"><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1994.jpg"><img class="aligncenter size-medium wp-image-594" title="CIMG1994" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1994-300x225.jpg" alt="" width="300" height="225" /></a><br />
</span></p>
<p><span style="color: #0000ff;">நாங்கள்தான் இந்த குளிர் காலத்தை குறை சொல்கின்றோம். இந்தக் குளிர் காலத்தையும் மிகவும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நோர்வே மக்கள் கடந்து செல்கிறார்கள். அன்றைக்கு கூட வேலை செய்பவர், தானும், மகளும் மலைக்குப் போய் பனிச்சறுக்கல் செய்யப் போவதாய்க் கூறி விடுமுறை எடுத்துப் போகின்றார். நேற்று இன்னொருவர், தனது கணவரும் சினேகிதர்களும், உறைபனியால் மூடியிருக்கும் குளங்களில் மீன் பிடிக்கப் போய் விட்டார்கள் என்கிறார். உறைபனியை துளைத்து, துவாரமிட்டு, அதனூடாக மீன் பிடிக்கும் கொக்கியை செலுத்தி, கீழே நீரில் உற்சாகமாக வளையவரும் மீன்களைப் பிடிக்கப் போகிறார்கள். அத்துடன் உறைபனியில் குகை செய்து, அதற்குள்ளே படுக்க வேறு போகின்றார்களாம்.</span></p>
<p><span style="color: #0000ff;">அட எங்கட வீட்டுல இருக்கிற 2 முயல்களுக்கு இந்த பனிநிலமை மிகவும் பிடித்திருக்குப் போல இருக்கு. மிகவும் உற்சாகத்துடன் பனியின் மேல் ஓடித் திரிகின்றன. சுரங்கம் அமைத்து ஒளித்து விளையாடுகின்றன. ஓய்வாக இருக்கும்போது கூட, குளிர் படாமல் கூட்டினுள் சென்று இருக்காமல் பனியின் மேலேயே உட்கார்ந்து கொள்கின்றன.</span></p>
<p><span style="color: #0000ff;"><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG2015.jpg"><img class="aligncenter size-medium wp-image-595" title="CIMG2015" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG2015-300x225.jpg" alt="" width="300" height="225" /></a><br />
</span></p>
<p><span style="color: #0000ff;">Bergen நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம். சுற்றி மலைகள் இருப்பதாலும், அதி குறைந்த வெப்பநிலை, தற்போதைய ஈரப்பதன் காரணமாகவும் மோட்டார் வண்டிகள் வெளிவிடும் புகை மேலெழுந்து செல்ல முடியாமல் சூழல் மாசடைந்து இருப்பதாகக் கூறி, மோட்டார் வண்டிகளை நகரினுள் ஓட்டி வருவதில் பல கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்கள். தொலைவில் உள்ள சிறிய ஊர்களில் மோட்டார் வண்டிகளை நிறுத்திவிட்டு, நகரினுள் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பேருந்து தரிப்பு நிலையத்தில் இரு வெளிநாட்டினர் (ஆசியா, ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த இருவர்) பேசிக் கொண்டார்கள். ஒருவர், மற்றவரிடம் சொன்னது “எங்கள் நாட்டில் இதனைவிட எத்தனையோ மடங்கு வளிமண்டல மாசு இருக்கிறது. இதற்குப் போய் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள்”.  மக்களின்மேல் முழு அக்கறையுடன், சூழல் மாசைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் ஒரு நாட்டில் இருப்பதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.</span></p>
<p><span style="color: #0000ff;"> இத்தனை அழகுக்கும், திருப்திக்கும் நடுவில், இடை இடையே, &#8216;இன்னும் எத்தனை காலம்தான் வாழலாம் இந்த நாட்டிலே?&#8217; என்ற கேள்வி எழுந்துள்ளது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . காரணம் வேறொன்றுமில்லை. குளிர்க் கொடுமைதான். இந்த குளிர்காலமும், அதில் இருக்கும் இருளும், குளிரும் இல்லாவிட்டால்,  நோர்வே போன்ற நாட்டில் தாராளமாக எவ்வளவு காலமும் வாழலாம் என்பேன். ஆனால், குளிர்க் கொடுமை தாங்கவில்லை.</span></p>
<p><span style="color: #0000ff;">பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர். அன்று ஒருநாள் காலையில ‘அட உதில ரெண்டடிதானே&#8217; என்றெண்ணி, வீட்டிலிருந்து garage க்கு கையில கையுறை போடாமல் போனேன். தவிர கையுறை போடமுடியாமல், கையில் ஒரு காயம் வேறு. ஆனால், கொஞ்ச நேரத்தில், கையெல்லாம் விறைச்சு, விரல் நுனியெல்லாம் வலிக்கத் தொடங்கி விட்டது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . இன்னுமொருநாள் கையுறை போட்டிருந்தும் விரல் நுனியெல்லாம் நீலமாகி விட்டது. &#8216;என்ன தவறு செய்தோம் என்று இந்த தண்டனையோ&#8217; என்று எண்ணத் தொடங்கி விட்டேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">அது மட்டுமா, பாதையில் நடந்து செல்லவே பயமாக இருக்கு. காரணம் உறைபனியால், பாதைகள் வழுக்குது. அன்றைக்கு ஒரு பெண் இப்படி வழுக்கி, பேருந்தின் கீழே விழ, ஓட்டுனர் அதை கவனிக்காமல் பேருந்தை எடுக்க, பெண் கீழேயே நசுங்கி இறந்து போனார். பேர்கன் மலைநாடாக இருப்பதால், வளைவுகள், நெளிவுகள் கொண்ட ஒடுங்கிய பாதைகள் வேறு.</span></p>
<hr><h2>7 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-522">January 25, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>சுவாரசியமாக இருந்தது வாசிக்க! பகிர்வுக்கு நன்றி!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-523">January 25, 2010</a>, <a href="http://kouthami.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://kouthami.blogspot.com');"  rel='external nofollow' class='url'>கண்மணி</a> wrote:</p><p>//பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர்//</p><p>இங்கு மட்டுமில்லை கலை உலகின் பல்வேறு பகுதியிலும் இந்த வருடம் அளவுக்கதிகமான குளிர்.இந்தியாவில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யுமளவு டெல்லியில் குளிர்.</p><p>ஹூம் எல்லாம் நமக்கு நாமேத் தேடிக் கொண்ட வெப்பமயமாக்கல்தான் தோழி!</p><p></p><p>இருந்தும் படங்களை இரசித்தேன்;))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-524">January 25, 2010</a>, KarthigaVasudevan wrote:</p><p>சுவாரஸ்யமா இருக்குங்க படிக்க...பகிர்வுக்கு நன்றி</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-534">February 9, 2010</a>, கலை wrote:</p><p>பின்னூட்டங்களுக்கு நன்றி. ஒரு சினேகிதியினுடைய வீட்டில், இரவில் கதவை மூடி பனிவிழுந்து உறைந்து போனதில், காலையில் கதவைத் திறக்க முடியாமல், சன்னல் வழியாக ஏறி குதித்து, காலையில் வேலைக்குப் போனார்களாம் :). இப்படி இருக்கு கதை.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-539">February 23, 2010</a>, <a href="http://kalaiarasy.com/2010/02/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%8b-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81/"   rel='external nofollow' class='url'>அழகோ அழகு!</a> wrote:</p><p>[...] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த [...]</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-607">May 21, 2010</a>, Baskaran wrote:</p><p>உங்கள் பதிவுகள் பார்த்தேன். திரைப்படம் - கதைகள் - இயற்கை - மனித உறவுகள் பற்றியெல்லாம் உங்கள் எண்ணங்களை தூவியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் செயற்கைத்தனமற்ற இயல்பு நடையும் அசுற்றிவளைக்காத உடனடித் தன்மையும் காணப்படுகிறது. இந்த அம்சங்களை பின்னாளில் புகழீட்டிய எழுத்தாளர்களாக மாறுகின்ற பலர் இழந்து விடுவதுண்டு. அதனால் அவ் எழுத்துக்கள் வெளிப்படைத் தன்மையற்ற வறண்ட அலங்காரங்களாகிவிடுகின்றன.  நீங்கள் உங்கள் உங்கள் இதே இயல்பினை இழக்காது தொடவேண்டுமென்பதே என் ஆசை.</p><p>திரைப்</p><p></p><p>படங்களில் ஆர்வமுள்ள உங்களுக்கு - பிளாக் என்ற ஹிந்திப்படம் - அமிர்தாபச்சன் நடித்தது - பாருங்கள். நானும் ஒரு திரைக்கதை எழுத்தாளன். இரு ஆங்கில திரைக்கதைகள் எழுதி அதில் ஒரு குறும் திரைப்படத்தைப் படமாக்க முனைந்துகொண்டிருக்கிறேன். -  பாஸ்கரன்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-614">September 3, 2010</a>, <a href="http://kalaiarasy.wordpress.com/2010/09/03/beautiful/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://kalaiarasy.wordpress.com/2010/09/03/beautiful/');"  rel='external nofollow' class='url'>அழகோ அழகு! | உயிர்ப்பு</a> wrote:</p><p>[...] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த [...]</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/01/life-in-norway/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>வாசிப்பு!</title>
		<link>http://kalaiarasy.com/2009/11/reading/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/11/reading/#comments</comments>
		<pubDate>Fri, 06 Nov 2009 23:45:24 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=424</guid>
		<description><![CDATA[எனது வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. முன்பானால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மாட்ட்டேன். இப்போதோ நாட்கணக்கு, வாரக்கணக்கு, மாதக் கணக்கு என்று ஆகிறது  . நேரமின்மை, அதிகரித்துள்ள பொறுப்புகள் விரும்பியபடி வாசிக்க முடியாமல் செய்கிறது.
பள்ளிக் காலத்தில், இன்னதுதான் என்றில்லாமல், கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிப்பேன். ஒரு மாமா வீட்டுக்குப் போக மிகவும் விருப்பம். போனால் அங்கேயே சில நாட்கள் தங்கித்தான் வீட்டுக்குத் திரும்புவேன். காரணம் அவரிடம் அளவு கணக்கில்லாமல் புத்தகங்கள் இருப்பதுதான். அவற்றை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எனது வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. முன்பானால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மாட்ட்டேன். இப்போதோ நாட்கணக்கு, வாரக்கணக்கு, மாதக் கணக்கு என்று ஆகிறது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . நேரமின்மை, அதிகரித்துள்ள பொறுப்புகள் விரும்பியபடி வாசிக்க முடியாமல் செய்கிறது.</p>
<p>பள்ளிக் காலத்தில், இன்னதுதான் என்றில்லாமல், கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிப்பேன். ஒரு மாமா வீட்டுக்குப் போக மிகவும் விருப்பம். போனால் அங்கேயே சில நாட்கள் தங்கித்தான் வீட்டுக்குத் திரும்புவேன். காரணம் அவரிடம் அளவு கணக்கில்லாமல் புத்தகங்கள் இருப்பதுதான். அவற்றை வாசிப்பது போதாதென்று, பொருட்கள் சுற்றி வரும் காகிதங்களையும் நான் எடுத்து வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அங்கிருக்கும் ஆச்சி சொல்லுவா, ”எனக்கு உன்னைப் பார்க்க பொறாமையாய் இருக்கு பிள்ளை” என்று. காரணம் அவவுக்கு வாசிக்க தெரியாது என்பதுதான்.</p>
<p>சரி, எதுக்கு இந்த முன்னோட்டம் இப்போ? <span style="color: #993366;"><strong><a href="http://aalamaram.blogspot.com/">திரு</a></strong></span> எழுதிய ‘திரை கடலோடியும் துயரம் தேடு&#8217; வாசித்தேன். நிறைய தரவுகளுடன், ஆராய்ந்து புலம்பெயர் மக்களின் வாழ்வைப்பற்றி எழுதியிருக்கிறார். அதையெல்லாம் வாசித்தபோதுதான், மக்களின் எத்தனை பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல் வாழ்கிறோம் என்று இருந்தது. ஐரோப்பிய அரசாங்கங்கள் இத்தனை தூரம் எத்தனையோ புலம்பெயர் மக்களுக்கு துன்பம் கொடுக்கிறது என்பது ஓரளவு எதிர் பாராதது. நமக்கு அந்த துன்பங்கள் நேராமையால், இதை எதிர் பார்க்கவில்லை போலும்.</p>
<p>ஏன் மக்கள் புலம் பெயர்கிறார்கள் என்பதில் ஆரம்பித்து, இறுதியில் புலம்பெயர்கிறவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்ட திட்டங்கள், அறிவுரைகளுடன் முடித்திருக்கிறார்.</p>
<p>இனி மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.</p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/11/reading/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சுதந்திர உணர்வு!</title>
		<link>http://kalaiarasy.com/2009/08/indepedant-feeling/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/08/indepedant-feeling/#comments</comments>
		<pubDate>Fri, 21 Aug 2009 10:12:20 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[நினைவில்..]]></category>
		<category><![CDATA[பெண்ணியம்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[விடுமுறை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=263</guid>
		<description><![CDATA[ஒருநாள் எனது சினேகிதி ஒருத்தியிடமிருந்து ஒரு ஆச்சரியமான மின்னஞ்சல். எனக்கு மட்டுமல்லாமல், எம்மிருவரதும் பொது சினேகிதிகள் மற்றும் நால்வருக்கும் சேர்த்தே எழுதப்பட்டிருந்தது.
அதில் அவள் கேட்டிருந்தது, நாமெல்லோரும் கேரளாவுக்கு ஒரு பயணம் ஒழுங்கு செய்து போய் வரலாமா என்பதுதான். கேரளாவுக்கு பயணம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான். ஆனால் அவள் சொல்லியிருந்தது, குடும்பத்தை விட்டு விட்டு, தனியாக நாங்கள் சினேகிதிகள் மட்டும் போய் வர வேண்டும். திருமணம், குழந்தை, குடும்பம் என்று ஆன பிறகு, இப்படி தனியாக, அதுவும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒருநாள் எனது சினேகிதி ஒருத்தியிடமிருந்து ஒரு ஆச்சரியமான மின்னஞ்சல். எனக்கு மட்டுமல்லாமல், எம்மிருவரதும் பொது சினேகிதிகள் மற்றும் நால்வருக்கும் சேர்த்தே எழுதப்பட்டிருந்தது.</p>
<p>அதில் அவள் கேட்டிருந்தது, நாமெல்லோரும் கேரளாவுக்கு ஒரு பயணம் ஒழுங்கு செய்து போய் வரலாமா என்பதுதான். கேரளாவுக்கு பயணம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான். ஆனால் அவள் சொல்லியிருந்தது, குடும்பத்தை விட்டு விட்டு, தனியாக நாங்கள் சினேகிதிகள் மட்டும் போய் வர வேண்டும். திருமணம், குழந்தை, குடும்பம் என்று ஆன பிறகு, இப்படி தனியாக, அதுவும் குடும்பமில்லாமல், மேலும் தொலை தூரப் பயணம் சினேகிதிகளுடன் சேர்ந்து போக வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது, சாதாரண எண்ணங்களிலிருந்து நிச்சயமாய் வேறுபட்டுத் தோன்றியது. அவள் இருப்பது Australia. நானிருப்பதோ நோர்வே. மற்ற சினேகிதிகள் இருப்பதோ கனடா. இப்படி எல்லோரும் கூட்டாக போக வேண்டும், எமது பழைய காலத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற அவளது எண்ணம், ஆசை, அந்த நாட்களை மீண்டும் வாழ அவளுக்கு உள்ள ஆசையைக் காட்டியது.</p>
<p>யோசித்துப் பார்த்ததில் எனக்கும் அப்படி ஒரு பயணம் செய்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், எனது குழந்தையின் வயது, விடுமுறை காலத்தில் உள்ள வேறுபாடு காரணமாக அந்த திட்டத்தில் இப்போதைக்கு பங்கேற்க முடியவில்லை என்று (வருத்தத்துடன்) எழுதினேன். மற்ற சினேகிதிகள் இதற்கு என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. பொதுவான மடல் எதுவும் வரவில்லை. எவரும் இதில் இணைந்து கொள்ளாததில் அவள் கொஞ்சம் மன வருத்தம் அடைந்திருப்பாள் என்றே தோன்றியது. காரணம் அவள் மிகவும் உற்சாகத்துடன் இந்த பயணம்பற்றி எழுதி இருந்தாள். ஆனால் அதில் எவரும் இணைந்து கொள்ளவில்லை. எனக்கும் இது கொஞ்சம் மன வருத்தமாய் இருந்ததுபோலவே தோன்றுகிறது.</p>
<p>அதன் பிறகு நீண்ட நாட்களாய் அவளிடமிருந்து மடல் எதுவும் வரவில்லை. பிறகு திடீரென்று மீண்டும் ஒரு மடல். அது தனது adventure trip பற்றின மடல். மிகவும் விரிவாக அந்த மடல் இருந்தது.</p>
<p>அதில் தான் மட்டும் தனியாக, எவருடைய எந்த சிறு உதவியுமில்லாமல் ஒரு பயணம் ஒழுங்கு செய்து போக வேண்டும் என்று தோன்றியதாம். காரணம் திருமணத்தின் பிறகு, பல விடயங்களில் யாரையாவது (முக்கியமாக கணவனை) சார்ந்தே இருப்பது போன்ற எண்ணம். திருமணத்தின் முன்னர், துணிச்சலுடன் செய்த பல விடயங்கள், தானாக தனித்து திட்டமிட்டு, முடிவெடுத்து வெற்றிகரமாக செயற்படுத்திய விடயங்கள் எதையுமே தற்போது செய்ய முடியாதது போன்ற ஒரு பிரமை. எதை செய்வதாக இருந்தாலும், வேறொருவரிடம் கேட்டு, அதைப்பற்றி ஆராய்ந்து, முடிவெடுத்து&#8230;. இவையில்லாமல் முன்புபோலவே இப்போதும் தனித்து செயற்பட முடியும் என்று பார்க்கும் ஆவல்.</p>
<p>வீட்டில் கணவருடனோ, பிள்ளைகளுடனோ கலந்தாலோசிக்காமல், தானாகவே சுற்றுலா வழிகாட்டி ஒன்றைப் பெற்று, எவரிடமும் சொல்லாமல், சுற்றுலா பயணக் குழு ஒன்றுடன் இணைந்து ஒரு வாரப் பயணம் ஒன்றை ஒழுங்கு செய்தாளாம். மறுநாள் காலையில் பயணம் என்றால், முதல்நாள் இரவில் ஒரு தாளில் தனது பயணம்பற்றிய முழுமையான குறிப்புக்களையும் குறித்து வைத்தாளாம். தான் போகுமிடங்கள், விலாசங்கள், அவசரமானால் தொடர்பு கொள்ளக்கூடிய முறைகள் அத்தனையும் குறித்து, அவர்கள் பார்க்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டு, போய் வருவதாக அதிலேயே விடைபெற்றுக்கொண்டு, மறுநாள் புறப்பட்டு விட்டாளாம். அந்த பயணம்பற்றி, தான் அதை எவ்வளவு இரசித்தேன் என்பது பற்றியெல்லாம் அந்த மின்னஞ்சலில் மிகவும் விரிவாக எழுதி இருந்தாள்.</p>
<p>மிகவும் உற்சாகத்துடன் அந்த மடலை முடித்திருந்தாள். ஆனால் அவளுடைய கணவரைப் போலவே, எல்லா கணவர்களும் இப்படிப்பட்ட செயலை, முழுமனதுடன், புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.</p>
<p>நானும் கூட திருமணத்தின் பின்னர், தனித்தியங்கும் தன்மை வெகுவாக குறைந்து விட்டதாய் எண்ணி கவலைப் பட்டது (படுவது) உண்டு. திருமணமான பெண்களுக்கு இந்த உணர்வு அதிகமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. முழு சுதந்திரத்துடன் எந்த ஒன்றையும் செய்ய முடியாமல் போகின்றதோ?</p>
<p>ஆனால் குடும்பத்துடன் இருப்பதால் ஏற்படும் மற்றைய மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் அவள் குறிப்பிட தவறுவதில்லை.</p>
<p>அண்மையில் அவளிடமிருந்து மீண்டும் ஒரு மடல். அவர்களது திருமணநாளை முன்னிட்டு, பிள்ளைகள் தங்களுக்கு (அவளுக்கும், கணவருக்கும்) ஒரு சுற்றுலா போய், மூன்று நாட்கள் வேறொரு இடத்தில் தங்கி, அங்கே hot air balloon இல் ஏறிப் பார்த்து வரவும் ஒழுங்குகள் செய்து, அனுமதிச் சீட்டு வாங்கிக் கொடுத்ததாகவும், போய் வந்த அனுபவத்தையும் மிகவும் இரசனையுடன் எழுதியிருந்தாள். அத்துடன், அந்த மடலில், சினேகிதிகள் மட்டுமாக இணைந்து செல்ல வேண்டிய அந்த பயணத்தைப் பற்றியும் நினைவூட்டி இருந்தாள்.</p>
<hr><h2>1 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/08/indepedant-feeling/#comment-541">February 24, 2010</a>, Kalamathy wrote:</p><p>So lovely !  keep them coming .</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/08/indepedant-feeling/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>என்னோடு பாட்டு பாடுங்கள்!</title>
		<link>http://kalaiarasy.com/2008/09/ennodupaaddu/</link>
		<comments>http://kalaiarasy.com/2008/09/ennodupaaddu/#comments</comments>
		<pubDate>Sat, 20 Sep 2008 23:19:59 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=142</guid>
		<description><![CDATA[எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு.
ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு பொழுதுபோக ஏதாவது வேண்டுமே என்று தமிழ் தொலைக்காட்சி எடுத்தாச்சு. நாங்கள் எல்லோரும் வேலை, பாடசாலை என்று போனதும், அவர் தனியாக இருப்பது கடினமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #0000ff;">எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு.</span></p>
<p><span style="color: #0000ff;">ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு பொழுதுபோக ஏதாவது வேண்டுமே என்று தமிழ் தொலைக்காட்சி எடுத்தாச்சு. நாங்கள் எல்லோரும் வேலை, பாடசாலை என்று போனதும், அவர் தனியாக இருப்பது கடினமாக இருக்குமென்பதால் இந்த ஏற்பாடு.</span></p>
<p><span style="color: #0000ff;">Sun TV, கலைஞர் TV, Jeya TV, தீபம் தொலைக்காட்சி, தென்றல், இன்னும் சில மலையாள TV எல்லாம் வீட்டினுள்ளே வரத் தொடங்கி இரண்டு கிழமையாச்சு. இருந்தாலும், அவற்றை போய் உட்கார்ந்து பார்ப்பதில்லை. செய்திகள் போகும்போது சில சமயம் உட்கார்ந்து பார்த்ததுண்டு. அங்கே இங்கே நடந்தபடி, அல்லது வேலை செய்தபடி, இடை இடையே அங்கே கண்ணையும், காதையும் வைத்ததோடு சரி.</span></p>
<p><span style="color: #0000ff;">இன்றைக்கு கலைஞர் TV ல &#8216;வேட்டையாடு விளையாடு&#8217; படம்னு சொன்னாங்க. படம் எப்படி, கதை என்ன ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும், அட நான் தமிழ் படம் பாத்து நீண்ட நாளாச்சே. இன்றைக்கு பார்க்கலாம் என்று திட்டம் போட்டேன். ஆனா, அந்த படம் தொடங்க கொஞ்ச நேரம் முதல் Jeya TV ல பாலசுப்ரமணியம் நடத்தும், &#8216;என்னோடு பாட்டு பாடுங்கள்&#8217; இசை நிகழ்ச்சி இருக்குன்னு தெரிஞ்சது. அதைப் பார்க்கிற ஆசையில், படத்தை துறந்து விட்டு, அதைப் பார்த்தேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">முதலில் எனக்குப் பிடித்தமான ஒரு பாடலை ஒரு பெண் பாடினார். &#8216;காக்க காக்க&#8217; படத்திலிருந்து, &#8216;தூது வருமா தூது வருமா&#8217; பாடல். அதை அவர் பாடிய விதம் மிக அருமையாக இருந்தது. ஆனால், அவர் பாடி முடிந்ததும், அதுபற்றி பாலசுப்ரமணியம் எந்த கருத்துமே சொல்லாமல் அடுத்தவரை கூப்பிட்டது கொஞ்சம் கவலையாகி விட்டது. அத்தனை அருமையாகப் பாடினாரே, எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டாரே என்று இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த நிகழ்ச்சியில் அவர் பொதுவாகவே எந்த கருத்தையும் சொல்லவில்லை. நிகழ்ச்சியில் நடுவர்களின் முடிவில் தான் தலையிடக் கூடாதென்று நினைத்திருப்பாரோ. இடை இடையே வேறு விடயங்களை நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.</span></p>
<p><span style="color: #0000ff;">ஆறு பேர் பாடினார்கள். அனைவரும் நன்றாகப் பாடினாலும், எனக்கென்னவோ, முதலில் பாடியவர் எல்லா விதத்திலும் அருமையாக பாடியதாகவே தோன்றியது. இடையில் அதிக விளம்பரங்கள் எதுவும் வராமல் இருந்ததும் நன்றாக இருந்தது.</span></p>
<p><span style="color: #0000ff;">நடுவர்களான இசையமைப்பாளர் M.S.Visvanathan, இயக்குனர் பாலாவும், இடை இடையே தமது சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். M.S.Visvanathan சொன்ன ஒரு விடயம், ஒரு பாடல் இந்த தலை முறைக்கு என்றில்லாமல், எல்லா தலை முறையினரையும் ரசிக்க வைக்குமானால், அதுவே பாடலின் வெற்றி என்று. அதற்கு ஒரு உதாரணமும் சொன்னார். ஒரு இசைநிகழ்ச்சியில் 18 வயது ஆண் ஒருவர், அந்த சமயத்தில் 38 வயதான பாடலான, நெஞ்சில் ஓர் ஆலயம் படப் பாடல் ஒன்றை விரும்பிக் கேட்டாராம். உண்மைதான், சில பாடலகள் எத்தனை தலைமுறை கடந்தாலும், மனதில் நிறைந்திருக்கத்தான் செய்கின்றது. &#8216;எண்ணப்பறவை சிறகடித்து&#8217; பாடலும் அப்படிப்பட்ட பாடலில் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">இரண்டாம் சுற்றில், பாலசுப்ரமணியம் ஒரு பாடலின் மெட்டை இடையில் கொடுக்க, அந்த பாடலைக் கண்டு பிடித்து பாட வேண்டும். எல்லோரும் இலகுவாக கண்டு பிடித்துப் பாடினார்கள். அவர்கள் பாடும்போது பாலசுப்ரமணியமும், அவர்களுடன் இணைந்து பாடியது இன்னும் அழகாக இருந்தது. அதில கடைசிப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடலான &#8216;இளையநிலா பொழிகிறது&#8217;.</span></p>
<p><span style="color: #0000ff;">முடிவில் நான் எதிர் பார்த்தபடி முதலில் &#8216;தூது வருமா தூது வருமா&#8217; பாடிய பெண்ணே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனக்கும் மகிழ்ச்சி. இறுதியில், அந்த பெண்ணுடன் பாலசுப்ரமணியம், இன்னொரு அழகான பாடலைப் பாடினார்.</span></p>
<p><span style="color: #0000ff;">&#8216;ஓ butterfly butterfly<br />
ஏன் விரித்தாய் சிறகை வா வா<br />
ஓ butterfly butterfly<br />
ஏன் விரித்தாய் சிறகை<br />
அருகில் நீ வருவாயோ<br />
உனக்காக திறந்தேன் மனதின் கதவை&#8217;</span></p>
<p><span style="color: #0000ff;">பாடலைப் பாடியபடியே, அந்தப் பெண்ணை வாழ்த்தியும் வரிகளை மாற்றி பாலசுப்ரமணியம் பாடியது நன்றாக இருந்தது. அதுனால, முதலில் அவர் அந்த பெண்ணின் பாடலுக்கு கருத்து எதுவும் சொல்லலையே என்ற குறையும் தீர்ந்தது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<p><span style="color: #0000ff;">அந்த நிகழ்ச்சி முடிந்ததும், கலைஞர் TV யைப் போட்டால், கமலும், Jothika வும், தங்கள் தங்கள் அறைகளிலிருந்து வெளியே வந்து ஏதோ பேசிக் கொண்டார்கள். முன்னுக்கு போனது என்னவென்று புரியாததில், சரியாக விளங்கவில்லை. இருந்தாலும் கொஞ்ச நேரம் பார்த்தேன். படம் பிடிக்கலை. எழுந்து எனது வேலைகளை செய்யப் போனேன். ஆனாலும் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தபோது, &#8217;<span>உயிரிலே எனது உயிரிலே&#8217; பாடல் போனது. அட, இது ஒரு நல்ல பாடலாச்சே, அது இதில்தானா என்று நினைத்த போதுதான், &#8216;பார்த்த முதல் நாளே&#8217; பாடலும் இந்தப் படத்தில் என்பது நினைவுக்கு வந்தது. சரி, பாட்டு போகும்போது, கேட்கலாம் என்று இருந்தால், அந்த பாடல் வரவில்லை. முதலே போய் விட்டதுபோல. </span></span></p>
<p><span style="color: #0000ff;">வேலைகள் எல்லாம் முடிய, அதில் வந்து உட்கார்ந்தேன். கமல், Jothika விடம் &#8216;இனி நீயும் மாயாவும் என் சொந்தம்&#8217; என்று சொல்லிக் கொண்டிருந்தார். இனி ஒரு வேலையும் இல்லைத்தானே என்று அதிலேயே உட்கார்ந்து படம் முடியும்வரை பார்த்தேன். ஆனால் படம் பிடிக்கவில்லை. </span></p>
<p><span style="color: #0000ff;">&#8216;என்னோடு பாட்டு பாடுங்கள்&#8217; ஒவ்வொரு கிழமையும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே எழுந்து வந்து இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கேன். :) </span></p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2008/09/ennodupaaddu/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மொழி!</title>
		<link>http://kalaiarasy.com/2007/06/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/06/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Mon, 11 Jun 2007 09:52:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/06/11/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[மொழி!

நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.மெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா மெளனமொழியில் பேசும்போது, அதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அதை விளங்கிக் கொள்ளும்படி எவரும் பதில் கூட கொடுக்காமல் இருந்தாலும், நம்மால் அர்ச்சனா பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது, மொழிப் படத்தில், மெளனத்திற்கு கிடைக்கும் வெற்றி.
படத்தில் அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள். கதையைக் கெடுக்காமல், கூடவே இணைந்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#6600cc;"><strong>மொழி!<br />
</strong></span><br />
<span style="color:#3333ff;">நீண்ட நாளைக்கு பிறகு பார்த்த நல்ல தமிழ்ப் படம். தென்றல் வருடிச் சென்றதுபோல், இனிமையான உணர்வைத் தந்த, மிகவும் அருமையான படம்.</span><span style="color:#3333ff;">மெளனமொழியில் அழகாக கதை நகர்ந்திருக்கிறது. கதையின் முடிவில் அர்ச்சனா மெளனமொழியில் பேசும்போது, அதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்காமல், அதை விளங்கிக் கொள்ளும்படி எவரும் பதில் கூட கொடுக்காமல் இருந்தாலும், நம்மால் அர்ச்சனா பேசுவதைப் புரிந்து கொள்ள முடிவது, மொழிப் படத்தில், மெளனத்திற்கு கிடைக்கும் வெற்றி.</p>
<p>படத்தில் அனைவரும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள். கதையைக் கெடுக்காமல், கூடவே இணைந்து வரும் நகைச்சுவை நன்றாக உள்ளது. விஜி தனது காதலை வெளிப்படுத்தும் விதம் இரசிக்கும்படியாக இருந்தது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . பெண்ணின் பெற்றோரிடம், &#8220;நீங்க நாளைக்கே முடிவு சொல்லணும் னு அவசியமில்லை, இன்னைக்கே கூட சொல்லிடலாம்.&#8221; என்று சொல்வது நன்றாக இருந்தது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசைக்கு என்ன அர்த்தம் என்ற நண்பரின் கேள்விக்கு, அர்ச்சனாவின் பதில் மனதைத் தொட்டது. வாய்பேச முடியாத, காதும் கேட்காத அர்ச்சனாவைப் பொறுத்த அளவில் இசையும் ஒரு மொழி. தனக்குத் தெரியாத மொழிகளில் ஒன்றாக இசையையும் சேர்த்துக் கொண்டு, அதை எதிர்மறையான பாதிப்பு எதுவுமின்றி சாதாரணமாக சொல்லும் மனப்பக்குவம் மனதைத் தொட்டது.</p>
<p>படத்தின் சில இடங்கள் நெகிழ்வைத் தந்ததுடன், தொண்டை அடைக்க (வலிக்க) வைத்தது. பூ விற்கும் ஒரு சின்னக் குழந்தையுடன், கார்த்திக் மெளன பாஷையில் பேசியதும், முழுப் பூவையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்வதும் தொண்டையில் இருந்த நீரை கண்ணுக்கு இடம் மாற்றியதால், தொண்டை வரண்டு வலித்தது. ஏனென்று தெரியவில்லை.</p>
<p>மேலும், மகன் இறந்ததை ஏற்றுக் கொள்ளாமல், மகன் இறந்த காலத்திற்கு முன்னைய காலத்தில் வாழும் proffessor செருப்பு வாங்கிக் கொடுக்கும்படி கார்த்திக்கிடம் கேட்டதும், கார்த்திக் வாங்கிக் கொடுத்ததை சந்தோஷத்துடன் மற்றவரிடம் காட்டி மகிழ்வதைக் கண்டு கார்த்திக் மன நிறைவுடன் செல்வதும், கடைசியில் மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று கார்த்திக்கிடம் சொல்லும்போது, அவரை உண்மையை சொல்லி உணர வைத்து, அவரை கார்த்திக் வாய்விட்டு அழ வைக்கும் காட்சி, எனக்கும் கண்ணில் நீரை வரவழைத்தது.</p>
<p>காதுக்கு இனிமையான, உணர்வுக்கு அருமையான பாடல்கள்.</p>
<p>ஆனாலும், அந்த &#8216;பேசா மடந்தையே&#8217; என்ற பாடலுக்கு சிவப்பு உடையணிந்த பெண்கள் வந்து அவசியமே இல்லாமல் நடனம் ஆடிவிட்டுப் போவது பொருத்தமில்லாமல் இருக்கின்றது.</p>
<p>எனக்கு தமிழில் மிகப் பிடித்த இரண்டு சொற்களுக்கு இந்த படத்தில் இருக்கும் முக்கியத்துவம் எனக்கு இந்தப் படத்தை மிகவும் பிடித்துப் போகச் செய்திருக்கின்றது. அவை<strong> &#8216;மொழி&#8217;, &#8216;மெளனம்&#8217;.</strong><br />
<span style="color:#3333ff;"></span><br />
<span style="color:#3333ff;"><strong>அன்புக்கு மொழி அவசியமில்லை!!!<br />
</strong></span><br />
<span style="color:#6600cc;">பி.கு&gt; இந்த படத்தை ஒரிஜினல் VCD யில் அல்லாமல் திருட்டுத் தனமாக தான் பார்த்ததும் அல்லாமல், என்னையும் பார்க்க வைத்த ரவிசங்கருக்கு நன்றி! படத்தை பார்ப்பதில் இருந்த ஆர்வம் குற்றம் செய்கின்றோம் என்ற எண்ணத்தை மறக்கச் செய்து விட்டது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<p></span></p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/06/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/#comment-338">June 11, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>நடிகர்களின் பெயரைச் சொல்லாமல் பாத்திரங்களின் பெயரைக் கொண்டு எழுதி இருப்பதிலேயே படம் எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. இது போன்று பாத்திரங்களைப் பாத்திரங்களாகப் பார்க்கச் செய்யும் படங்கள் அடிக்கடி வருவதில்லை. <br/><br/>நெஞ்சைத் தொட்டது, தொண்டை அடைத்தது, கண்ணீர் முட்டியதுன்னு over senti ஆகிடுறீங்களே ;) இதை விட இன்னும் பல மடங்கு மனதை உருக்கும் படங்களை எல்லாம் அப்புறம் எப்படிப் பார்ப்பது?<br/><br/>//பி.கு> இந்த படத்தை ஒரிஜினல் VCD யில் அல்லாமல் திருட்டுத் தனமாக தான் பார்த்ததும் அல்லாமல், என்னையும் பார்க்க வைத்த ரவிசங்கருக்கு நன்றி! படத்தை பார்ப்பதில் இருந்த ஆர்வம் குற்றம் செய்கின்றோம் என்ற எண்ணத்தை மறக்கச் செய்து விட்டது. :)//<br/><br/>ஏற்கனவே என் பதிவில் ஒரு வாக்குமூலம் இருக்கிறது. இதையும் சேர்த்து படத் தயாரிப்பாளருக்கு அனுப்பினால் நாட்டுக்கு ஒருவராய் கம்பி எண்ணலாம் :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/06/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/#comment-339">June 11, 2007</a>, கலை wrote:</p><p>//நெஞ்சைத் தொட்டது, தொண்டை அடைத்தது, கண்ணீர் முட்டியதுன்னு over senti ஆகிடுறீங்களே ;) இதை விட இன்னும் பல மடங்கு மனதை உருக்கும் படங்களை எல்லாம் அப்புறம் எப்படிப் பார்ப்பது?//<br/><br/>அது என்னமோ தெரியலை. சில சமயம் இப்படித்தான். மத்தவங்க கவலையோட பார்க்கிற சில காட்சிகள் என்னை அதிகம் பாதிக்காது. ஆனால் மத்தவங்க பெருசா எடுத்துக்காத சின்ன சின்ன விஷயங்கள் ரொம்பவும் பாதிக்கும். ஏன்னு தெரியாது. வருகின்ற அழுகையை உள்ளேயே அடக்கி வைக்க முயற்சித்தால் தொண்டை வலிக்கும். <br/><br/>பல மடங்கு மனதை உருக்கும் படங்கள் பார்க்கும்போது, பக்கத்தில் இருப்பவர், யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று அழ ஆரம்பித்து விடுவேன்.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/06/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>என் குட்டித் தேவதைக்கு&#8230;.</title>
		<link>http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/</link>
		<comments>http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comments</comments>
		<pubDate>Wed, 18 Jan 2006 18:07:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2006/01/18/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/</guid>
		<description><![CDATA[என் குட்டித் தேவதைக்கு&#8230;.

நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே 
இலகுவான இடத்தில் ஒளிந்து 
&#8220;எப்படியடி தெரிந்தது?&#8221; நான் பிரமிக்கையில், 
பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு&#8230; 
வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
&#8220;ஐயோ! தெரியலியே&#8221; தவிக்கையில், 
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி 
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு&#8230; 
பஞ்சுப் பொம்மையைத் 
தூக்க முடியாமல் கீழே போட்டு 
கைவலிப்பதாய் நடிக்கையில், 
தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு&#8230; 
இப்படி ஒன்றும் தெரியாதவளாய் 
நான் நடிப்பதெல்லாம் 
உன்னை எல்லாம் தெரிந்தவளாய் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:85%;color:#3333ff;"><strong>என் குட்டித் தேவதைக்கு&#8230;.</strong></span><br />
<span style="font-size:85%;"><br />
<span style="color:#3333ff;">நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே </span><br />
<span style="color:#3333ff;">இலகுவான இடத்தில் ஒளிந்து </span><br />
<span style="color:#3333ff;">&#8220;எப்படியடி தெரிந்தது?&#8221; நான் பிரமிக்கையில், </span><br />
<span style="color:#3333ff;">பெருமிதத்தில் நீ சிரிக்கும் பத்துப்பல் சிரிப்பு&#8230; </span><br />
<span style="color:#3333ff;">வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,</span><br />
<span style="color:#3333ff;">&#8220;ஐயோ! தெரியலியே&#8221; தவிக்கையில், </span><br />
<span style="color:#3333ff;">குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி </span><br />
<span style="color:#3333ff;">ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு&#8230; </span><br />
<span style="color:#3333ff;">பஞ்சுப் பொம்மையைத் </span><br />
<span style="color:#3333ff;">தூக்க முடியாமல் கீழே போட்டு </span><br />
<span style="color:#3333ff;">கைவலிப்பதாய் நடிக்கையில், </span><br />
<span style="color:#3333ff;">தூக்கிக்கொண்டு ஓடும் உன் துறுதுறு குறும்பு&#8230; </span><br />
<span style="color:#3333ff;">இப்படி ஒன்றும் தெரியாதவளாய் </span><br />
<span style="color:#3333ff;">நான் நடிப்பதெல்லாம் </span><br />
<span style="color:#3333ff;">உன்னை எல்லாம் தெரிந்தவளாய் </span><br />
<span style="color:#3333ff;">ஆக்கத்தான் என் குட்டி தேவதையே!</span><br />
<span style="color:#3333ff;"><br />
<strong>நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்</strong></span></span></p>
<hr><h2>10 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comment-206">January 18, 2006</a>, இளந்திரையன் wrote:</p><p>எங்கள் பெற்றோரும் எங்கள் சிறு வயதில் இதையே தான் செய்தார்கள். நாம் வளர்ந்த பின்னும் அது உண்மை என்று நம்பி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comment-207">January 18, 2006</a>, சத்தியா wrote:</p><p>ஓ! .... தாம் பெற்ற செல்வத்தின் சிரிப்பில், வெற்றியில் ஆனந்தம் காணும் பெற்ற உள்ளம். <br/><br/>நல்லதோர் கவிதை என் மனதையும் தொட்டுச் சென்றது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comment-208">January 18, 2006</a>, தேவன்கள் wrote:</p><p>எல்லார்வீட்டிலும் நடக்கிற விஷயம்தான் என்றாலும், அத ரொம்ப நல்லா சொல்லிருக்கிங்க. மனசதொட்டுவிட்டது. <br/>         அதுக்கு ஒரு உதாரணம் கொடுக்கணும்னு தோணுது. நான் அடிக்கடி chinese restaurant போவேன்.           ஒருஒரு தடவையும் chopstick உபயோகிக்க முயற்ச்சிப்பேன். ஆனா வரவேவராது.      அப்படி ஒருதடவை போனபோது chopstick கேட்டா, rubber band attached chopstick கொடுத்தாங்க. அப்பிடியே அசந்து போய்ட்டேன். அதுவும் சின்னவிஷயம்தான், ஆனா உங்களுக்கு தெரியாது நான் எவ்வளவு சந்தோஷபட்டேன் என்று. <br/>அந்த மாதிரி உங்க கவிதையும் ரொம்ப நல்லாயிருக்கு.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comment-209">May 22, 2006</a>, rahini wrote:</p><p>m..arumaiyaana kavithai kalai<br/><br/>anpudan rahini</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comment-210">May 22, 2006</a>, கலை wrote:</p><p>ஐயோ இது என்னுடைய கவிதையல்ல. "நன்றி: லதா பிரபாகர், அவள் விகடன்"<br/>என்று போட்டிருக்கிறேனே, கவனிக்கவில்லையா ராஹினி? ஆனாலும் நான் ரொம்ப ரொம்ப ரசித்த கவிதைகளில் இதுவும் ஒன்று. (அதுசரி, எங்கிருந்து இந்த வலைப்பதிவை தேடிப் பிடித்தீர்கள்?) என்னுடைய வலைப்பதிவெல்லாம் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று இப்போது எழுந்து வந்திருப்பது  ஆச்சரியமாக இருக்கு. :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comment-211">May 22, 2006</a>, பரஞ்சோதி wrote:</p><p>சகோதரி,<br/><br/>மிகவும் இனிமையான கவிதை தேடி கொடுத்திருக்கீங்க.<br/><br/>நான் சக்தியிடம் இக்கவிதை போலவே நடந்து கொள்கிறேன். மருமகள் எப்படி இருக்கிறார் ?</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comment-212">May 22, 2006</a>, கலை wrote:</p><p>குழந்தை சக்தி கொடுத்து வைத்தவர்தான். அருமையான அப்பா கிடைத்திருக்கிறாரே. <br/><br/>மருமகளும் நலமே. மருமகளும் கொடுத்து வைத்தவர்தான். :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comment-213">December 21, 2006</a>, ரவிசங்கர் wrote:</p><p>ஆஹா..இது என்ன இப்படி ஒரு அருமையான கவிதை என்று படிக்க ஆரம்பிக்கும்போது, பதிவின் தலைப்பான ரசித்த கவிதைகள் என்பதை கண்டு ஏமாற்றமாய் போய்விட்டது. இருந்தாலும், இணையத்தில் இப்படி நல்ல கவிதைளை காட்சிப்படுத்தும் தளங்கள் குறைவு தான்..தொடர்ந்து நீங்கள் படித்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comment-214">December 21, 2006</a>, கலை wrote:</p><p>தொடர்ந்து படிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் எனக்கும் ஆசைதான். என்ன செய்வது, எல்லாவற்றுக்கும் நேரம்தான் கிடைப்பதில்லை. :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comment-215">April 4, 2007</a>, Maha wrote:</p><p>நல்ல கவிதை.  என் வீட்டிலும் ஒரு குட்டி தேவதை வளர்கிறாள். ரசித்துப் படித்தேன். <br/><br/>எல்லா இதழ்களும் எல்லாரும் படிப்பதில்லை. உங்கள் சேவை. நாட்டுக்குத் தேவை.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2006/01/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சில முத்துக்கள்!</title>
		<link>http://kalaiarasy.com/2006/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://kalaiarasy.com/2006/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 18 Jan 2006 18:00:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2006/01/18/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</guid>
		<description><![CDATA[கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!

&#62; உனக்கு நானோ
எனக்கு நீயோ
சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம்
வா!
&#62; தேவைதானா என்று
கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா?
குரங்கிலிருந்து மனிதன்
குதித்திருக்க முடியுமா?
தூரத்தை
நெருங்கியிருக்க முடியுமா?
நேரத்தை
சுருக்கியிருக்க முடியுமா?
தேவைதான்
முட்டைக்குள் இருக்கும்
உயிரை மூச்சு விட
வைக்கிறது
&#62; அனுபவங்களின்
தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கைமுறை
தீர்மானிக்கப்பட்ட
அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த
அனுபவங்களை
ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது
துப்பியது
ஆகவே
தாத்தாக்களின்
நகல்களாகவே தமிழன்
தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை

	Related posts
	
	No related posts.
	

]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:85%;color:#3333ff;"><strong>கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசத்திலிருந்து கண்டெடுத்தவை!!</strong></span></p>
<p><span style="color:#3333ff;"><br />
</span><span style="font-size:85%;color:#3333ff;">&gt; உனக்கு நானோ<br />
எனக்கு நீயோ<br />
சுமையாகிப் போகாமல்<br />
துணையாகிப் போவோம்<br />
வா!</span></p>
<p><span style="font-size:85%;color:#3333ff;">&gt; தேவைதானா என்று<br />
கேட்டிருந்தால்<br />
தீயை அறிந்திருக்க முடியுமா?<br />
குரங்கிலிருந்து மனிதன்<br />
குதித்திருக்க முடியுமா?<br />
தூரத்தை<br />
நெருங்கியிருக்க முடியுமா?<br />
நேரத்தை<br />
சுருக்கியிருக்க முடியுமா?<br />
தேவைதான்<br />
முட்டைக்குள் இருக்கும்<br />
உயிரை மூச்சு விட<br />
வைக்கிறது</span></p>
<p><span style="font-size:85%;color:#3333ff;">&gt; அனுபவங்களின்<br />
தொகுப்புத்தான் வாழ்க்கை<br />
நம் வாழ்க்கைமுறை<br />
தீர்மானிக்கப்பட்ட<br />
அனுபவங்களையே<br />
நம்மீது திணித்தது<br />
யாருக்கோ நேர்ந்த<br />
அனுபவங்களை<br />
ஒப்புக் கொள்ளுமாறு<br />
நம்மீது<br />
துப்பியது<br />
ஆகவே<br />
தாத்தாக்களின்<br />
நகல்களாகவே தமிழன்<br />
தயாரிக்கப்பட்டான்<br />
சாதிக்கும் முளையிருந்தும்<br />
சோதிக்கும் முயற்சியில்லை</span></p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2006/01/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கண்ணீர்ப்பூக்கள்!!</title>
		<link>http://kalaiarasy.com/2005/08/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://kalaiarasy.com/2005/08/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 18 Aug 2005 11:20:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[சோகம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2005/08/18/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</guid>
		<description><![CDATA[போன வார விடுமுறையில் கண்ணாடிப்பூக்கள் படம் பார்த்தேன். அதை இப்பத்தான் பார்த்தீர்களா என்று பலரும் சலித்துக் கொள்வதுபோல் எனக்கு ஒரு தோற்றம். என்ன செய்வது நானிருக்கும் இடத்தில் தமிழ்ப்படங்கள் எடுப்பது இலகுவல்லவே. லண்டன் போயிருந்தபோது ஒரு படத்துக்கு 3 பவுண்ஸ் (மட்டுமே) கொடுத்து DVD கொஞ்சம் வாங்கி வந்தோம். அதுலே ஒன்றுதான் இந்தக் கண்ணாடிப்பூக்களும்.

நிறைய நாளைக்குப் பிறகு நல்ல ஒரு கருத்துள்ள படம் பார்த்த திருப்தி. இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந்தை மேல் வைத்திருக்கும் கவனங்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:85%;color:#3333ff;">போன வார விடுமுறையில் கண்ணாடிப்பூக்கள் படம் பார்த்தேன். அதை இப்பத்தான் பார்த்தீர்களா என்று பலரும் சலித்துக் கொள்வதுபோல் எனக்கு ஒரு தோற்றம். என்ன செய்வது நானிருக்கும் இடத்தில் தமிழ்ப்படங்கள் எடுப்பது இலகுவல்லவே. லண்டன் போயிருந்தபோது ஒரு படத்துக்கு 3 பவுண்ஸ் (மட்டுமே) கொடுத்து DVD கொஞ்சம் வாங்கி வந்தோம். அதுலே ஒன்றுதான் இந்தக் கண்ணாடிப்பூக்களும்.</span><br />
<span style="font-size:85%;color:#3333ff;"></span><br />
<span style="font-size:85%;color:#3333ff;">நிறைய நாளைக்குப் பிறகு நல்ல ஒரு கருத்துள்ள படம் பார்த்த திருப்தி. இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந்தை மேல் வைத்திருக்கும் கவனங்கள் குறைந்து விடுவதும், அதனால் அந்த குழந்தைகள் மனதில் எழும் பிரச்சனைகளையும் கதை எடுத்துக் காட்டுகிறது. இரண்டாவது குழந்தைக்கு தயாராகும் எல்லா அம்மா, அப்பாக்களும் கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயம். </span><br />
<span style="font-size:85%;color:#3333ff;"></span><br />
<span style="font-size:85%;color:#3333ff;">படத்தில் பல இடங்கள், மனதை ஆழமாகத் தொட்டது. ஒரு பக்கம் இறந்து போன குழந்தை, மறு பக்கம் அந்தக் குழந்தையின் இறப்புக்கு தமது மற்ற குழந்தையே காரணம் என்பதை அறிந்ததில் அதிர்ச்சி, அந்தக் குழந்தையை சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி பாதுகாப்பது என்பது புரியாத குழப்பம், தமது குழந்தை தப்பு செய்வதற்கு தாமே காரணமாகி விட்டோமே என்ற தவிப்பு&#8230;. இப்படியே அந்தப் பெற்றோர் படும் அவஸ்தைகள் யதார்த்தமாக சொல்லப்பட்டு இருந்தது. </span><br />
<span style="font-size:85%;color:#3333ff;"></span><br />
<span style="font-size:85%;color:#3333ff;">அந்தக் குட்டிப்பையனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியதும், அங்கே அந்த வில்லனை பொறுப்பாளராகப் பார்த்ததுமே, நெஞ்சுக்குள் படபடப்பு. அந்த நபர் கொஞ்சம் இடக்கு மடக்காக ஆரம்பத்தில் இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு கடுமை அங்கே தொடர்ந்து வரவில்லை (நல்ல வேளையாக). </span><br />
<span style="font-size:85%;color:#3333ff;"></span><br />
<span style="font-size:85%;color:#3333ff;">எனக்கு ஒரு சின்ன சந்தேகம்&#8230; உண்மையிலேயே இந்தியாவில் இருக்கும் சிறுவர் சீர் திருத்தப் பள்ளிகளில் இப்படித்தான் குழந்தைகளிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்களா? அப்படியானால் சீர்திருத்தப் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் நோக்கமே பாதிப்புக்கு உள்ளாகாதா? இந்தக் கேள்விதான் மனதை அதிகம் பாதித்தது. </span></p>
<hr><h2>7 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2005/08/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-89">August 18, 2005</a>, நிலவு நண்பன் wrote:</p><p>அந்த திரைப்படம் இளகிய நெஞ்சங்களில் ஒரு விதமான சோகம் தரும் என்பது உண்மைதான் சகோதரி<br/><br/><br/><br/>          இதயம் நெகிழ்வுடன்<br/><br/>             ரசிகவ் ஞானியார்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2005/08/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-90">August 18, 2005</a>, வீ. எம் wrote:</p><p>padam paarka villai... parthuvittu vandhu ungalukku karuthu solkiren  :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2005/08/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-91">August 18, 2005</a>, கலை wrote:</p><p>சரிதான். நான் நினைத்திருந்தேன் நான் தான் படம் பார்க்கிறதுல லேட் ன்னு. :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2005/08/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-92">August 18, 2005</a>, கயல்விழி wrote:</p><p>யாரும் இந்த படம் பார்க்கலாம் என்று சிபார்சு செய்தால் மட்டுமே நான் படம் பார்ப்பேன். அப்படி சிபார்சில் பாத்த படம் கண்ணாடிப்பூக்கள். அந்த சிறுவன் அற்புதமாய் நடித்திருந்தான். படம் பார்க்கும் படியிருந்தது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2005/08/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-93">August 23, 2005</a>, வீ. எம் wrote:</p><p>marakkama aduththa leave la  sivakavi, magakavi kaalidhaas, kappalotiya thamizhan ponra pudhiya padangalai paarthudunga kalai<br/><br/>VM</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2005/08/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-94">August 23, 2005</a>, திரு wrote:</p><p>கலை,<br/><br/>மகிழ்ச்சி படைப்புகளை வாசிக்கும் வேளை. நானும் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை! வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கிறேன். <br/><br/>தொடர்ந்து எழுதுங்கள். நல்ல முயற்சி... இந்தியாவில் சீர்திருத்த பள்ளிகளில் மட்டுமல்ல, காவல்துறை, ஆசிரியர்கள் என எல்ல இடமும் இப்படிபட்ட வன்கொடுமைகள் நடக்கிறது. மனிதநேயம் எங்கே?<br/><br/>அன்புடன்,<br/>திரு</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2005/08/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-95">August 25, 2005</a>, கலை wrote:</p><p>//sivakavi, magakavi kaalidhaas, kappalotiya thamizhan ponra pudhiya padangalai paarthudunga kalai//<br/>என்ன சொல்லுறீங்க நீங்க? உண்மையாவே இவை எல்லாம் புதிய படங்களா? ஹி ஹி.<br/><br/>நன்றி திரு.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2005/08/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>காதில் கேட்டவை!</title>
		<link>http://kalaiarasy.com/2005/05/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88/</link>
		<comments>http://kalaiarasy.com/2005/05/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88/#comments</comments>
		<pubDate>Fri, 20 May 2005 14:11:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2005/05/20/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88/</guid>
		<description><![CDATA[நாள் காட்டி

வருடம் முழுவதும்
இலையுதிர் காலம் உனக்கு
வசந்தம் வருவதோ
வருடத்தில் ஒரு நாள் மட்டுமே..

எச்சில் இலை

எச்சில் இலையை
எந்த பக்கம் போட
இந்தப் பக்கம் நாய்
அந்த பக்கம் மனிதன் 

	Related posts
	
	No related posts.
	

]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:85%;color:#3333ff;"><strong>நாள் காட்டி</strong></span><br />
<span style="font-size:85%;color:#3333ff;"><br />
வருடம் முழுவதும்<br />
இலையுதிர் காலம் உனக்கு<br />
வசந்தம் வருவதோ<br />
வருடத்தில் ஒரு நாள் மட்டுமே..</span><br />
<span style="font-size:85%;"><br />
<strong><span style="color:#3333ff;">எச்சில் இலை</span></strong><br />
<span style="color:#3333ff;"><br />
எச்சில் இலையை<br />
எந்த பக்கம் போட<br />
இந்தப் பக்கம் நாய்<br />
அந்த பக்கம் மனிதன்</span></span><span style="color:#3333ff;"> </span></p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2005/05/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தேடல்!</title>
		<link>http://kalaiarasy.com/2005/05/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://kalaiarasy.com/2005/05/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 20 May 2005 14:08:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2005/05/20/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/</guid>
		<description><![CDATA[அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.

தேடல்!

மீண்டும் பிரம்மச்சாரி
ஊர் கேட்க கத்தினேன்
நீ உன் பிறந்தகம் போன
அந்தக் கணத்தில்
உன் உத்தரவில்லா
உலகத்துள்
என் ஒருத்தனின்
ராஜாங்கம்

தாமதமாய் விடியல்
பல் துலக்காமல் தேநீர்
ஆஷ் டிரேக்கு வெளியே
அணையாத சிகரெட் துண்டு
நண்பர்கள்
மதுக்கோப்பை
இறைச்சியின் எச்சம்

எல்லாமே நான் மகிழ்ந்த
கதை பேசின
பளீரென்று சிரிக்கும் பூ
பையப் பைய வாடுதல் போல
என் அத்தனை உற்சாகமும்
ஓய்ந்து தீர்ந்தது
ஓரிரு நாளிலேயே

வீடு வெற்றிடமாய்
வெற்றிடமெல்லாம் நீயாய் தெரிய
உன்னை நினைத்து நினைத்தே
வாழ்க்கை சராசரிக்கும் கீழாய்
சரியத் தொடங்கியது

காமமாம் இச்சையாம்
நான் உன்னை வேண்டுவதன்
காரணம் சொல்கிறான்
உளவியல் படித்த நண்பன்

எவருமே உணரமுடியாத
என் உள்ளாடும் தவிப்பை
எங்ஙனம் சிருஷ்டிப்பது
வார்த்தைகளாய்?
மிக நீண்ட பிரயத்தனத்திற்குப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:85%;"><span style="color:#009900;">அவள் விகடனில் வாசித்த ஒரு சிறு கவிதை.</span></span><br />
<span style="font-size:85%;"><span style="color:#009900;"><br />
</span><strong><span style="color:#3333ff;">தேடல்!</span></strong><br />
</span><span style="color:#3333ff;"><br />
மீண்டும் பிரம்மச்சாரி<br />
ஊர் கேட்க கத்தினேன்<br />
நீ உன் பிறந்தகம் போன<br />
அந்தக் கணத்தில்<br />
உன் உத்தரவில்லா<br />
உலகத்துள்<br />
என் ஒருத்தனின்<br />
ராஜாங்கம்</span><br />
<span style="color:#3333ff;"><br />
தாமதமாய் விடியல்<br />
பல் துலக்காமல் தேநீர்<br />
ஆஷ் டிரேக்கு வெளியே<br />
அணையாத சிகரெட் துண்டு<br />
நண்பர்கள்<br />
மதுக்கோப்பை<br />
இறைச்சியின் எச்சம்</span><br />
<span style="color:#3333ff;"><br />
எல்லாமே நான் மகிழ்ந்த<br />
கதை பேசின<br />
பளீரென்று சிரிக்கும் பூ<br />
பையப் பைய வாடுதல் போல<br />
என் அத்தனை உற்சாகமும்<br />
ஓய்ந்து தீர்ந்தது<br />
ஓரிரு நாளிலேயே</span><br />
<span style="color:#3333ff;"><br />
வீடு வெற்றிடமாய்<br />
வெற்றிடமெல்லாம் நீயாய் தெரிய<br />
உன்னை நினைத்து நினைத்தே<br />
வாழ்க்கை சராசரிக்கும் கீழாய்<br />
சரியத் தொடங்கியது</span><br />
<span style="color:#3333ff;"><br />
காமமாம் இச்சையாம்<br />
நான் உன்னை வேண்டுவதன்<br />
காரணம் சொல்கிறான்<br />
உளவியல் படித்த நண்பன்</span><br />
<span style="color:#3333ff;"><br />
எவருமே உணரமுடியாத<br />
என் உள்ளாடும் தவிப்பை<br />
எங்ஙனம் சிருஷ்டிப்பது<br />
வார்த்தைகளாய்?<br />
மிக நீண்ட பிரயத்தனத்திற்குப் பின்<br />
சொல்கிறேன்</span><br />
<span style="color:#3333ff;"><br />
தெருப்புழுதியில்<br />
வெகு நேரம் விளையாடி<br />
அம்மா நினைவு வந்தவுடன்<br />
ஓடி வரும் குழந்தையாய்<br />
உன்னைத் தேடுகிறேன் போ</span></p>
<p><span style="color:#009900;">நன்றி: சு.கவிதா<br />
அவள் விகடன்..</span></p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2005/05/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/#comment-48">November 6, 2005</a>, நளாயினி wrote:</p><p>அடடாh... நல்லதொரு கவிதை.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2005/05/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/#comment-49">September 9, 2006</a>, சிவாஜி wrote:</p><p>very nice...</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2005/05/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/#comment-50">February 8, 2007</a>, சிவாஜி wrote:</p><p>very nice...</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2005/05/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
