<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உயிர்ப்பு &#187; வாழ்க்கை</title>
	<atom:link href="http://kalaiarasy.com/category/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kalaiarasy.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 24 Jun 2010 09:10:25 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>வீட்டிற்கான வழி!</title>
		<link>http://kalaiarasy.com/2010/04/the-way-home/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comments</comments>
		<pubDate>Fri, 23 Apr 2010 10:28:59 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Kids world]]></category>
		<category><![CDATA[The Way home]]></category>
		<category><![CDATA[human nature]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[அன்பு]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>
		<category><![CDATA[பாசம்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=730</guid>
		<description><![CDATA[The Way Home
நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது.
ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.
கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு வருகிறார். அங்கேயே குட்டிப் பையனை சிலநாட்கள் பாட்டியுடன் இருக்கும்படி விட்டுவிட்டு, புதிய வேலை ஒன்று தேடி நகரத்துக்குப் போய் விடுகிறார்.
அங்கே பையன் பாட்டியுடன் இருக்கும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>The Way Home</strong></p>
<p>நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது.</p>
<p>ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.</p>
<p>கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு வருகிறார். அங்கேயே குட்டிப் பையனை சிலநாட்கள் பாட்டியுடன் இருக்கும்படி விட்டுவிட்டு, புதிய வேலை ஒன்று தேடி நகரத்துக்குப் போய் விடுகிறார்.</p>
<p>அங்கே பையன் பாட்டியுடன் இருக்கும் நாட்களில், அவர்களின் உறவில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக சொல்கிறது படம். பின்தங்கிய கிராமத்து சூழலில் ஒட்டிக் கொள்ள முடியாமல் இருக்கும் பையன், நகரத்து நாகரீக வாசனையே அறியாத பாட்டியை ஆரம்பத்தில் உதாசீனம் செய்கிறான்.  சில நாட்கள் அங்கே வாழ்ந்து பின்னர் பாட்டியின் தூய்மையான அன்பில் படிப்படியாக பையனிடம் ஏற்படும் மாற்றமும், மீண்டும் அவன் அம்மாவுடன் நகருக்கு செல்லத் தயாராகும் நிலையில், பாட்டியுடன் மனதளவில் ஏற்பட்ட நெருக்கமும், மிக மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.</p>
<p>கிராமத்து சூழலிலேயே இருந்துவிட்ட பாட்டிக்கு, பையனுக்குத் தெரிந்த நாகரீக வாழ்க்கையின் தடங்கள் பற்றி எதுவுமே சொன்னாலும் புரிவதுமில்லை. நகர வாழ்க்கையில் பழக்கப்பட்ட பையனுக்கு கிராமத்தில் பொழுது போவதே கடினமாக உள்ளது. தனது மின்சார விளையாட்டுப் பொருளான Game Boy உடனேயே பொழுதைக் கழிக்கும் பையனுக்கு, தொடர்ந்து அதிலேயே விளையாடிக் கொண்டிருந்ததால், அதன் மின்கலம் தனது தொழிற்பாட்டை நிறுத்தியதும், மிகவும் வருத்தமாகி விடுகிறது. பையனின் தேவையை அல்லது அவசியத்தை பாட்டியாலேயும் புரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய முடியவில்லை. அவனாலும் அதை வாங்க முடியாமலேயே போய் விடுகிறது.</p>
<p>பையன் தனக்கு Kentucky Fried Chicken வேண்டும் என்று சொல்லி, புரிய வைக்க முடியாமல், புத்தகத்தில் இருக்கும் கோழியின் படத்தை எடுத்துக் காட்ட, பாட்டியும், தன்னால் பேரனுக்குப் பிடித்ததை செய்து கொடுக்க முடியும் என்றெண்ணிக் கொண்டு, கூனல் விழுந்த முதுகுடன், நடந்து சென்று கோழி வாங்கி வந்து, தனக்கு தெரிந்தபடி, அதை முழுவதுமாய் போட்டு அவித்து வைக்க, பையன் Kentucky Chicken கிடைக்காத வருத்தத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சோர்ந்து படுத்து விடுகிறான். ஆனாலும் பாட்டி தூங்கிய பின்னர் எழுந்து, பசி தாங்காமல் பாட்டி அவித்து வைத்த கோழியையே உண்கிறான்.</p>
<p>இதில் முக்கியமான விசயம், பாட்டிக்கு குரல் எழுப்பி பேசவும் முடியாது. சைகைகளினாலேயே படம் முழுமைக்கும் பாட்டி பேசும் மெளனமொழி, மனதை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆரம்பத்தில் பாட்டியுடன் முரண்டு பிடிக்கும் பையன் கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டியின் அன்பிற்கு கட்டுப்பட்டுப் போவதாய் படம் முடிகிறது.</p>
<p>பையன் கிராமத்தை விட்டு போவதற்கு முன்னர், பாட்டிக்கு பேச முடியாது, சுகவீனம் ஏற்பட்டாலும் தொலைபேசியில் தகவல் சொல்ல முடியாதென்பதால், பாட்டிக்கு எழுதப் பழக்கி கடிதம் போடச் சொல்கிறான். I’m sick’, ’Miss you என்ற இரண்டையும் எழுதப் பழக்கி, அது கடினம் என்று புரிந்ததும், சுகவீனம் ஏற்பட்டால், வெற்றுத் தாளை தனக்கு அஞ்சல் செய்யும்படியும், பாட்டிக்கு சுகவீனம் எனப் புரிந்து கொண்டு தான் விரைந்து வருவதாகவும் பாட்டியிடம் சொல்கிறான். இருவரும் அழும்போது நமக்கும் அழுகை வருகிறது.</p>
<p>பாட்டிக்கு எழுதப் புரியாதென்பதால், படங்கள் மூலம் சில வாழ்த்து அட்டைகள் தயார் செய்து பாட்டிக்கு கொடுத்துவிட்டுப் போவான். (குழந்தைகளுக்கு படம் வரைய சொல்லியா தர வேண்டும். கற்பனையை எல்லா இடமும் விட்டு என்னென்னமோ எல்லாம் வரைவார்கள். என் குட்டிப் பெண் எனக்கு செய்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் யாவும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).</p>
<p>சில தடவைகள் கண் சரியாகத் தெரியாத பாட்டி தனக்கு ஊசியில் நூல் கோற்றுத் தரும்படி பையனைக் கேட்பாள். மனம் சோர்ந்த நிலையிலிருக்கும் அவன் மறுத்து விடுவான். ஆனால், பையன் பாட்டியை விட்டு போகப் போகும் நேரத்தில் பாட்டிக்குத் தேவை என்பதைப் புரிந்து கொண்டு சில ஊசிகளை எடுத்து நூலைக் கோத்து தயாராக வைத்து விட்டுப் போவான்.</p>
<p>பாட்டியை விட்டுப் பிரிந்து போவது பையனுக்கு மிகக் கடினமாக இருக்கிறது என்பதை, அவன் எந்த வார்த்தையும் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது. (அதைப் பார்த்தபோது, பல வருடங்கள் முன்னால் நடந்தது நினைவுக்கு வந்தது. நான் மிகவும் நேசிக்கும், என்னுடைய ஒரு குட்டித் தம்பியும், அவனை விட்டு ஒவ்வொரு தடவையும் நான் பயணப்படும்போதெல்லாம், எந்த ஒரு வார்த்தையுமே சொல்லாமல், மெளனமாக தனது துக்கத்தை வெளிப்படுத்துவது நினைவில் வந்தது. அப்போது அவன் சின்னப் பையன்). கடைசியாக bus இல் ஏறியபின்னர், எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்து விட்டு, Bus கிளம்பியதும், ஓடி வந்து பின்பக்க கண்ணாடி வழியாகப் பார்த்து, பாட்டியின் சைகை மொழியிலேயே தான் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை நெஞ்சை தடவி காட்டுகிறான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், <strong>அவர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பு மனதை மிகவும் நெகிழ்வடையச் செய்கிறது. </strong></p>
<p>பாட்டியும், பையனும் இயல்பாக இருந்தபோது, படம் பிடிக்கப்பட்டார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். உண்மையிலேயே அப்படித்தான் எடுத்திருப்பார்களோ? நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே மனம் இடம் கொடுக்கவில்லை.</p>
<p>இவையெல்லாம் வார்த்தைப் பூச்சுக்கள் எதுவும் இல்லாமல், படத்தில் வரும் சின்ன சின்ன காட்சிகள் மூலமும், மெளன மொழிகள் மூலமுமே சொல்லி விடுகிறார்கள். அருமையான படம். அனைவரும் பாருங்கள். ஆங்கில மொழிபெயர்ப்புடன் படம் பார்த்தாலும், இந்தப் படத்தைப் பார்க்க எந்த மொழியும் அவசியமே இல்லை.</p>
<hr><h2>5 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comment-598">April 25, 2010</a>, <a href="http://aalamaram.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://aalamaram.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>திரு</a> wrote:</p><p>திரைப்படத்தை அவசியம் பார்க்க வேண்டுமென்று தூண்டுகிறது. அதோடு முதியவர்களின் பாசத்தையும் நினைவூட்டுகிறது...</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comment-600">April 26, 2010</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>ஒவ்வொரு முறை என் அக்கா மகன் எங்கள் அம்மாவைப் பார்க்க ஊருக்கு வரும்போதும் இந்நப் படம் நினைவுக்கு வருகிறது...</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comment-606">May 20, 2010</a>, <a href="http://komanivarma.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://komanivarma.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>மணிவர்மா</a> wrote:</p><p>நல்ல திரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர், உங்கள்  படம் பற்றிய விமர்சனம் சிறப்பு. படம் பார்த்த அனுபவம் கிடைத்தது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comment-608">May 26, 2010</a>, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sundar" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sundar');"  rel='external nofollow' class='url'>சுந்தர்</a> wrote:</p><p>கண்களில் நீர் நிறைந்து விட்டது. அலுவலகத்திலேயே இப்படி என்றால் வீட்டில் வைத்து இந்தப் படத்தைப் பார்த்தால் எப்படி இருக்குமோ தெரியவில்லை. :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comment-611">August 1, 2010</a>, <a href="http://kesavanmarkkandan.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://kesavanmarkkandan.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>Kesavan</a> wrote:</p><p>Dear Mrs. Kalaiyarasi. Thank you very much for reviewing the movie "Jib-Buro". I have seen already and its a heart breaking. Right now i am in Korea and ofcourse i know korean language. I have seen so many korean movies which are awesome. I have experienced different kind of love and romance after seeing korean movies. Korean movies are either fun or heart breaking. Even now some of our directors making movies as like of korean movies. If u want, i can suggest some good korean movies. </p><p></p><p>Kesavan, Seoul, South Korea.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/04/the-way-home/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>குட்டி இளவரசன்!</title>
		<link>http://kalaiarasy.com/2009/11/the-little-prince/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/11/the-little-prince/#comments</comments>
		<pubDate>Mon, 30 Nov 2009 08:43:03 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Kids world]]></category>
		<category><![CDATA[The Little Prince]]></category>
		<category><![CDATA[human nature]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[அன்பு]]></category>
		<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=522</guid>
		<description><![CDATA[&#8216;The Little Prince&#8217; புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் கதை அழகாக பயணிக்கிறது.
The little Prince கதையில, கதையைச் சொல்பவர், தான் 6 வயதில் ஒரு படம் வரைந்ததாகவும், அந்தப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>&#8216;The Little Prince&#8217;</strong> புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் கதை அழகாக பயணிக்கிறது.</p>
<p>The little Prince கதையில, கதையைச் சொல்பவர், தான் 6 வயதில் ஒரு படம் வரைந்ததாகவும், அந்தப் படம் பெரியவர்களுக்குப் புரியவில்லை என்றும் சொல்லிவிட்டு, பெரியவர்களுக்கு எதுவும் இலகுவாக புரியாதென்றும், அவர்களுக்குப் புரியுற மாதிரி எதையும் செய்யுறது இலகுவான காரியமில்லை என்றும் சொல்கிறார். பெரியவர்களுக்கு புரிய வைக்கிறதென்றால், பெரிய விளக்கங்கள் எல்லாம் கொடுக்க வேணுமாம் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . மகள் சில விசயங்களை எனக்கு சொல்ல முயற்சித்துவிட்டு, “என்ன நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்லையா” என்று பொறுமையிழந்து கேட்பதுதான் எனக்கு நினைவில் வந்தது.</p>
<p>ஆறு வயதில தான் வரைந்த படத்தை ஒருவரும் பொருட்படுத்தாமல் விட்டதால, தான் பெரிய ஒரு ஓவியராக வரும் ஆசையை, தனக்கு மிகப் பிடித்த தொழிலை தான் துறந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். பிறகு பெரியவர்களுக்குப் பிடித்த மாதிரி நான் ஒரு விமான ஓட்டியாக ஆகிவிட்டேன் என்கிறார். இந்த இடத்தில மகள் முதன் முதலில் வரைந்த படத்தை மிகவும் கவனமாக வைத்திருந்து, இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளுடைய பாடசாலை வேலைக்காக, &#8216;Time line of my life&#8217; செய்வதற்கு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு முதலும் வரைந்திருந்தாலும் (அல்லது கிறுக்கியிருந்தாலும்), இன்னதுதான் என்று சொல்லி வரைந்த முதல் படங்கள் இவைதான்.</p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2009/11/Untitled.jpg"><img class="alignleft size-full wp-image-443" title="அஞ்சலியின் மரம்" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2009/11/Untitled.jpg" alt="அஞ்சலியின் மரம்" width="189" height="250" /></a></p>
<p>இது ஒரு மரமாம்.</p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2009/11/Untitled2.jpg"><img class="alignleft size-full wp-image-496" title="Untitled" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2009/11/Untitled2.jpg" alt="Untitled" width="217" height="120" /></a></p>
<p>இது ஒரு பெண்மணியின் முகமாம்.</p>
<p>அது மட்டுமில்லை, The Little Prince கதையில அவர் மேலும் சொல்கிறார், பெரியவர்களுக்கு எதையும் எண்களுடன் சேர்த்துத்தான் யோசிக்கத் தெரிகிறதாம். அதுக்கு ஒரு உதாரணமும் சொல்கிறார். ஒரு புதிய நண்பனைப் பற்றி பெரியவர்களிடம் சொன்னால், “அவனது குரல் எப்படி இருக்கும்? அவனுக்கு என்ன விளையாட்டுகள் பிடிக்கும்? அவன் வண்ணத்துப் பூச்சிகள் சேகரிக்கிறானா?” என்றெல்லாம் கேட்பதை விடுத்து, “அவனுக்கு எத்தனை வயது? அவனுக்கு எத்தனை சகோதரர்கள்? அவனது அப்பா எவ்வளவு உழைக்கிறார்?” என்று ஏதாவது எண்களுடன் தொடர்பாகவே பேசிகிறார்களாம். பலர் பேசும்போது இதை உண்மையிலேயே இலகுவாக அவதானிக்க முடியும். வெறும் எண்களையே அவர்கள் மனம் சிந்திக்கிறது. அப்படி பலரும் பேசுவதுடன் நின்று விடாமல், எண்களை நோக்கியே தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றார்கள். குழந்தைகள் உலகம் தனித்துவமானது. எத்தனை எளிமையானது. பெரியவர்களானதும் எப்படி நாமும் குழந்தைகளாக இருந்தோம் என்பது மறந்து போகிறது.</p>
<p>ஒருவர் எத்தனை பெரிய காரியத்தைச் செய்தாலும் சூழலுக்கேற்ற அவரது நடை, உடை, பாவனை முக்கியம் என்பதை, 1909 இல் B-612 என்ற சிறுகோளை கண்டுபிடித்த ஒரு துருக்கி வானியலாளரின் அறிக்கையை, அவர் துருக்கி ஆடையில் சென்று வெளியிட்டபோது முதலில் ஏற்றுக் கொள்ளாதவர்கள், பின்னர் நாகரீகமான உடையில் சென்று வெளியிட்டபோது, அதே அறிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார்.</p>
<p>கதையைச் சொல்பவர் விமான ஓட்டியாக இருக்கையில் ஒரு விபத்தில், யாருமற்ற ஒரு பாலைவனத்தில் தனியாக இருக்க வேண்டி வரும் சூழலில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே அவர் மிகச் சிறிய உருவத்தில் ஒரு குட்டி இளவரசனை சந்திப்பதாகவும், அந்தக் குட்டி இளவரசன் ஒரு குட்டியூண்டு கிரகத்தில் இருந்து வந்தவனாகவும், அந்த குட்டி இளவரசனும், கதை சொல்பவரும் சேர்ந்து செலவளிக்கும் நாட்களிலும், அந்த இளவரசன் சொல்லும் அனுபவங்களையும் வைத்தே கதையும் போகின்றது.</p>
<p>அந்த குட்டி இளவரசன் இவரிடம் ஆடு வரைந்து தரச் சொல்லிக் கேட்கிறார். முதலில் ஒவ்வொரு குறை சொல்லிய பின்னர், ஒரு பெட்டியை வரைந்து, அதனுள் ஆடு இருப்பதாகச் சொல்ல, அது இளவரசனுக்கு பிடித்துப் போவதுடன், புரியவும் செய்வது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பெரியவர்களுக்குப் போல் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாமல் இருப்பதுவே காரணம்.</p>
<p>அந்த குட்டி இளவரசன் கேள்விகளுக்கு சரியாக பதில் கொடுக்காவிட்டாலும், அவன் கூறும் விசயங்களில் இருந்து விமான ஓட்டி சிறிது சிறிதாய் அவனது கோளைப் பற்றியும், அவனது வாழ்க்கை பற்றியும் புரிந்து கொள்கிறார். குட்டி இளவரசன் ஒரு பூவை தனது இடத்தில் வளர்த்து வந்ததையும், அதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டதையும், ஆனால் அந்த பூ சொன்ன சில வார்த்தைகள் அவனது மனதை சிறிதாய் காயப்படுத்தியதையும் புரிந்து கொள்கிறார். ஆனாலும் அவர் வரைந்து கொடுக்கும் ஆடு ஒருவேளை தனது பூவை உணவாக எடுத்துக் கொள்ளுமோ என்று இளவரசன் பயப்படுகின்றான். அதனால் ஆட்டுக்கு வாய்க்கட்டு ஒன்றையும், அத்துடன் பூவைச் சுற்றி வேலியும் வரைவதன் மூலம் பூவை பாதுகாக்க உதவுவதாக விமான ஓட்டி இளவரசனுக்கு உறுதி அளிக்கிறார்.</p>
<p>அந்த குட்டி இளவரசன் பூமிக்கு வந்து இவரைச் சந்திக்க முன்னர் வெவ்வேறு கிரகங்களுக்குப் போய் வந்த அனுபவங்களில் பல்வேறுபட்ட மனிதர்களின் இயல்புகளை கதை காட்டுகின்றது.</p>
<p>முதலாவது கிரகத்தில், தன்னைத் தவிர வேறெவரும் இல்லாத கிரகத்தை ஆட்சி செய்ய நினைக்கும் ஒரு அரசன். அரசனின் கட்டளைகள் விசித்திரமானவை. ஒருவரால் எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே கட்டளையாகப் பிறப்பிக்கும் அபூர்வ, புரிந்துணர்வுள்ள அரசன். இந்த குட்டி இளவரசன் எதை செய்ய விருப்பமில்லை என்றாலும், அதுபற்றிய தனது கட்டளையை மீளப் பெறும் அந்த அரசன், குட்டி இளவரசன் செய்ய விரும்புவதை மட்டுமே கட்டளையாக சொல்கிறான். அந்த அரசன் சொல்லும் முக்கியமான ஒரு விசயம்<strong> &#8216;எவருக்கும் இன்னொருவரை judge பண்ணுவதை விட தன்னைத்தானே judge பண்ணுவதுதான் மிகவும் கடினமானது. எப்போது ஒருவனால் தன்னைத்தானே சரியாக எடைபோட /சீர்தூக்கிப் பார்க்க முடிகிறதோ, அப்போதே அவன் ஒரு உண்மையான அறிவுள்ள/விவேகமுள்ள மனிதனாகிறான்&#8217;</strong>. ஆனால் அரசனுக்கு தனது அதிகாரத்தை மற்றவர்மேல் செலுத்துவதில் அத்தனை விருப்பம். சிலருக்கு தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் மற்றவர் இருப்பதில் அத்தனை விருப்பம். ஏன் குடும்ப அமைப்புக்களிலும் இதை நாம் பார்க்க முடிகிறதே. வெறும் அதிகாரம் செலுத்த உரிமை கொடுத்தாலே அவர்கள் சமாதானமாகி இருப்பார்கள். அந்தக் குட்டி இளவரசன் அந்த கிரகத்திலிருந்து புறப்பட ஆயத்தமாகும்போது, அரசன் அவனைத் தடுக்கிறான். மறுக்கும் இளவரசனிடம் “உன்னை இந்தக் கிரகத்தின் Ambassador ஆக்குகிறேன் என்கிறான். குட்டி இளவரசன் நினைக்கிறான் ‘இந்த பெரியவர்களே விசித்திரமானவர்கள்தான்&#8217;.</p>
<p>அகம்பாவம் அல்லது போலித் தற்பெருமை கொண்ட ஒரு மனிதனை அடுத்த கிரகத்தில் இளவரசன் சந்திக்கிறான். தன்னைப்பற்றி மற்றவர் புகழ்பாடுவது தவிர வேறெதையும் கேட்க அவனுக்கு ஆர்வமில்லை. இதுக்கு உதாரணமாக தற்போதைய பல அரசியல் தலைவர்கள் மனதில் வந்து போனார்கள். அந்த தற்பெருமைக்காரனைப் பார்த்து இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் நிச்சயமாய் விநோதமானவர்கள்தான்&#8217;.</p>
<p>அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். அவன் ஏன் குடிக்கிறான் என்று கேட்டால், தான் குடிப்பதையிட்டு வருந்துவதாயும், அந்த கவலையை மறக்க குடிப்பதாயும் கூறுகிறான். சிலபேர் குடிப்பதற்காகவே தமக்கு கவலையை /காரணத்தை உருவாக்கிக் கொள்வதை கண்டிருக்கிறேன். ஊரில் வாழ்ந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரன். தினமும் குடித்து விட்டு வந்து ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, மனைவிக்கு அடிப்பது. மனைவி தன் பெற்றோரிடம் போய் விட்டால், மறுநாள் அந்தக் கவலையில் குடிப்பதாகச் சொல்லி குடிப்பது. அல்லது தங்கைமாரிடம் ‘உங்களாலதான் அவள் போய்ட்டாள்&#8217; என்று சொல்லி அடிப்பது. &#8216;சே என்ன மனிதன் இவன்&#8217; என்று வெறுப்பாக இருக்கும். கவலையில் குடிக்கிறேன் என்பவர்களிடம் கேட்கத் தோன்றும், &#8216;குடித்த பின்னர் கவலையில்லாமல் இருக்கிறீர்களா&#8217; என்று. குடித்துவிட்டு கவலையில் அரற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள். அந்தக் கிரகத்தை விட்டு வெளியேறும்போது, இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் சந்தேகமேயில்லாமல் மிக மிக விசித்திரமானவர்கள்தான்&#8217;.</p>
<p>அதற்கடுத்து குட்டி இளவரசன் செல்லும் கிரகத்தில் சந்திப்பது வணிகர் ஒருவரை. குட்டி இளவரசன் வந்ததைக் கூட நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல், ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் நட்சத்திரங்கள் தனக்கு சொந்தமானவை என்றும் அவற்றை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பதிலுமே பொழுதை கழிக்கிறார். குட்டி இளவரசனுடன் பேசக் கூட நேரமில்லாமல் நட்சத்திரம் எண்ணுகிறார். அவருக்கு சொந்தமான அந்த நட்சத்திரங்களை வைத்து அவர் என்ன செய்வார் என்றால் மேலும் நட்சத்திரங்கள் வாங்குவாராம். அவர் தனக்கு &#8216;முடிவுகளை அல்லது பலன்களைப் பற்றி (matters of consequence) மட்டுமே அக்கறை&#8217; என்கிறார். பல பணம் சேர்க்க விரும்பும் பணக்காரர்கள் கதையும் இதுதானே? ஓடி ஓடி கோடிக்கணக்கில் சேர்க்கிறார்கள். பேசக் கூட நேரமில்லாமல் அப்படி சேர்ப்பதில்தான் என்ன பலன்? இளவரசன் அவரிடம் ”அதெப்படி நட்சத்திரங்கள் உனக்கு சொந்தமாகும்?” என்று கேட்பதற்கு அவர் கூறும் பதில் “யாருக்கும் சொந்தமில்லாத வைரத்தை நீ கண்டெடுத்தால், அது உனக்கு சொந்தமாகும். யாருக்கும் சொந்தமற்ற தீவை நீ கண்டு பிடித்தால் அது உனக்குச் சொந்தமாகும். எவருக்கும் வராத யோசனை உனக்கு வந்தால், அதற்கான உரிமை உனக்குத்தான். அதேபோல் நட்சத்திரங்களை உரிமையாக்கும் எண்ணம் எனக்கே முதலில் வந்ததால், நட்சத்திரங்கள் எனக்கே சொந்தமானவை&#8217;. எமக்கு பிடித்தவற்றை நமக்கே சொந்தமாக்கிக் கொள்ளவே விரும்புகிறோம். அங்கிருந்து புறப்படும் இளவரசன் தனக்குள் ‘பெரியவர்கள் மிக நிச்சயமாய் அசாதாரணமானவர்கள்தான்&#8217; என்று நினைத்தபடி போகின்றான்.</p>
<p>இன்னொரு சிறுகோளில், கடமையே கண்ணாக இருக்கும் ஒரு விளக்குப் போட்டு அணைப்பவரை சந்திக்கிறான் குட்டி இளவரசன். ஆரம்பத்தில் அந்தக் கோள் மெதுவாகச் சுற்றியபோது இரவில் விளக்குப் போட்டு, காலையில் அணைத்துக் கொண்டிருந்த அவர், அந்தக் கோள் மிக விரைவாக சுற்ற ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து விளக்குப் போடுவதும், அணைப்பதுமாகவே இருக்கிறார். அந்த கோள் ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை முழுச்சுற்றை செய்வதால், அவருக்கு ஓய்வெடுக்கவே நேரமற்றுப் போகிறது. குட்டி இளவரசனுக்கு அவனே அபத்தமில்லாதவனாகத் தெரிகின்றான். காரணம் <strong>அவன் தன்னைப்பற்றி மட்டும் எண்ணாமல் வேறு விடயங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றான்</strong>. எனக்கும்தான் அவனை மிகவும் பிடித்துப் போனது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . குட்டி இளவரசனுக்கு அவனுடன் நட்பாகி அங்கேயே தங்கி விட விருப்பமிருந்தாலும், அந்த கோள் மிகச் சிறியதாக, இரண்டு பேருக்கு இடமற்று இருப்பதால், தனது பயணத்தை தொடர்கின்றான்.</p>
<p>அதற்கும் அடுத்த கிரகத்தில் அவன் சந்தித்தது ஒரு புவியியல் ஆராய்ச்சியாளர். அவர் தனக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று நம்புகிறார். ஆனால் ஒரே இடத்தில் இருந்தபடியே எல்லாவற்றையும் செய்யப் பார்க்கிறார். மற்றவர்களின் உழைப்பில் தான் பெயரைப் பெற்றுச் செல்ல விரும்பும் மனிதர்களை நினைவு படுத்தினார். சில ஆராய்ச்சியாளர்களும் இப்படி இருக்கிறார்கள். தமக்கு கீழ் வரும் மாணவர்களின் உழைப்பில் தாம் பெயரைத் தட்டிச் செல்வார்கள்.  சில அமைப்புக்கள், நிறுவனங்களின் பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் தாம் எதையுமே செய்யாமல், கீழ் உள்ளவர்களின் உழைப்பை தமதாக பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். அந்த புவியியலாளரே குட்டி இளவரசனுக்கு பூமிக்குப் போகும்படி அறிவுரை சொல்கின்றார்.</p>
<p>இறுதியில் பூமிக்கு வரும் அந்தக் குட்டி இளவரசன் முதலில் ஒரு பாம்பை சந்திக்கிறான். பாம்பிடம் மனிதர்கள் எங்கே என்று விசாரிக்க, பாம்பு அது பாலைவனமென்றும், மக்கள் அங்கே இல்லை என்றும், பூமி மிகப் பெரியது என்றும் கூறுகின்றது. அதன் பின்னர் ஒரு பூக்கன்றை கண்டு ‘மனிதர்கள் எங்கே?&#8217; என்று விசாரிக்கிறான். அதற்கு பூக்கன்று, மனித இனம் அழிந்துகொண்டு போகும் இனமாக கூறுகின்றது. ஒருவேளை எதிர்காலத்தை கற்பனையில் கண்டு எழுதியிருப்பாரோ? <strong>மனிதர்களுக்கு வேர்கள் இல்லாமையால், அவர்கள் காற்றோடு எடுத்துச் சொல்லப்படுவதாகவும், அதனால் அவர்களது வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாய் இருப்பதாகவும் அந்த பூக்கன்று சொல்கின்றது.</strong></p>
<p>பின்னர் ஒரு மலையில் ஏறும் அந்தக் குட்டி இளவரசனுக்கு அவன் சொல்லும் வார்த்தைகளே எதிரொலியாக கேட்கின்றது. அப்போது அந்தக் குட்டி இளவரசன் <strong>‘இந்தப் பூமி மிகவும் வரண்டதாகவும், அங்குள்ளவர்கள் கற்பனையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்&#8217; என்று நினைத்துக் கொள்கின்றான். </strong>பிறகு நெடுந்தூரம் நடந்து சென்று, குட்டி இளவரசன் ஒரு பெரிய ரோசாப்பூத் தோட்டத்தை அடைகின்றான். அப்போது தன்னுடைய கிரகத்தில் தனியாகத் தான் விட்டு வந்த பூவை நினைக்கிறான். அந்தப் பூவோ தான் மட்டுமே இந்த முழு பிரபஞ்சத்திலும் இந்த வகையிலுள்ள ஒரே ஒரு பூ எனக் கூறியிருந்தது. அவனும் தன்னிடம் தனித்துவமான ஒரு ஒரு பொருள் இருப்பதாக பெருமை கொண்டிருந்ததையும், ஆனால் அது ஒரு பொதுவான ரோசாதான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். அதேவேளை அந்த ரோசாவை தனியே விட்டு வந்ததை எண்ணி கவலையும் கொள்கின்றான்.</p>
<p>அதன் பின்னர் அவன் சந்திக்கும் ஒரு நரி அவனுக்கு பெரிய தத்துவத்தையே சொல்லிக் கொடுக்கிறது. நரி அவனை, தன்னுடன் நட்பாகும்படியும், <strong>மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையை இழந்து விட்டார்கள் என்றும், தயார் செய்யப்படும் பொருட்களை (ready-made) கடைகளில் வாங்குகின்றார்கள், ஆனால் நட்பை வாங்கும் கடைகள் இல்லாமையால் நட்பை மறந்து விட்டதாகவும் கூறுகின்றது.</strong> நட்பாவதற்கு எதையும் பேசாமல் இருப்பதே நல்லது என்றும், <strong>வார்த்தைகளே மனவேற்றுமைகளுக்கு காரணம்</strong> என்றும் அந்த நரி சொல்கின்றது. ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அண்மித்து வருவதனால் நட்பாகலாம் என்று நரி சொல்வது போலவே, குட்டி இளவரசன் நரியுடன் நட்பாகின்றான். ஆனால் குட்டி இளவரசன் போக வேண்டிய நேரம் வரும்போது நரி நட்பை விட்டுப் பிரிவதை எண்ணி கவலை கொள்கின்றது. அப்போது, குட்டி இளவரசன் ”நான் உனக்கு எந்த கெடுதலும் செய்ய நினைக்கவில்லை. ஆனால், நீதான் என்னை நட்பு கொள்ளச் சொன்னாய்” என்று நரியிடம் சொல்கின்றான். நரியோ “ஆம், அது அப்படித்தான். நீ இப்போது அந்த ரோசாத் தோட்டத்துக்கு போய் வா” என்று சொல்கிறது. அங்கே போனபோதுதான் அவனுக்குப் புரிகிறது, &#8216;அங்கே ஆயிரக் கணக்கில் ரோசாக்கள் இருந்தாலும், அவனது ரோசா தனித்துவமானதுதான். காரணம் அந்த ரோசாமேல் அவன் கொண்டிருக்கும் பாசம். நரியிடம் நட்பு கொண்டதாலேயே, பார்க்கும் எல்லா நரிகளைப் போல அல்லாமல், குறிப்பிட்ட அந்த நரி தனித்துவமானது ஆகியதைப் போல&#8217;. அவன் மீண்டும் நரியிடம் வந்தபோது நரி ஒரு இரகசியத்தை சொல்வதாக சொல்கின்றது <strong>“இதயத்தால் மட்டுமே சரியாகப் பார்க்க முடியும். கண்களுக்கு முக்கியமானவை தெரியாது. மனிதர்கள் இந்த உண்மையை மறந்து விட்டார்கள். </strong>நீ உனது ரோசாவுக்காக செலவு செய்த நேரமே, அந்த ரோசா உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும். உனக்கு அந்த ரோசாவில் உள்ள அன்பினால், நீ அந்த ரோசாவுக்கு பொறுப்புள்ளவனாகின்றாய்”. நாங்கள் யார்மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறோமோ, அவர்களே எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாகவும், தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.</p>
<p>பின்னர் ஒரு தொடர்வண்டி நிலையத்தை அடையும் அந்தக் குட்டி இளவரசன், ஒரு தொடர்வண்டியில் ஏராளமான மனிதர்கள் போவதைக் கண்டு ”இவர்கள் எங்கே அவசரமாகப் போகின்றார்கள்?” என்று அங்கிருப்பவரிடம் கேட்க, அவர் ”அது யாருக்கும் தெரியாது” என்று சொல்கின்றார். பின்னர் மறு புறமிருந்து ஒரு தொடர் வண்டி வர, ”போனவர்கள் ஏன் திரும்பி வருகின்றார்கள்?” என்று கேட்க, ”இவர்கள் வேறு மனிதர்கள்” என்று பதில் கிடைக்கிறது. ”ஏனப்படி” என்றதற்கு, “அவர்கள் தாம் இருக்குமிடத்தில் திருப்தி அடைவதில்லை” என்கின்றார். ‘இக்கரை மாட்டுக்கு, அக்கரை பச்சை&#8217; <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . அப்போது குட்டி இளவரசன் நினைக்கிறான், &#8216;குழந்தைகளுக்கு மட்டுமே தமக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும்&#8217;.</p>
<p>ஒரு வியாபாரி, தாகம் எடுப்பதைத் தவிர்க்க குழிகைகள் விற்பதைக் காண்கின்றான். ஏனிப்படி என்று கேட்டால், ”தாகம் தீர்க்க எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தில் விரும்பியதைச் செய்யலாம்” என்று வியாபாரி சொல்கின்றார். அப்போது அந்த குட்டி இளவரசன் நினைக்கிறான், அப்படி தனக்கு அந்த நேரம் மிச்சப்படுமானால், &#8216;அந்த நேரத்தில் நன்னீர் கிடைக்கும் இடத்தை நோக்கி அமைதியாக நடந்து செல்லலாம்&#8217; என்று. நாம் சில சமயம் (அல்லது பல சமயம்) நேரத்தை மிச்சம் பிடிப்பதற்கு ஏதேதோ செய்வோம். ஆனால் அந்த மிச்சம் பிடித்த நேரத்தில் உருப்படியாக எதையும் செய்வதில்லை.</p>
<p>இந்த அனுபவங்களைக் கேட்ட விமான ஓட்டி (கதையை சொல்ல ஆரம்பித்தவர்), குட்டி இளவரசனின் அனுபவங்கள் சுவாரசியமானவை என்கிறார். அந்த அனுபவங்கள் மூலம் நிறைய உண்மைகளை அந்த குட்டி இளவரசன் அவருக்குப் புரிய வைக்கிறான். சில சமயம் எல்லோரையும் ஒரே விதமாகப் பார்த்து, ஒரே விதமாக நட்புகொள்வது நல்லதுதான். இந்த கருத்து வந்த இடத்தை வாசித்தபோது என் செல்ல குட்டி மகள் ஒருநாள் என்னிடம் வந்து “அம்மா, ஒரு best friend இருக்கிறது நல்லதா? அல்லது எல்லாரோடயும் ஒரே மாதிரி friends ஆ இருக்கிறது நல்லதா?” என்று கேட்டது நினைவில் வந்தது. நான் அதற்கு பல விதமாய் யோசித்தேன். அதற்கு அவளே சொன்னாள் “நான் நினைக்கிறன் எல்லாரோடயும் friends ஆ ஒரே மாதிரி இருக்கிறதுதான் நல்லது. ஏனெண்டா நாங்கள் ஒராளோட மட்டும் best friend ஆ இருந்தால், அவ எங்கயாவது போய்டால், கவலையா இருக்கும்தானே?”. நல்ல ஆழமாத்தான் யோசிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எல்லோரிடமும், எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாதே? அதனால் இரண்டும்தான் சரியாகத் தெரிகிறது. என்னுடைய ஒரு நெருங்கிய தோழியை விட்டுப் பிரிந்து கவலைப்பட வேண்டி வந்த ஒரு தருணத்தில் நான் எடுத்த முடிவும் எனது மகளுடையதுதான் என்பதும் கூடவே நினைவு வந்தது. அதற்குப் பின்னர் எவருடனும் நெருங்கி அன்பு செலுத்துவதில்லை என்பதுதான் அந்த முடிவு. ஆனால் அதை என்னால் சரி வர செய்ய முடியவில்லை என்பதும் உண்மையே.</p>
<p>[சரி என்ரை கதையை விட்டுட்டு குட்டி இளவரசனின் கதையின் முடிவுக்கு வாறன் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .]</p>
<p>அந்தக் குட்டி இளவரசனை காண முடியாமல் போன ஒரு காலைப் பொழுதில் அந்த விமான ஓட்டி, அவன் தனது கோளுக்கு திரும்பிப் போய், தனது ரோசாவை கவனமாகப் பார்த்துக் கொள்வான் என்று நம்புவதாக கதையை முடிக்கிறார்.<br />
<strong><br />
Matters of importance must be given the priority over the matters of consequence.</strong></p>
<p>எனக்கு கதை மிகவும் பிடித்தது. கதை இணையத்தில் கிடைக்கிறது. <a href="http://www.cs.swan.ac.uk/~cswill/The_little_prince.pdf">The Little Prince (pdf file)</a> ஐத் தரவிறக்கிப் படித்துப் பாருங்களேன்!<br />
நான் இந்தக் குட்டி இளவரசன் கதை வாசிக்க முன்னர் என் குட்டித் தேவதை தனது &#8221;கற்பனை நாடு&#8217; பற்றிய கதை ஒன்று சொன்னாள். அந்த அழகான நாடுபற்றி அடுத்த பதிவில்&#8230;&#8230;</p>
<hr><h2>1 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/11/the-little-prince/#comment-501">December 16, 2009</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>நானும் குட்டி இளவசரன் படித்த பிறகு குழந்தைகளின் உலகத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.</p><p></p><p>ஆனால், கூடி வரும் ஊடக ஆக்கிரமிப்புகள் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைச் சீக்கிரமே சாகடித்து விடுகின்றன :(</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/11/the-little-prince/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>வயதும், அனுபவமும்!!</title>
		<link>http://kalaiarasy.com/2009/11/age-experience/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/11/age-experience/#comments</comments>
		<pubDate>Thu, 12 Nov 2009 14:52:03 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[human nature]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=431</guid>
		<description><![CDATA[உண்மையிலேயே வயதுக்கும், அனுபவத்துக்கும் தொடர்பிருக்கா?
நம்மைவிட பெரியவர்களின் பார்வையில், ”அவருடைய (அல்லது என்னுடைய) வயதென்ன? அவருக்கிருக்கிற (அல்லது எனக்கிருக்கிற) அனுபவம், முதிர்ச்சி உனக்கிருக்கா?” என்ற வார்த்தைகளையும், நம்மைவிட சிறியவர்களின் பார்வையில்,  ”உங்களுக்கு என்னைவிட வயசும் அனுபவமும் அதிகம்தானே, நீங்கதான் சொல்ல வேணும்” என்ற வார்த்தைகளையும், வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒவ்வொருவரும் கேள்விப்பட்டிருப்போம், இல்லையா? அது உண்மைதானா என்பதில் இன்றைக்கு எனக்கு பலத்த சந்தேகம் வந்திருக்கு  .
வயசென்னவோ எங்களைவிட மிகவும் அதிகமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் நம்மைவிட அதிகமானவர்களை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>உண்மையிலேயே வயதுக்கும், அனுபவத்துக்கும் தொடர்பிருக்கா?</p>
<p>நம்மைவிட பெரியவர்களின் பார்வையில், ”அவருடைய (அல்லது என்னுடைய) வயதென்ன? அவருக்கிருக்கிற (அல்லது எனக்கிருக்கிற) அனுபவம், முதிர்ச்சி உனக்கிருக்கா?” என்ற வார்த்தைகளையும், நம்மைவிட சிறியவர்களின் பார்வையில்,  ”உங்களுக்கு என்னைவிட வயசும் அனுபவமும் அதிகம்தானே, நீங்கதான் சொல்ல வேணும்” என்ற வார்த்தைகளையும், வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒவ்வொருவரும் கேள்விப்பட்டிருப்போம், இல்லையா? அது உண்மைதானா என்பதில் இன்றைக்கு எனக்கு பலத்த சந்தேகம் வந்திருக்கு <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>வயசென்னவோ எங்களைவிட மிகவும் அதிகமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் நம்மைவிட அதிகமானவர்களை சந்தித்திருந்தாலும், அவர்கள் வாழ்க்கை அனுபவம் மிக அதிகமாக இருந்தாலும், ஒருவரைப் பற்றி அல்லது ஒரு விடயத்தைப் பற்றி எடை போடுவதில் அவர்களை விட நாம் சில (அல்லது பல சமய்ங்களில்) மிகச் சரியாக இருக்க முடியும் என்பது நான் இன்றைக்கு கண்டு பிடித்த உண்மை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒருவருடன் அதிக காலம் ஒன்றாக வாழ்ந்தவரை விட, ஒரு சில நாட்கள் மட்டுமே நேரில் கண்டு தெரிந்த எனக்கு அவரைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்கிறது என்பதுதான். எப்படி இது சாத்தியம்? ஏனோ அவர் இப்படித்தான் நடப்பார் என்பதை நான் முன் கூட்டியே கூறினாலும் நம்பத் தயாராக இல்லாமல் இருந்தார்கள். ஆனால் நான் சொன்னதே நடந்தது.</p>
<p>இன்று நடந்த ஒரு நிகழ்ச்சி இந்த பலத்த சந்தேகத்தை எழுப்பியிருந்தாலும், இதைப் பல தடவைகள் உணர்ந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.</p>
<p>* என்ன ஏதோ தலையுமில்லாம, காலுமில்லாம கதை சொல்லிக் கொண்டு போறேனோ?? இதுல நான் சொல்ல வாறது என்னெண்டா, வயசுக்கும் அனுபவத்துக்கும் தொடர்பில்லை என்பதுதான் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . &#8216;அதுக்கென்ன இப்ப&#8217; எண்டு கேட்டால், இனிமேல் மகளிடம், ”என்ரை வயசென்ன, இதெல்லாம் எனக்குத் தெரியாதா?” எண்டு சொல்லுறதை நிப்பாட்டப் போறன். நல்ல முடிவு, என்ன? <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/11/age-experience/#comment-454">November 13, 2009</a>, ஷ்ரேயா wrote:</p><p>என்ன நடந்தது என்டு தெரியாம ஒன்டும் சொல்லேலாமக் கிடக்கு :D</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/11/age-experience/#comment-455">November 13, 2009</a>, கலை wrote:</p><p>நடந்தது என்னெண்டு தெரியாட்டாலும், நடக்கப் போறது என்னெண்டு விளங்கிச்சுதானே? அதான் அஞ்சலியிட்ட இனிமேல், ”எனக்குத் தெரியாதா இதெல்லாம்?” என்றோ, ”உங்கட வயசெல்லாம் தாண்டித்தான் நாங்கள் வந்தம்” என்றோ சொல்லாமல் இருக்கிறதுதான் நடக்கப் போவது :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/11/age-experience/#comment-457">November 13, 2009</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>உண்மை தான். சில பேர் வயதுக்கு மீறிய அப்பாவியாகவும் சில பேர் பிறக்கையிலேயே விசத்துடனும் பிறக்கிறார்கள் :) ஆட்களை எடை போடுவது ஒரு கலை.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/11/age-experience/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>குழந்தை வளர்ப்பு!</title>
		<link>http://kalaiarasy.com/2009/10/parenting/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/10/parenting/#comments</comments>
		<pubDate>Wed, 07 Oct 2009 22:12:27 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=414</guid>
		<description><![CDATA[இன்றைக்கு குழந்தை வளர்ப்புபற்றி ஒரு பேச்சு வந்தது.
ஒவ்வொரு குழந்தையும் வளர வளர பிரச்சனை கூடிக் கொண்டே போவதாக ஒருவர் குறைப்பட்டார். உண்மையில் பிள்ளைகளால் பிரச்சனை என்பதை விட, நாமே அதை பிரச்சனையாக உருவாக்கிக் கொள்கிறோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.
”நாமெல்லாம் இப்படியா இருந்தோம். அப்பா, அம்மா சொல்வதெல்லாம் கேட்டு அப்படியே இருக்கவில்லையா” என்றார். நாம் வாழ்ந்த காலம், இடம், சூழ்நிலை எல்லாவற்றையும், தற்போதைய காலம், சூழல், இடத்துடன் எப்படி ஒப்பிட்டுப் பேச முடிகிறது. எத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது, குழந்தைகளில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இன்றைக்கு குழந்தை வளர்ப்புபற்றி ஒரு பேச்சு வந்தது.</p>
<p>ஒவ்வொரு குழந்தையும் வளர வளர பிரச்சனை கூடிக் கொண்டே போவதாக ஒருவர் குறைப்பட்டார். உண்மையில் பிள்ளைகளால் பிரச்சனை என்பதை விட, நாமே அதை பிரச்சனையாக உருவாக்கிக் கொள்கிறோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.</p>
<p>”நாமெல்லாம் இப்படியா இருந்தோம். அப்பா, அம்மா சொல்வதெல்லாம் கேட்டு அப்படியே இருக்கவில்லையா” என்றார். நாம் வாழ்ந்த காலம், இடம், சூழ்நிலை எல்லாவற்றையும், தற்போதைய காலம், சூழல், இடத்துடன் எப்படி ஒப்பிட்டுப் பேச முடிகிறது. எத்தனை வேறுபாடுகள் இருக்கும்போது, குழந்தைகளில் இயற்கையாக இருக்கக் கூடிய வேறுபட்டை எப்படி உணர முடியாமல், ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.</p>
<p>வளர்ந்து வரும் குழந்தைகளை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை என்றும், அவர்களை இப்படிச் செய்யாதே, அப்படிச் செய்யாதே என்றால் கேட்கிறார்கள் இல்லை என்றும், அவர்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார். நான் சொன்னேன், &#8220;இந்த புலம்பெயர் சூழலில், இது பெற்றோருக்கு மட்டுமே பிரச்சனையில்லை. பிள்ளைகளுக்கு அதை விட பிரச்சனை உண்டு. பெற்றோரை அனுசரித்துப் போவதா, அல்லது வேறு கலாச்சாரம் கொண்ட நண்பர்களை அனுசரித்துப் போவதா என்று அவர்கள் நிலையும் கடினம்தான், சிலவற்றை செய்தால் பெற்றோர் வெறுக்கிறார்கள், செய்யாவிட்டாலோ நண்பர்கள் ஒதுக்கி விடுகிறார்கள், எல்லாவற்றையும் சமநிலைப்படுத்தி செய்ய வேண்டிய கட்டாய சூழல் பிள்ளைகளுக்கு&#8221; என்று.</p>
<p>இப்போது வந்து Google Reader ஐ திறந்தால், முதலில் கண்ணில் பட்ட இடுகை <a href="http://www.nesamudan.com/blog/2009/10/07/rulesofparentin/"><strong>‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு</strong></a>. அங்கே ஒரு அறிமுகம் மட்டுமே கிடைத்தது. எனவே Google இல் தேடி, Richard Templar எழுதிய, அந்த <a href="http://www.pearsoned.co.uk/Bookshop/detail.asp?item=100000000245402">100 எளிய விதிகளையும்</a> (விளக்கமாக இல்லாவிட்டாலும்) பார்த்துவிட்டேன். விளக்கமாக பார்க்கும் ஆவலை தூண்டியுள்ளது. புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும்.</p>
<p>இன்று பேசியபோது குறைப்பட்டுக் கொண்ட அந்த நபர், குழந்தைகளை எந்தவொரு வேலையும் வீட்டில் தான் செய்ய விடுவதில்லை என்றும், அவர்கள் தங்களுடன் இருக்கும்வரை எதுவும் செய்து சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்றும் நினைப்பதுடன், அதை பெருமையாகவும் எண்ணுபவர். அப்படி செய்வதால் பிள்ளைகள் தமது சுயசார்பு (வெங்கடேஷ் க்கு நன்றி <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  தமிழ்ச் சொல்லுக்கு), நிலையை விரைவில் பெறுவதற்கான வழியை அடைத்து விடுகிறோம் என்றுதான் எனக்குத் தோன்றியது. இதுபற்றி பல தடவைகள் அவருக்கு எடுத்துக் கூறியும் அவர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.</p>
<p>அன்றொருநாள் அவரது மகளிடம் (வயது 18 ஆகி விட்டது), பேசிக் கொண்டிருந்தபோது, ”அம்மா எதுக்கு இருக்கிறா செய்து தரத்தானே. இதெல்லாம் செய்வது அம்மாவின் கடமை” என்று சொல்கிறார். எனக்கென்னவோ அப்படி சொன்னது மகளின் குற்றமல்ல. அப்படி நினைக்கும்படி செய்யும் பெற்றோரின் தவறுதான் என்றே தோன்றியது. நான் அவருக்கு சில விடயங்களை சொல்லி புரிய வைக்க முயன்றேன்.</p>
<p>இன்னொருவர் கூறினார், சில குழந்தைகள் நமக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு, தனது (வெளிநாட்டு) நண்பர்கள் வீட்டில் இப்படித்தான் என்று கூறி தமது பொறுப்பை தட்டிக்கழிக்கப் பார்க்கிறார்கள் என்று. அதுவும் உண்மைதான். சில பிள்ளைகளும் புத்திசாலிகள்தான் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . சில விசயங்களுக்கு தமது வெளிநாட்டு நண்பர்களை உதாரணம் காட்டி, அவர்கள் மாதிரி தாமும் செய்ய வேண்டும் என்பவர்கள், தமக்கு சாதகமாக வரக் கூடிய வேறு விடயங்களில் இது நமது கலாச்சாரம், அதன்படி செய்யலாம் என்கிறார்கள். பெற்றோரின் உதவியுடன் வாழ்வது அவர்களுக்கு இலகுவான முறையாக இருக்கிறது.</p>
<p>நான் அறிந்த அளவில், நோர்வே நாட்டினர் அதிகமானோர் (வேறு எதைச் சரியாக செய்கிறார்களோ, இல்லையோ <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ) தமது பிள்ளைகளை சுயசார்பு நிலையில் வளர்ப்பதில் வெற்றியே கண்டிருக்கிறார்கள். பொதுவாக 18 வயதில், பிள்ளைகள் தாமாகவோ, சில சமயம் பெற்றோரின் ஊக்கப்படுத்துதலாலோ, தனியாக சென்று வாழத் தொடங்குகிறார்கள். என்னுடன் வேலைபார்க்கும் ஒருவரின் மகன், அவர்களுடைய வீட்டிலேயே, basement apartment இல், பெற்றோருக்கு வாடகை கொடுத்து வாழ்கிறார். அதனால் பெற்றோருக்கு அவர்மேல் அக்கறையில்லை, அல்லது சரியான அன்பில்லை என்று சொல்லவும் முடியாது. அந்த அம்மாவும் நானும் ஒரே அறையில் வேலை செய்வதால் அவரை என்னால் நன்றாக கவனிக்க முடிகிறது.  அடிக்கடி பிள்ளைகளுக்கு தொலைபேசி கதைப்பதும், அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் காட்டும் அக்கறையும், அவரது அன்பை சொல்கிறது. ஏதோ ஒரு பிரச்சனையில் அன்று மகள் தொலைபேசியில் எடுத்துச் சொன்னபோது, அதற்கு தன்னால் முடிந்த புத்திமதியையெல்லாம் பொறுமையுடன் கூறிவிட்டு, அவர் இறுதியில் சொன்னது இன்னும் நினைவில் நிற்கிறது. அவர் சொல்கிறார் ”இது நான் உனக்கு கூறக் கூடிய புத்திமதி மட்டுமே. ஆனால் பிரச்சனைக்கேற்றவாறு, உன் மனநிலைக்கு ஏற்றவாறு முடிவெடுத்து, செயலாற்ற வேண்டியது நீதான்.” என்று.</p>
<p>இப்படி நம்மில் எத்தனைபேர் நினைக்கிறோம். &#8216;நாங்கள் சொல்கிறோம், பிள்ளைகள் கேட்கத்தான் வேண்டும். நாம் அவர்களுக்கு நன்மைக்குத்தானே சொல்வோம். இத்தனை அன்பு வைத்திருக்கிறோம், அவர்களுக்காக என்னவெல்லாம் செய்கிறோம். இதிலும் நாம் சொல்வதைக் கேட்டால் என்ன?” இதுதான் நம்மில் பலரின் மனநிலை. அவர்களுக்கு எது நன்மை என்பதை அவர்களே உணர்ந்து செய்யும் மனநிலையில் அவர்களை விடுவதுதானே நல்லது.</p>
<p>பிள்ளையிடமே வாடகை வாங்குவதெல்லாம் சரியா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கெல்லாம் என்னால் போக முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் தன்காலில் தானே நிற்பதற்கான ஒரு நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதில் இதுவும் ஒரு முறையே என்பதை ஏற்காமலும் இருக்க முடியவில்லை. சில விசயங்கள் நமக்கு மிகவும் குழப்பமாகத்தான் இருக்கிறது. நாம் வளர்ந்த சூழல் நம்மை இப்படி குழப்புகிறது என நினைக்கிறேன்.</p>
<p>தற்போதைய போட்டிகள் நிறைந்த அவசர யுகத்தில், எவ்வளவுக்கெவ்வளவு பிள்ளைகள் தாமே சுயமாக முடிவெடுக்கவும், தன் சொந்தக் காலில் நிற்கவும் பழக்கி விடுகிறோமே, அவ்வளவுக்கவ்வளவு பிள்ளைக்கு நல்லது என்றே நானும் நம்புகிறேன்.</p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/10/parenting/#comment-430">October 8, 2009</a>, <a href="http://adaleru.wordpress.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://adaleru.wordpress.com');"  rel='external nofollow' class='url'>அடலேறு</a> wrote:</p><p>//பெற்றோரை அனுசரித்துப் போவதா, அல்லது வேறு கலாச்சாரம் கொண்ட நண்பர்களை அனுசரித்துப் போவதா என்று அவர்கள் நிலையும் கடினம்தான், சிலவற்றை செய்தால் பெற்றோர் வெறுக்கிறார்கள், செய்யாவிட்டாலோ நண்பர்கள் ஒதுக்கி விடுகிறார்கள், எல்லாவற்றையும் சமநிலைப்படுத்தி செய்ய வேண்டிய கட்டாய சூழல் பிள்ளைகளுக்கு” என்று// மற்ற கருத்துக்களை என்னால் புரியமுடிந்து உள் வாங்க இயலவில்லை.</p><p>மேலே மேற்கோள் காட்டின வரிகள் மட்டும் தேடலின் முடிவில் மனதில் பதிந்தவை அக்கா. இது வயது குறைவால் வந்த பிணக்குனு நினைக்கற. சிறப்பான , தேவையான பதிவு, பகிர்வு.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/10/parenting/#comment-439">October 18, 2009</a>, <a href="http://sajeek.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sajeek.com');"  rel='external nofollow' class='url'>சயந்தன்</a> wrote:</p><p>நல்ல பதிவு.. பயன்படும் :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/10/parenting/#comment-440">October 18, 2009</a>, கலை wrote:</p><p>நன்றி அடலேறு.</p><p></p><p>சயந்தன், உங்களைப்போல ஆட்களுக்கு பயன்படத்தானே இப்படிப் பதிவெல்லாம் எழுதுறது :). எதுக்கும் அந்த 100 விதிகளை மறக்காம வேண்டிப் படிச்சுப்போடுங்கோ.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/10/parenting/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>பகிர்தல்!</title>
		<link>http://kalaiarasy.com/2009/09/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/09/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Wed, 23 Sep 2009 12:59:26 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=393</guid>
		<description><![CDATA[என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு கவலை தரும் விடயங்கள் எதுவுமே கேட்கப் பிடிக்கவில்லை. எவருக்குமே கவலைப்பட பிடிக்காது, மகிழ்ச்சியாக இருக்கத்தான் பிடிக்கும். அது உண்மைதான் என்றாலும், இவரது நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.
யாராவது அவருடைய சினேகிதிகள் வந்து கதைத்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது எங்களுக்கிடையில் ஏதாவது உரையாடல்கள் வந்தாலும் சரி, கவலை தரக் கூடிய விடயங்கள் வந்தால், உடனே &#8216;வேறு ஏதாவது மகிழ்ச்சியாக நாம் கதைக்கலாமே&#8217; என்கின்றார்.
இன்று அவரது சினேகிதி ஒருவர் வந்து, அவருடைய பிரச்சனைபற்றி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என்னுடன் வேலை செய்யும் ஒரு பெண்மணிக்கு கவலை தரும் விடயங்கள் எதுவுமே கேட்கப் பிடிக்கவில்லை. எவருக்குமே கவலைப்பட பிடிக்காது, மகிழ்ச்சியாக இருக்கத்தான் பிடிக்கும். அது உண்மைதான் என்றாலும், இவரது நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.</p>
<p>யாராவது அவருடைய சினேகிதிகள் வந்து கதைத்துக் கொண்டிருந்தாலும் சரி, அல்லது எங்களுக்கிடையில் ஏதாவது உரையாடல்கள் வந்தாலும் சரி, கவலை தரக் கூடிய விடயங்கள் வந்தால், உடனே &#8216;வேறு ஏதாவது மகிழ்ச்சியாக நாம் கதைக்கலாமே&#8217; என்கின்றார்.</p>
<p>இன்று அவரது சினேகிதி ஒருவர் வந்து, அவருடைய பிரச்சனைபற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அவர் முழுவதும் சொல்லி முடிக்க முதலே, இவர் ”நாம் வேறு ஏதாவது மகிழ்ச்சியாக பேசலாமே” என்கிறார். அது எப்படி கவலையில் வரும் ஒருவர், இவர் கேட்டதும் மகிழ்ச்சியாக பேச முடியும் என்பதை அவர் யோசிக்கவே இல்லையா என்று எனக்குத் தோன்றியது. எமது நாட்டுப் பிரச்சனை, அல்லது மக்களின் பிரச்சனை பற்றி ஏதாவது பேச்சு வரும்போது, நான் கவலைப்பட்டாலும், அவர் எனக்கும் இதையே சொல்லுகின்றார்.</p>
<p>சிலவேளை அவர் அப்படி சொல்வது, அவரால் அப்படி கவலையான விடயங்களை ஏற்றுக் கொள்வதில் உள்ள சிரமத்தினாலாக இருக்கலாம். ஆனால் அந்த சினேகிதியும், இவரிடம் ஒரு மன ஆறுதலுக்குத்தானே சொல்ல வந்தார். இவர் இப்படி கேட்க மறுத்தால் அவருக்கு அது மனப் பாரத்தை கூட்டாதா என்று தோன்றியது.</p>
<p>மகிழ்ச்சியோ, துக்கமோ ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதுதானே ஆறுதல்.</p>
<hr><h2>4 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/09/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/#comment-419">September 25, 2009</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>உங்கள் உடன் பணியாற்றுபவரின் அணுகுமுறை தவறு என்று சொல்ல முடியாது. சில பேர் எப்போது பார்த்தாலும் புலம்புவதற்கென்றே அடுத்தவர்களிடம் பேசுவார்கள். இது நாளடைவில் எரிச்சலடைய செய்வதுடன் நம் மனநிலையையும் பாதிக்கும்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/09/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/#comment-421">September 25, 2009</a>, கலை wrote:</p><p>எப்போ பார்த்தாலும் புலம்புபவர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அதுக்காக எப்போதாவது, யாராவது, ஏதாவது கவலை சொல்லும் போதெல்லாம், எப்போதும், நாம கவலை பத்தி பேச வேண்டாம், சந்தோசமா பேசுவோம்னு சொன்னா எப்படி?</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/09/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/#comment-423">September 26, 2009</a>, <a href="http://adaleru.wordpress.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://adaleru.wordpress.com');"  rel='external nofollow' class='url'>அடலேறு</a> wrote:</p><p>அது அப்படி யென்று சொல்ல ஏலாது. சிலருக்கு சோகம் பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. அதன் வெளி பாடு தானே அக்கா இது எல்லாம்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/09/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/#comment-428">September 30, 2009</a>, <a href="http://tamilhomerecipes.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://tamilhomerecipes.blogspot.com');"  rel='external nofollow' class='url'>Kannan</a> wrote:</p><p>நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/09/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>சுதந்திர உணர்வு!</title>
		<link>http://kalaiarasy.com/2009/08/indepedant-feeling/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/08/indepedant-feeling/#comments</comments>
		<pubDate>Fri, 21 Aug 2009 10:12:20 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[நினைவில்..]]></category>
		<category><![CDATA[பெண்ணியம்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[விடுமுறை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=263</guid>
		<description><![CDATA[ஒருநாள் எனது சினேகிதி ஒருத்தியிடமிருந்து ஒரு ஆச்சரியமான மின்னஞ்சல். எனக்கு மட்டுமல்லாமல், எம்மிருவரதும் பொது சினேகிதிகள் மற்றும் நால்வருக்கும் சேர்த்தே எழுதப்பட்டிருந்தது.
அதில் அவள் கேட்டிருந்தது, நாமெல்லோரும் கேரளாவுக்கு ஒரு பயணம் ஒழுங்கு செய்து போய் வரலாமா என்பதுதான். கேரளாவுக்கு பயணம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான். ஆனால் அவள் சொல்லியிருந்தது, குடும்பத்தை விட்டு விட்டு, தனியாக நாங்கள் சினேகிதிகள் மட்டும் போய் வர வேண்டும். திருமணம், குழந்தை, குடும்பம் என்று ஆன பிறகு, இப்படி தனியாக, அதுவும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒருநாள் எனது சினேகிதி ஒருத்தியிடமிருந்து ஒரு ஆச்சரியமான மின்னஞ்சல். எனக்கு மட்டுமல்லாமல், எம்மிருவரதும் பொது சினேகிதிகள் மற்றும் நால்வருக்கும் சேர்த்தே எழுதப்பட்டிருந்தது.</p>
<p>அதில் அவள் கேட்டிருந்தது, நாமெல்லோரும் கேரளாவுக்கு ஒரு பயணம் ஒழுங்கு செய்து போய் வரலாமா என்பதுதான். கேரளாவுக்கு பயணம் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லைத்தான். ஆனால் அவள் சொல்லியிருந்தது, குடும்பத்தை விட்டு விட்டு, தனியாக நாங்கள் சினேகிதிகள் மட்டும் போய் வர வேண்டும். திருமணம், குழந்தை, குடும்பம் என்று ஆன பிறகு, இப்படி தனியாக, அதுவும் குடும்பமில்லாமல், மேலும் தொலை தூரப் பயணம் சினேகிதிகளுடன் சேர்ந்து போக வேண்டும் என்று அவளுக்கு தோன்றியது, சாதாரண எண்ணங்களிலிருந்து நிச்சயமாய் வேறுபட்டுத் தோன்றியது. அவள் இருப்பது Australia. நானிருப்பதோ நோர்வே. மற்ற சினேகிதிகள் இருப்பதோ கனடா. இப்படி எல்லோரும் கூட்டாக போக வேண்டும், எமது பழைய காலத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற அவளது எண்ணம், ஆசை, அந்த நாட்களை மீண்டும் வாழ அவளுக்கு உள்ள ஆசையைக் காட்டியது.</p>
<p>யோசித்துப் பார்த்ததில் எனக்கும் அப்படி ஒரு பயணம் செய்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால், எனது குழந்தையின் வயது, விடுமுறை காலத்தில் உள்ள வேறுபாடு காரணமாக அந்த திட்டத்தில் இப்போதைக்கு பங்கேற்க முடியவில்லை என்று (வருத்தத்துடன்) எழுதினேன். மற்ற சினேகிதிகள் இதற்கு என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை. பொதுவான மடல் எதுவும் வரவில்லை. எவரும் இதில் இணைந்து கொள்ளாததில் அவள் கொஞ்சம் மன வருத்தம் அடைந்திருப்பாள் என்றே தோன்றியது. காரணம் அவள் மிகவும் உற்சாகத்துடன் இந்த பயணம்பற்றி எழுதி இருந்தாள். ஆனால் அதில் எவரும் இணைந்து கொள்ளவில்லை. எனக்கும் இது கொஞ்சம் மன வருத்தமாய் இருந்ததுபோலவே தோன்றுகிறது.</p>
<p>அதன் பிறகு நீண்ட நாட்களாய் அவளிடமிருந்து மடல் எதுவும் வரவில்லை. பிறகு திடீரென்று மீண்டும் ஒரு மடல். அது தனது adventure trip பற்றின மடல். மிகவும் விரிவாக அந்த மடல் இருந்தது.</p>
<p>அதில் தான் மட்டும் தனியாக, எவருடைய எந்த சிறு உதவியுமில்லாமல் ஒரு பயணம் ஒழுங்கு செய்து போக வேண்டும் என்று தோன்றியதாம். காரணம் திருமணத்தின் பிறகு, பல விடயங்களில் யாரையாவது (முக்கியமாக கணவனை) சார்ந்தே இருப்பது போன்ற எண்ணம். திருமணத்தின் முன்னர், துணிச்சலுடன் செய்த பல விடயங்கள், தானாக தனித்து திட்டமிட்டு, முடிவெடுத்து வெற்றிகரமாக செயற்படுத்திய விடயங்கள் எதையுமே தற்போது செய்ய முடியாதது போன்ற ஒரு பிரமை. எதை செய்வதாக இருந்தாலும், வேறொருவரிடம் கேட்டு, அதைப்பற்றி ஆராய்ந்து, முடிவெடுத்து&#8230;. இவையில்லாமல் முன்புபோலவே இப்போதும் தனித்து செயற்பட முடியும் என்று பார்க்கும் ஆவல்.</p>
<p>வீட்டில் கணவருடனோ, பிள்ளைகளுடனோ கலந்தாலோசிக்காமல், தானாகவே சுற்றுலா வழிகாட்டி ஒன்றைப் பெற்று, எவரிடமும் சொல்லாமல், சுற்றுலா பயணக் குழு ஒன்றுடன் இணைந்து ஒரு வாரப் பயணம் ஒன்றை ஒழுங்கு செய்தாளாம். மறுநாள் காலையில் பயணம் என்றால், முதல்நாள் இரவில் ஒரு தாளில் தனது பயணம்பற்றிய முழுமையான குறிப்புக்களையும் குறித்து வைத்தாளாம். தான் போகுமிடங்கள், விலாசங்கள், அவசரமானால் தொடர்பு கொள்ளக்கூடிய முறைகள் அத்தனையும் குறித்து, அவர்கள் பார்க்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டு, போய் வருவதாக அதிலேயே விடைபெற்றுக்கொண்டு, மறுநாள் புறப்பட்டு விட்டாளாம். அந்த பயணம்பற்றி, தான் அதை எவ்வளவு இரசித்தேன் என்பது பற்றியெல்லாம் அந்த மின்னஞ்சலில் மிகவும் விரிவாக எழுதி இருந்தாள்.</p>
<p>மிகவும் உற்சாகத்துடன் அந்த மடலை முடித்திருந்தாள். ஆனால் அவளுடைய கணவரைப் போலவே, எல்லா கணவர்களும் இப்படிப்பட்ட செயலை, முழுமனதுடன், புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை.</p>
<p>நானும் கூட திருமணத்தின் பின்னர், தனித்தியங்கும் தன்மை வெகுவாக குறைந்து விட்டதாய் எண்ணி கவலைப் பட்டது (படுவது) உண்டு. திருமணமான பெண்களுக்கு இந்த உணர்வு அதிகமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. முழு சுதந்திரத்துடன் எந்த ஒன்றையும் செய்ய முடியாமல் போகின்றதோ?</p>
<p>ஆனால் குடும்பத்துடன் இருப்பதால் ஏற்படும் மற்றைய மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் அவள் குறிப்பிட தவறுவதில்லை.</p>
<p>அண்மையில் அவளிடமிருந்து மீண்டும் ஒரு மடல். அவர்களது திருமணநாளை முன்னிட்டு, பிள்ளைகள் தங்களுக்கு (அவளுக்கும், கணவருக்கும்) ஒரு சுற்றுலா போய், மூன்று நாட்கள் வேறொரு இடத்தில் தங்கி, அங்கே hot air balloon இல் ஏறிப் பார்த்து வரவும் ஒழுங்குகள் செய்து, அனுமதிச் சீட்டு வாங்கிக் கொடுத்ததாகவும், போய் வந்த அனுபவத்தையும் மிகவும் இரசனையுடன் எழுதியிருந்தாள். அத்துடன், அந்த மடலில், சினேகிதிகள் மட்டுமாக இணைந்து செல்ல வேண்டிய அந்த பயணத்தைப் பற்றியும் நினைவூட்டி இருந்தாள்.</p>
<hr><h2>1 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/08/indepedant-feeling/#comment-541">February 24, 2010</a>, Kalamathy wrote:</p><p>So lovely !  keep them coming .</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/08/indepedant-feeling/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>மரணத்தின் வாசனை!</title>
		<link>http://kalaiarasy.com/2009/05/smellofdeath/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/05/smellofdeath/#comments</comments>
		<pubDate>Mon, 25 May 2009 23:36:11 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[சோகம்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[ஈழம்]]></category>
		<category><![CDATA[மனிதாபிமானம்]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>
		<category><![CDATA[வன்னி]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=227</guid>
		<description><![CDATA[இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் &#8216;மரணத்தின் வாசனை&#8217;, &#8216;தனிமையின் நிழல்குடை&#8217; ஆகியவையும், கருணாகரனின் &#8216;பலி ஆடு&#8217; ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.
புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #0000ff;">இணையம் மூலமாக நான் சில புத்தகங்கள் வாங்கியிருந்தேன். ஈழத்து எழுத்தாளர்களான த.அகிலன், கருணாகரன் ஆகியோரின் புத்தகங்கள். அகிலனின் &#8216;மரணத்தின் வாசனை&#8217;, &#8216;தனிமையின் நிழல்குடை&#8217; ஆகியவையும், கருணாகரனின் &#8216;பலி ஆடு&#8217; ம் வாங்கியிருந்தேன். வடலி வெளியீடாக வந்த அந்த புத்தகங்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு நேற்று என் கைக்கு வந்து சேர்ந்தன.</span></p>
<p><span style="color: #0000ff;">புத்தகம் வாங்கும்போதே, மனமெல்லாம் குழப்பமும், கொந்தளிப்புமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் வாங்குகின்றேன், வாசிப்பேனா என்று எண்ணினேன். எத்தனையோ புத்தகங்கள் தொடப்படாமலே தூங்கிக் கொண்டு இருக்கின்றன. அதனால் இவை இப்போது அவசியமா என்று தோன்றினாலும், ஏதோ ஒரு உந்துதலில் வாங்கினேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">புத்தகம் கிடைத்ததுமே ‘மரணத்தின் வாசனை&#8217; வாசிக்க வேண்டும்போல் இருந்தது. இப்போ இருக்கும் வலிகளுடன் கூடிய மனநிலையில், இந்தப் புத்தகம் வாசிக்கவே வேண்டுமா என்று தோன்றிய எண்ணத்தை புறந்தள்ளி விட்டு, முன்னுரையை பார்த்து விட்டு, முதலாவது கதையான ‘ஒரு சின்னப் பையனின் அப்பா செத்துப் போனார்&#8217; ஐ வாசித்தேன். முதலே ஓரளவு இந்தக் கதையின் கரு தெரிந்திருந்தாலும், வாசித்த பொழுதில் கண்ணீர் என் அனுமதியின்றி வழிந்ததை தடுக்க முடியவில்லை. அகிலன் தனக்கே உரிய பாணியில் மனதை தொடும் விதத்தில் எழுதியிருந்தார்.</span></p>
<p><span style="color: #0000ff;">இரு நாட்கள் முன்னாலும், நேற்றும் என் மனது மரத்துப் போனதா என்ற கேள்வியை நான் பல தடவை கேட்டுக் கொண்டேன். காரணம் உறவினர் ஒருவரின் மரணம் என் கண்ணில் நீரை வரவழைக்கவில்லை. எனக்கே வியப்பாக இருந்தது. அது மட்டுமல்லாமல், கேள்விப்பட்ட உடனே ஏதோ ஒரு கவலை வந்தாலும், சிறிது நேரத்திலேயே, ஓரளவு நிதானத்துடன் அந்த மரணத்தை மனது ஏற்றுக் கொண்டது எனக்கே ஆச்சரியத்தை தந்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று நினைத்துப் பார்க்கிறேன். தொடர்ந்து ஈழ மண்ணில் நடந்தேறியி்ருக்கும் ஆயிரம் ஆயிரம் மரணங்களாக இருக்குமோ? மரணத்தின் வாசனையை மட்டுமே தற்போது கொண்டிருக்க கூடிய வன்னிப் பகுதி நினைவிலும், உணர்விலும் கலந்து கிடப்பதாக இருக்குமோ?</span></p>
<p><span style="color: #0000ff;">மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும்தான். ஆனாலும், இப்படியா கொத்துக் கொத்தாக, ஏதுமறியா அப்பாவிகளின் உயிர் போயிருக்க வேண்டும். உலகிலேயே மனிதாபிமானம் என்பது செத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.</span></p>
<hr><h2>1 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/05/smellofdeath/#comment-376">May 25, 2009</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>ரொம்ப நாள் கழித்து ஒரு இடுகையைக் கண்டதில் மகிழ்ச்சி. ஆனால், எழுதிய விடயம் :(</p><p></p><p>என்னுடைய மிக நெருங்கிய உறவினர்கள் சிலர் இறந்த போது எனக்கு அழுகை வரவில்லை. அப்போதிருந்த என் மன உணர்வுகளை எதிரொலிப்பதாக இருக்கிறது..</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/05/smellofdeath/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>மன அழுத்தமா?</title>
		<link>http://kalaiarasy.com/2009/01/stress/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/01/stress/#comments</comments>
		<pubDate>Sun, 18 Jan 2009 21:47:26 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[உடல்நலம்]]></category>
		<category><![CDATA[மன அழுத்தம்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/%e0%ae%ae%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be/</guid>
		<description><![CDATA[மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்!
இன்றைய அவசர உலகத்தில், இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், மன அழுத்தம் என்பது சாதாரண விடயமாகிக் கொண்டு வருகிறது. நமது தேகத்தின் நிலை (posture), பழக்க வழக்கங்கள் (habits), எண்ணங்கள் (thoughts), நடத்தை (behavior) போன்றவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களால் மன அழுத்தத்தை தொடர்ந்து நீண்ட காலத்தில் குறைக்க முடியும். இங்கே மன அழுத்தத்தை விரைவாக குறைப்பதற்கான எட்டு எளிய முறைகள் தரப்பட்டு இருக்கின்றன.
1. கோபத்தை கட்டுப்படுத்துதல்!
அற்பமான, முக்கியத்துவமில்லாத, மிகச் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #800080;">மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்!</span></p>
<p><span style="color: #0000ff;">இன்றைய அவசர உலகத்தில், இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், மன அழுத்தம் என்பது சாதாரண விடயமாகிக் கொண்டு வருகிறது. நமது தேகத்தின் நிலை (posture), பழக்க வழக்கங்கள் (habits), எண்ணங்கள் (thoughts), நடத்தை (behavior) போன்றவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களால் மன அழுத்தத்தை தொடர்ந்து நீண்ட காலத்தில் குறைக்க முடியும். இங்கே மன அழுத்தத்தை விரைவாக குறைப்பதற்கான எட்டு எளிய முறைகள் தரப்பட்டு இருக்கின்றன.</span></p>
<p><span style="color: #0000ff;">1. கோபத்தை கட்டுப்படுத்துதல்!</span></p>
<p><span style="color: #0000ff;">அற்பமான, முக்கியத்துவமில்லாத, மிகச் சாதாரணமான விடயத்தையிட்டு சில சமயம் நமக்கு கோபம் வருவதுண்டு. அந்த கோபம் அவசியமற்றது என்பது புரிந்தே இருந்தாலும் நாம் அந்த கோபத்தை கட்டுப்படுத்தாமல் சில சமயங்களில் வெளிப்படுத்துகிறோம். அப்படி சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, நாம் கோபப்பட்டு நமது சக்தியை விரயம் செய்யும் அளவுக்கு அந்த விடயம் தகுதியற்றது என்று மனதிற்கு உணரவைத்து, அந்த கோபத்தை வர விடாமல் தடுங்கள். சக்திவாய்ந்த, கோபத்தை அடக்கியாளும் முயற்சி மன அழுத்தத்தை குறைப்பதற்கு மிகச் சிறந்த, உண்மையான வழியாகும்.</span></p>
<p><span style="color: #0000ff;">2. சுவாசம்!</span></p>
<p><span style="color: #0000ff;">மெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுத்து விடுவது மன அழுத்தத்தை குறைக்கும். உங்களது மன அழுத்தம் அதிகரிக்கப்போகும் அடுத்த சந்தர்ப்பத்தில், மிக ஆழமாக மூன்று தடவைகள் மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளியேற்றுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் கிடைக்குமாயின், இந்த சுவாசிக்கும் பயிற்சியை தியானம் போல் செய்து பாருங்கள்.</span></p>
<p><span style="color: #0000ff;">3. மெதுவாக பேசுங்கள்!</span></p>
<p><span style="color: #0000ff;">மன அழுத்தம் ஏற்படும்போது, நாம் மிக விரைவாகவும், சத்தமாகவும் பேச ஆரம்பிக்கிறோம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுபோல் தோன்றினால், உடனே உங்கள் பேச்சை வழமையை விட மெதுவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பிப்பதுடன், மன அழுத்தத்தை தரும் அந்த சூழ்நிலையை நியாயமாகவும், கட்டுப்பாட்டுடனும் எதிர்கொள்ளத் தயாராவதை உணர்வீர்கள்.</span></p>
<p><span style="color: #0000ff;">4. நேரத்தை பயன்தரும் வகையில் கையாளுதல்!</span></p>
<p><span style="color: #0000ff;">நீங்கள் ஒத்திப்போட்டு வரும் வேலைகளில் ஏதாவது ஒரு வேலையை தெரிவு செய்து உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். உங்களை இழுத்தடித்து வந்த பொறுப்புக்களில் ஒன்றையேனும் நிறைவேற்றிய திருப்தி, உங்களுக்கு புதிய சக்தியையும் உற்சாகத்தையும் தருவதுடன், உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். </span></p>
<p><span style="color: #0000ff;">5. சுத்தமான காற்றை சுவாசியுங்கள்!</span></p>
<p><span style="color: #0000ff;"><br />
ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களேனும் வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசியுங்கள்.</span></p>
<p><span style="color: #0000ff;">6. பசி, உலர்வை தவிருங்கள்!</span></p>
<p><span style="color: #0000ff;">நிறைய திரவ ஆகாரத்தை உட்கொள்வதனால் உலர்வை தவிர்ப்பதுடன், நேரத்துக்கு சிறிய அளவிலேனும் உணவருந்துவதன் மூலம் பசியைத் தவிருங்கள். பசியும், உலர் நிலையும் நீங்கள் உணர்வதற்கு முன்னரே ஒரு ஆக்கிரமிப்பு மனோநிலையையும், மனவிசாரம், கவலையையும் தூண்டும் சக்தி உள்ளவையாக கருதப்படுகிறது.</span></p>
<p><span style="color: #0000ff;">7. தேகநிலை சோதிப்பு (quick posture check)!</span></p>
<p><span style="color: #0000ff;">இடையிடையே விரைவான ஒரு தேகநிலை சோதிப்பை மேற்கொள்ளுங்கள். தலையையும், தோள்களையும் நேராக நிலை நிறுத்தி, வளைந்திருக்கும், மந்தமான நிலையை தவிருங்கள். வளைந்த நிலையில் தசைகளில் ஏற்படும் இழுவிசை அல்லது இறுக்கமானது மன அழுத்தத்தை கூட்டுகிறது.</span></p>
<p><span style="color: #0000ff;">8. நாளின் முடிவில் உற்சாகமேற்படுத்தல்!</span></p>
<p><span style="color: #0000ff;">ஒவ்வொரு நாளின் முடிவிலும், உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய எதையாவது ஒன்றையாவது, சில நிமிடங்களாவது செய்யுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, சில நிமிட நேர ஓய்வான குளியல், அல்லது அரை மணி நேர அமைதியான வாசிப்பு, அல்லது கண்ணை மூடியபடி சில நிமிடங்களேனும் அமைதியாக இசையை ரசித்தல்&#8230; இப்படி எதையாவது செய்யுங்கள். அந்த நேரத்தில் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளையோ, அல்லது அன்று நடந்து முடிந்த விடயங்களைப் பற்றியோ யோசிக்காதீர்கள். உங்கள் வேலை பற்றியோ, வீட்டில் செய்ய இருக்கும் வேலைகள் பற்றியோ, குடும்ப பிரச்சனைகள் பற்றியோ, எதைப் பற்றியுமே அந்த சில நிமிடங்களாவது நினைப்பதை தவிர்த்து விடுங்கள்.</span></p>
<p><span style="color: #0000ff;">அப்படி செய்வீர்களேயானால், அழுத்தம் நிறைந்த அடுத்த நாளைச் சந்திக்க உற்சாகமாக தயாராகி விடுவீர்கள்.</span></p>
<hr><h2>4 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/01/stress/#comment-374">February 26, 2009</a>, <a href="http://globen.wordpress.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://globen.wordpress.com');"  rel='external nofollow' class='url'>குளோபன்</a> wrote:</p><p>உங்களது பதிவுகள் நன்றாக இருக்கிறது. பதிவுப் பக்கமும் எளிமையாக இருக்கிறது. ஆனால் பக்கங்கள், அண்மைய மறுமொழிகள், பகுப்புகள், பழையவை போன்றவை கீழே சென்றுவிடுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் முகப்புப் பக்கத்தின் மேலேயே இருப்பது போன்ற டெம்ப்ளட்டை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும்.</p><p></p><p>-குளோபன்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/01/stress/#comment-375">March 8, 2009</a>, Naseem wrote:</p><p>நல்ல அருமையான கருத்துகள்...மனதை தைரியப்படுத்த சில வழிகள் கொடுக்கவும்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/01/stress/#comment-429">September 30, 2009</a>, <a href="http://tamilhomerecipes.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://tamilhomerecipes.blogspot.com');"  rel='external nofollow' class='url'>Kannan</a> wrote:</p><p>மிகவும் பிரமாதம்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/01/stress/#comment-442">October 26, 2009</a>, <a href="http://gmail" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://gmail');"  rel='external nofollow' class='url'>janu</a> wrote:</p><p>hai everybody...i'm janu...now i'm in very critical stage..i cant live any more like that i'm thinking....i loved 1 guy so alot...but now he left me..i cant in normal...please help me.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/01/stress/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>குழந்தையின் பெயர்!</title>
		<link>http://kalaiarasy.com/2008/10/anjali/</link>
		<comments>http://kalaiarasy.com/2008/10/anjali/#comments</comments>
		<pubDate>Fri, 17 Oct 2008 09:28:06 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[நினைவில்..]]></category>
		<category><![CDATA[பாசம்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=162</guid>
		<description><![CDATA[இன்றைக்கு இந்தப் பதிவைப் பார்த்தேன். நகைச்சுவையோட நிறைய விசயம் சொல்லியிருந்தார். அங்கே ஒரு பின்னூட்டம் போடப் போன இடத்தில, அட இதை என்னுடைய பதிவேட்டிலயும் (அதான் என்னுடைய வலைப்பதிவு) ஒரு இடுகை  போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய  வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது  .  
ரவி கீழ்வருமாறு எழுதியிருந்ததுதான் இந்தப் பதிவுக்கு காரணம்  . 
//பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-family: Verdana;"><span style="color: #0000ff;">இன்றைக்கு </span><a href="http://blog.ravidreams.net/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-2368" target="_blank"><span style="color: #800080;">இந்தப் பதிவைப்</span></a><span style="color: #0000ff;"> பார்த்தேன். நகைச்சுவையோட நிறைய விசயம் சொல்லியிருந்தார். அங்கே ஒரு பின்னூட்டம் போடப் போன இடத்தில, அட இதை என்னுடைய பதிவேட்டிலயும் (அதான் என்னுடைய வலைப்பதிவு) ஒரு இடுகை  போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய  வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .  </span></span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;"><span style="color: #800080;"><a href="http://blog.ravidreams.net/" target="_blank">ரவி</a></span> கீழ்வருமாறு எழுதியிருந்ததுதான் இந்தப் பதிவுக்கு காரணம் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">//பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு சந்தோஷத்தையும் பார்த்திருக்கேன். //</span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">குழந்தை கிடைப்பதற்கு 4 வருடத்திற்கு முதலே பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு பெயர் நினைத்தாயிற்று. ஆசைப்பட்டது பெண் குழந்தை. பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்காமலே, பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசையிலும், பெண்தான் பிறக்கும் என்ற ஏதோ ஒரு  நம்பிக்கையிலும்  குழந்தைக்கு அதே பெயரை வைப்பது என்று குழந்தை 3 மாதக்கருவாக இருக்கும்போதே முடிவாகி மற்றவர்களிடம் சொல்லியுமாச்சு. </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">என்ன குழந்தை என்று அறிய வேண்டுமா என்று வைத்தியர் கேட்டதற்கு, வேண்டாம் என்றும் சொல்லியாச்சு. நாள் செல்ல செல்ல, என்ன குழந்தை என்று பார்த்திருக்கலாமோ, கடைசி நேரத்தில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அது ஏமாற்றமாகப் போய் விடுமோ என்று சின்னதாய் ஒரு தவிப்பும் வந்தது. அப்படி என்னதான் பெயர்? அந்தப் பெயர் &#8221;<strong>அஞ்சலி</strong>&#8220;.</span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">ஆனால், நல்ல வேளையாக ஆசைப்பட்டபடியே பிறந்தது பெண் குழந்தை. குழந்தை பிறந்தபோது நான் மயக்கத்தில். கண்விழித்த முதல் கணத்தில், அரைகுறை மயக்கத்தில் நான் கேட்ட முதல்கேள்வி, &#8220;அஞ்சலிதானே?&#8221;. &#8220;ஆம்&#8221; என்ற பதில் தந்த ஆனந்தத்திற்கு அழவேயில்லை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .  </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">கண்விழித்தபோது குழந்தையை என்னிடம் காட்டினார்கள். தலை நிறைந்த தலை முடியுடன் இருந்த மகளுக்கு தாதிமார், ribbon எல்லாம் கட்டி, அலங்காரம் செய்திருந்தார்கள். மகளை முதன்முதல் பார்த்த அந்த நேர உணர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">குழந்தை பிறக்கப்போவதுபற்றி மற்றவர்களிடம் அறிவித்தபோது, &#8220;அஞ்சலி பிறந்திட்டாள்&#8221;, என்று சொல்ல முடிந்தது. அதைவிட குழந்தை பிறந்ததுபற்றி அறிந்த ஒருவர் தொலைபேசியில், &#8220;என்ன, அஞ்சலி பிறந்தாச்சா?&#8221; என்று கேட்டது மிகுந்த மகிழ்ச்சி. </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">மகளுக்கு, தனக்கு பெயர் வைத்த விதம்பற்றி கேட்கும்போது பெருமையும், மகிழ்ச்சியும். அவளுக்கு தான் பிறந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் இப்போதும் தணியாத ஆர்வம். நல்ல வேளையாய் அவளுக்கும் அந்தப் பெயர் மிகவும் பிடிச்சிருக்கு <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .  மற்றவர்கள் அவளது பெயரைக் கேட்டுவிட்டு, &#8220;அழகான பெயர்&#8221; என்று சொன்னால் அவள் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை வரும். தமிழ் தெரியாதவர்கள்கூட, ஒரு தடவை பெயரை மீண்டும் சொல்லிப் பார்த்து &#8216;அழகான பெயர்&#8217; என்று சொல்லும்போது மகிழ்ச்சி. தவிரவும் ஒரு சிலர் &#8220;It sounds like &#8216;angel&#8217;&#8221; என்று சொல்வார்கள். அதில் அவளுக்கு இன்னும் பெருமை கூடிவிடும். </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">எனக்கும் அழகான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய தமிழ்ப் பெயர்கள்தான் அதிகம் பிடிக்கிறது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</span><span style="color: #0000ff;"> </span></p>
<p><span style="font-family: Verdana;"> </span></p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2008/10/anjali/#comment-373">December 20, 2008</a>, <a href="http://my-tamil.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://my-tamil.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>திகழ்மிளிர்</a> wrote:</p><p>/எனக்கும் அழகான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய தமிழ்ப் பெயர்கள்தான் அதிகம் பிடிக்கிறது :). /</p><p></p><p>எனக்கும் தான்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2008/10/anjali/#comment-613">August 13, 2010</a>, bala wrote:</p><p>poda.....</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2008/10/anjali/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>மூட நம்பிக்கையும், அதன் பலனும்???</title>
		<link>http://kalaiarasy.com/2007/10/superstition/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/10/superstition/#comments</comments>
		<pubDate>Mon, 01 Oct 2007 10:53:46 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/10/01/%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/</guid>
		<description><![CDATA[நேற்று ஒருவர் சொன்ன கதை இங்கே&#8230;&#8230;..
 ஒரு வயதானவருக்கு (எனக்கு இந்த கதை சொன்னவரின் அப்பாதான் அந்த வயதானவர்) அடிக்கடி உடல் சுகவீனமாகிக் கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கும் சென்று வரவேண்டி இருந்தது. அவரும், அவரது மனைவியும் இப்படி அடிக்கடி உடல்நிலை குன்றிப் போவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார்களாம். அதற்கு ஒரு &#8216;மை&#8217; போட்டுப் பார்ப்பவரிடம் போனார்களாம்.
இந்த வயோதிபரின் குடும்பத்துக்கு சொந்தமாக ஒரு கோவில் உள்ளது. அந்த மை போட்டுப் பார்ப்பவர் சொன்னாராம், [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நேற்று ஒருவர் சொன்ன கதை இங்கே&#8230;&#8230;..</p>
<p> ஒரு வயதானவருக்கு (எனக்கு இந்த கதை சொன்னவரின் அப்பாதான் அந்த வயதானவர்) அடிக்கடி உடல் சுகவீனமாகிக் கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கும் சென்று வரவேண்டி இருந்தது. அவரும், அவரது மனைவியும் இப்படி அடிக்கடி உடல்நிலை குன்றிப் போவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார்களாம். அதற்கு ஒரு &#8216;மை&#8217; போட்டுப் பார்ப்பவரிடம் போனார்களாம்.</p>
<p>இந்த வயோதிபரின் குடும்பத்துக்கு சொந்தமாக ஒரு கோவில் உள்ளது. அந்த மை போட்டுப் பார்ப்பவர் சொன்னாராம், &#8220;உங்களுடைய கோவிலில் இருக்கும் கடவுள் வைரவரை ஒருவர் கட்டி வைத்திருக்கிறார். அதனால் வைரவர் தனது சக்தியை பயன்படுத்தி, உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கின்றார். அதனால்தான் உங்களுக்கு இப்படி அடிக்கடி உடல்நலமற்றுப் போகின்றது. இதை சரி செய்ய, அந்த கட்டி வைத்திருப்பவர் செய்திருக்கும் செய்வினையை கண்டு பிடித்து அகற்ற வேண்டும்&#8221;.</p>
<p>(உடனே நான் கேட்டேன், &#8220;மனிதனால் ஒரு கடவுளை கட்டி வைக்க முடியுமா? என்று நீங்கள் கேட்கவில்லையா&#8221; என்று. அதற்கு அவர், &#8220;நான் சொல்லும் கதையை முழுவதுமாய் கேளுங்கோ&#8221; என்று சொல்லி தொடர்ந்தார்.)</p>
<p>அந்த மை போட்டுப் பார்ப்பவர் அவர்கள் வீட்டுக்கு வந்து, செய்வினை செய்து புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து அகற்ற வேண்டும் என்று சொன்னாராம். அவர்களுக்கு உதவியாக (புதைத்து வைக்கப்பட்டிருக்கும் செய்வினையை தோண்டி எடுத்து அகற்றுவதற்கு) பக்கத்து வீட்டிலிருப்பவரை கூட்டிக் கொண்டார்களாம். மை போட்டுப் பார்ப்பவர் வந்து, அந்த காணி முழுவதும் சுற்றித் திரிந்து, செய்வினை புதைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அந்த இடத்தை தோண்டச் சொல்லி, அங்கிருந்து ஏதோ சில பொருட்களை அகற்றினார்களாம். மை போட்டுப் பார்ப்பவருக்கு பணமும் கொடுத்து அனுப்பினார்களாம்.</p>
<p>அந்த வயதானவருக்கு அதற்குப் பின்னர் எந்த உடல்நலக் குறைவும் வரவில்லையென்றும், தன்னால் இப்போது துவிச்சக்கர வண்டி ஓட்டிக் கொண்டு செல்லக் கூட முடிகின்றது என்றும் ஆனந்தமாக கூறுகின்றாராம்.</p>
<p>இந்தக் கதையை என்னிடம் சொன்னவர் சொல்கின்றார். அந்த வயதானவருக்கு, அந்த மை போடுபவர் சொன்னதில் இருந்த முழுமையான நம்பிக்கை, அவரை சுகமானவராக்கி வைத்திருக்கின்றது. அது தற்காலிகமானதாக இருந்தாலும், அவர் கொஞ்ச நாளைக்கு, சந்தோஷமாகவும், உடல்நலத்துடனும் இருக்கப் போகின்றார். அந்த வயதான தம்பதிகளிடம் நிறைய பணம் இருக்கின்றது. அந்த மை போட்டுப் பார்ப்பவருக்கு அவர்கள் பணம் கொடுக்கின்றார்கள். அதனால் அந்த பணம், அந்த மை போடுபவரின் குடும்பத்தினரின் பாவனைக்கு போய் சேருகின்றது. அதுவும் நல்லதுதானே என்று. இவருக்கும் சுகம், அவர்களுக்கும் தேவையான பணம்.</p>
<p>இந்த விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று யோசிக்கின்றேன். <span class="bold">:^)</span></p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/10/superstition/#comment-360">October 1, 2007</a>, <a href="http://blog.ravidreams.net/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net/');"  rel='external nofollow' class='url'>ரவிசங்கர்</a> wrote:</p><p>placebo போலத்தான் :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/10/superstition/#comment-359">October 1, 2007</a>, கலை wrote:</p><p>:)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/10/superstition/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
	</channel>
</rss>
