<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உயிர்ப்பு &#187; Kids world</title>
	<atom:link href="http://kalaiarasy.com/category/kids-world/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kalaiarasy.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 24 Jun 2010 09:10:25 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>வீட்டிற்கான வழி!</title>
		<link>http://kalaiarasy.com/2010/04/the-way-home/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comments</comments>
		<pubDate>Fri, 23 Apr 2010 10:28:59 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Kids world]]></category>
		<category><![CDATA[The Way home]]></category>
		<category><![CDATA[human nature]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[அன்பு]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>
		<category><![CDATA[பாசம்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=730</guid>
		<description><![CDATA[The Way Home
நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது.
ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.
கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு வருகிறார். அங்கேயே குட்டிப் பையனை சிலநாட்கள் பாட்டியுடன் இருக்கும்படி விட்டுவிட்டு, புதிய வேலை ஒன்று தேடி நகரத்துக்குப் போய் விடுகிறார்.
அங்கே பையன் பாட்டியுடன் இருக்கும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>The Way Home</strong></p>
<p>நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது.</p>
<p>ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன்.</p>
<p>கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு வருகிறார். அங்கேயே குட்டிப் பையனை சிலநாட்கள் பாட்டியுடன் இருக்கும்படி விட்டுவிட்டு, புதிய வேலை ஒன்று தேடி நகரத்துக்குப் போய் விடுகிறார்.</p>
<p>அங்கே பையன் பாட்டியுடன் இருக்கும் நாட்களில், அவர்களின் உறவில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக சொல்கிறது படம். பின்தங்கிய கிராமத்து சூழலில் ஒட்டிக் கொள்ள முடியாமல் இருக்கும் பையன், நகரத்து நாகரீக வாசனையே அறியாத பாட்டியை ஆரம்பத்தில் உதாசீனம் செய்கிறான்.  சில நாட்கள் அங்கே வாழ்ந்து பின்னர் பாட்டியின் தூய்மையான அன்பில் படிப்படியாக பையனிடம் ஏற்படும் மாற்றமும், மீண்டும் அவன் அம்மாவுடன் நகருக்கு செல்லத் தயாராகும் நிலையில், பாட்டியுடன் மனதளவில் ஏற்பட்ட நெருக்கமும், மிக மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.</p>
<p>கிராமத்து சூழலிலேயே இருந்துவிட்ட பாட்டிக்கு, பையனுக்குத் தெரிந்த நாகரீக வாழ்க்கையின் தடங்கள் பற்றி எதுவுமே சொன்னாலும் புரிவதுமில்லை. நகர வாழ்க்கையில் பழக்கப்பட்ட பையனுக்கு கிராமத்தில் பொழுது போவதே கடினமாக உள்ளது. தனது மின்சார விளையாட்டுப் பொருளான Game Boy உடனேயே பொழுதைக் கழிக்கும் பையனுக்கு, தொடர்ந்து அதிலேயே விளையாடிக் கொண்டிருந்ததால், அதன் மின்கலம் தனது தொழிற்பாட்டை நிறுத்தியதும், மிகவும் வருத்தமாகி விடுகிறது. பையனின் தேவையை அல்லது அவசியத்தை பாட்டியாலேயும் புரிந்துகொண்டு நிவர்த்தி செய்ய முடியவில்லை. அவனாலும் அதை வாங்க முடியாமலேயே போய் விடுகிறது.</p>
<p>பையன் தனக்கு Kentucky Fried Chicken வேண்டும் என்று சொல்லி, புரிய வைக்க முடியாமல், புத்தகத்தில் இருக்கும் கோழியின் படத்தை எடுத்துக் காட்ட, பாட்டியும், தன்னால் பேரனுக்குப் பிடித்ததை செய்து கொடுக்க முடியும் என்றெண்ணிக் கொண்டு, கூனல் விழுந்த முதுகுடன், நடந்து சென்று கோழி வாங்கி வந்து, தனக்கு தெரிந்தபடி, அதை முழுவதுமாய் போட்டு அவித்து வைக்க, பையன் Kentucky Chicken கிடைக்காத வருத்தத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சோர்ந்து படுத்து விடுகிறான். ஆனாலும் பாட்டி தூங்கிய பின்னர் எழுந்து, பசி தாங்காமல் பாட்டி அவித்து வைத்த கோழியையே உண்கிறான்.</p>
<p>இதில் முக்கியமான விசயம், பாட்டிக்கு குரல் எழுப்பி பேசவும் முடியாது. சைகைகளினாலேயே படம் முழுமைக்கும் பாட்டி பேசும் மெளனமொழி, மனதை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது. ஆரம்பத்தில் பாட்டியுடன் முரண்டு பிடிக்கும் பையன் கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டியின் அன்பிற்கு கட்டுப்பட்டுப் போவதாய் படம் முடிகிறது.</p>
<p>பையன் கிராமத்தை விட்டு போவதற்கு முன்னர், பாட்டிக்கு பேச முடியாது, சுகவீனம் ஏற்பட்டாலும் தொலைபேசியில் தகவல் சொல்ல முடியாதென்பதால், பாட்டிக்கு எழுதப் பழக்கி கடிதம் போடச் சொல்கிறான். I’m sick’, ’Miss you என்ற இரண்டையும் எழுதப் பழக்கி, அது கடினம் என்று புரிந்ததும், சுகவீனம் ஏற்பட்டால், வெற்றுத் தாளை தனக்கு அஞ்சல் செய்யும்படியும், பாட்டிக்கு சுகவீனம் எனப் புரிந்து கொண்டு தான் விரைந்து வருவதாகவும் பாட்டியிடம் சொல்கிறான். இருவரும் அழும்போது நமக்கும் அழுகை வருகிறது.</p>
<p>பாட்டிக்கு எழுதப் புரியாதென்பதால், படங்கள் மூலம் சில வாழ்த்து அட்டைகள் தயார் செய்து பாட்டிக்கு கொடுத்துவிட்டுப் போவான். (குழந்தைகளுக்கு படம் வரைய சொல்லியா தர வேண்டும். கற்பனையை எல்லா இடமும் விட்டு என்னென்னமோ எல்லாம் வரைவார்கள். என் குட்டிப் பெண் எனக்கு செய்து கொடுக்கும் வாழ்த்து அட்டைகள் யாவும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).</p>
<p>சில தடவைகள் கண் சரியாகத் தெரியாத பாட்டி தனக்கு ஊசியில் நூல் கோற்றுத் தரும்படி பையனைக் கேட்பாள். மனம் சோர்ந்த நிலையிலிருக்கும் அவன் மறுத்து விடுவான். ஆனால், பையன் பாட்டியை விட்டு போகப் போகும் நேரத்தில் பாட்டிக்குத் தேவை என்பதைப் புரிந்து கொண்டு சில ஊசிகளை எடுத்து நூலைக் கோத்து தயாராக வைத்து விட்டுப் போவான்.</p>
<p>பாட்டியை விட்டுப் பிரிந்து போவது பையனுக்கு மிகக் கடினமாக இருக்கிறது என்பதை, அவன் எந்த வார்த்தையும் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது. (அதைப் பார்த்தபோது, பல வருடங்கள் முன்னால் நடந்தது நினைவுக்கு வந்தது. நான் மிகவும் நேசிக்கும், என்னுடைய ஒரு குட்டித் தம்பியும், அவனை விட்டு ஒவ்வொரு தடவையும் நான் பயணப்படும்போதெல்லாம், எந்த ஒரு வார்த்தையுமே சொல்லாமல், மெளனமாக தனது துக்கத்தை வெளிப்படுத்துவது நினைவில் வந்தது. அப்போது அவன் சின்னப் பையன்). கடைசியாக bus இல் ஏறியபின்னர், எதுவும் சொல்லாமல் உட்கார்ந்திருந்து விட்டு, Bus கிளம்பியதும், ஓடி வந்து பின்பக்க கண்ணாடி வழியாகப் பார்த்து, பாட்டியின் சைகை மொழியிலேயே தான் அவர்மேல் வைத்திருக்கும் அன்பை நெஞ்சை தடவி காட்டுகிறான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், <strong>அவர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பு மனதை மிகவும் நெகிழ்வடையச் செய்கிறது. </strong></p>
<p>பாட்டியும், பையனும் இயல்பாக இருந்தபோது, படம் பிடிக்கப்பட்டார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். உண்மையிலேயே அப்படித்தான் எடுத்திருப்பார்களோ? நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவே மனம் இடம் கொடுக்கவில்லை.</p>
<p>இவையெல்லாம் வார்த்தைப் பூச்சுக்கள் எதுவும் இல்லாமல், படத்தில் வரும் சின்ன சின்ன காட்சிகள் மூலமும், மெளன மொழிகள் மூலமுமே சொல்லி விடுகிறார்கள். அருமையான படம். அனைவரும் பாருங்கள். ஆங்கில மொழிபெயர்ப்புடன் படம் பார்த்தாலும், இந்தப் படத்தைப் பார்க்க எந்த மொழியும் அவசியமே இல்லை.</p>
<hr><h2>5 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comment-598">April 25, 2010</a>, <a href="http://aalamaram.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://aalamaram.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>திரு</a> wrote:</p><p>திரைப்படத்தை அவசியம் பார்க்க வேண்டுமென்று தூண்டுகிறது. அதோடு முதியவர்களின் பாசத்தையும் நினைவூட்டுகிறது...</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comment-600">April 26, 2010</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>ஒவ்வொரு முறை என் அக்கா மகன் எங்கள் அம்மாவைப் பார்க்க ஊருக்கு வரும்போதும் இந்நப் படம் நினைவுக்கு வருகிறது...</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comment-606">May 20, 2010</a>, <a href="http://komanivarma.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://komanivarma.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>மணிவர்மா</a> wrote:</p><p>நல்ல திரைபடத்தை அறிமுகப்படுத்தியுள்ளீர், உங்கள்  படம் பற்றிய விமர்சனம் சிறப்பு. படம் பார்த்த அனுபவம் கிடைத்தது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comment-608">May 26, 2010</a>, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sundar" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sundar');"  rel='external nofollow' class='url'>சுந்தர்</a> wrote:</p><p>கண்களில் நீர் நிறைந்து விட்டது. அலுவலகத்திலேயே இப்படி என்றால் வீட்டில் வைத்து இந்தப் படத்தைப் பார்த்தால் எப்படி இருக்குமோ தெரியவில்லை. :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/the-way-home/#comment-611">August 1, 2010</a>, <a href="http://kesavanmarkkandan.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://kesavanmarkkandan.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>Kesavan</a> wrote:</p><p>Dear Mrs. Kalaiyarasi. Thank you very much for reviewing the movie "Jib-Buro". I have seen already and its a heart breaking. Right now i am in Korea and ofcourse i know korean language. I have seen so many korean movies which are awesome. I have experienced different kind of love and romance after seeing korean movies. Korean movies are either fun or heart breaking. Even now some of our directors making movies as like of korean movies. If u want, i can suggest some good korean movies. </p><p></p><p>Kesavan, Seoul, South Korea.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/04/the-way-home/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
		</item>
		<item>
		<title>கோமாளிகள் நாள்!</title>
		<link>http://kalaiarasy.com/2010/02/crazyday/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/02/crazyday/#comments</comments>
		<pubDate>Thu, 25 Feb 2010 13:03:50 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Kids world]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=649</guid>
		<description><![CDATA[எப்பவாவது பாடசாலையில் இப்படி ஒருநாள் உங்களுக்கு கொண்டாடப்பட்டதா? எனக்கு இல்லவே இல்லை. அப்படி ஏதாவது இருந்திருக்கக் கூடாதான்னு இப்ப தோணுது.  
வேற ஒன்றுமில்லை. மகளுடைய பாடசாலையில இப்படி இருநாள் இன்றைக்கு. இந்த கிழமை முழுமைக்குமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி. இது அவர்களுடைய spirit week ஆம்  .
1. திங்கள் &#8211; pyjama day
இரவு உடையில் குழந்தைகள் எல்லோரும் பாடசாலைக்கு சென்றார்கள்.
2. செவ்வாய் &#8211; gym games day
முழுநாளும் விளையாட்டு. மகளுக்கு முதலாம் வகுப்பு பிள்ளைகளை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எப்பவாவது பாடசாலையில் இப்படி ஒருநாள் உங்களுக்கு கொண்டாடப்பட்டதா? எனக்கு இல்லவே இல்லை. அப்படி ஏதாவது இருந்திருக்கக் கூடாதான்னு இப்ப தோணுது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>வேற ஒன்றுமில்லை. மகளுடைய பாடசாலையில இப்படி இருநாள் இன்றைக்கு. இந்த கிழமை முழுமைக்குமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி. இது அவர்களுடைய spirit week ஆம் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>1. திங்கள் &#8211; pyjama day</p>
<p>இரவு உடையில் குழந்தைகள் எல்லோரும் பாடசாலைக்கு சென்றார்கள்.</p>
<p>2. செவ்வாய் &#8211; gym games day</p>
<p>முழுநாளும் விளையாட்டு. மகளுக்கு முதலாம் வகுப்பு பிள்ளைகளை நெறிப்படுத்தும் வேலை கொடுக்கப்பட்டதாம். அவர்களுக்கு ஒரே விசயத்தை திருப்பி திருப்பி சொல்லி அலுத்துப்போச்சாம். (ரொம்பத்தான் அலட்டிக்கிறா).</p>
<p>2. புதன் &#8211; Skiing day</p>
<p>இதற்கென்று தனியார் போக்கு வரத்து ஒழுங்கு செய்து பெரிய மலையொன்றுக்கு தொலைதூரம் போய் வந்தார்கள். தான் 10 தடவைக்கு மேல் விழுந்து எழும்பியதை, பெரிய சாதனையாக, மிகவும் சந்தோசத்துடன் சொல்லி மகிழ்ந்தாள் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . ஆனால், இன்றைக்குத்தான் கொஞ்சம் கழுத்து வலிப்பதாக கூறுகின்றாள் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . விரைவில் குணமாகிவிடும் என்று நம்புகின்றேன்.</p>
<p>3. வியாழன் &#8211; crazy day</p>
<p>அப்பாவுடைய T-shirt ஐ எடுத்து அணிந்து கொண்டாள். அப்பாவிடம் ஒரு tie வாங்கி, அது சுற்றப்பட்டிருந்த polythene cover உடன் சேர்த்து t-shirt இல் குற்றிக் கொண்டாள். தலைமுடியை இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கம் பின்னாமலும், ஒரு பக்கம் பின்னியும் விடச் சொல்லிக் கேட்டாள். போட்டு விட்டேன். உடைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு sweater எடுத்து அணிந்து கொண்டாள்.  The crazy girl was ready then <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . Crazy parade 9 மணிக்கு தொடங்குதாம் என்று சொல்லி அவசரமாக ஓடுகிறாள்.</p>
<p>இப்படியெல்லாம் நாங்க படிக்கும்போது எதுவும் இல்லாம போச்சே என்று கவலையா இருக்கு. நல்லாவே குழந்தைகளை கவனிக்கிறாங்க <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/crazyday/#comment-543">February 25, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>ஹஹ்ஹா..வித்தியாசமாத்தான் இருக்கு...பப்பு ஸ்கூலுக்கு இதை பிரிண்ட் எடுத்து கொடுத்துவிடறேன்....:-))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/crazyday/#comment-544">February 26, 2010</a>, கலை wrote:</p><p>கட்டாயம் கொடுத்து விடுங்க. குழந்தைகள் மிகவும் விரும்பி செய்கின்றார்கள்.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/02/crazyday/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>என் செல்லக் குட்டிம்மா!</title>
		<link>http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comments</comments>
		<pubDate>Fri, 05 Feb 2010 10:07:23 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Kids world]]></category>
		<category><![CDATA[human nature]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[அன்பு]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நினைவில்..]]></category>
		<category><![CDATA[பாசம்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=605</guid>
		<description><![CDATA[நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.
அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை.</p>
<p>அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 நிமிடத்தின் பின்னர் அவள் வெளியே வந்தபின்னர், நான் எதையோ எடுக்க உள்ளே போனேன். அங்கே கிடைத்த ஒரு குட்டி தாளில், அங்கே கிடைத்த ஒரு பேனாவை எடுத்து, &#8216;I love you, I love you&#8217; என்று எழுதி எனது புத்தகம் ஒன்றின் மேல் வைத்திருந்தாள்.</p>
<p>பின்னர் இருவரும் வெளியே போனோம். ஒரு மணி நேரத்தின் பின்னர், வீடு திரும்பும்போது ஆறுதலாய், நடந்த விடயங்களைப்பற்றி அவளிடம் சமாதானமாகப் பேசினேன். பின்னர் வீடு வந்து குளித்து, சாப்பிட்டு படுக்கைக்குப் போனதும், அவசரமாய் ஒரு தாள் எடுத்து எழுதினாள். ”அப்படி என்ன எழுதுறீங்க?” என்று கேட்டேன். பதிலில்லை. எனக்கு காட்டாமல் ஒளித்து ஒளித்து எழுதினாள். எழுதி முடித்ததும் என்னிடமே கொண்டு வந்து தந்தாள்.</p>
<p>அதில் சின்னதாய் ஒரு கடிதம்.</p>
<p>To my dear mother,</p>
<p>You always love me and kiss me,</p>
<p>But will never, ever miss me.</p>
<p>You are nice and pretty,</p>
<p>and you are also witty.</p>
<p>You are posh and kind,</p>
<p>And you have good thought in your mind,</p>
<p>I do not know what to write,</p>
<p>But one thing</p>
<p>WE SHOULD NOT FIGHT</p>
<p>By: Amma&#8217;s favourite Kutty</p>
<p>அன்பாக அணைத்து முத்தமிட்டேன். &#8220;நான் அப்பிடி செய்ததுக்கு Sorry அம்மா&#8221; என்று சொல்லி முத்தம் தந்து விட்டு, அந்தக் கடிதத்தை கடைசிவரை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டும் என்று அன்பாய் உத்தரவிட்டுவிட்டு, படுத்து, உடனேயே தூங்கி விட்டாள் என் செல்ல மகள்.</p>
<hr><h2>10 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-526">February 5, 2010</a>, <a href="http://vidhoosh.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://vidhoosh.blogspot.com');"  rel='external nofollow' class='url'>Vidhoosh</a> wrote:</p><p>ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கு. வாழ்த்துக்கள்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-527">February 5, 2010</a>, <a href="http://varadaradj.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://varadaradj.blogspot.com');"  rel='external nofollow' class='url'>Varadaradjalou</a> wrote:</p><p>நெகிழவைத்துவிட்டது உங்கள் இந்த பதிவு.</p><p></p><p>குட்டியுடன் இனி சண்டை போடாதீர்கள், ப்ளீஸ்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-528">February 5, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>Very touchy!!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-529">February 5, 2010</a>, <a href="http://naanirakkappokiraen-aruna.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://naanirakkappokiraen-aruna.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>aruna</a> wrote:</p><p>ஆஹா...குட்டிம்மா கலக்குறாங்க!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-530">February 5, 2010</a>, <a href="http://mazhai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://mazhai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>`மழை` ஷ்ரேயா</a> wrote:</p><p>நல்லாருக்கு. </p><p>இதெல்லாம் பொக்கிசச் சாமான்... பத்திரமா வைச்சிருப்பீங்க என்டு தெரியும். அம்மாமாருக்குக் கை வந்த கலை இது. :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-532">February 7, 2010</a>, <a href="http://naanvijay.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://naanvijay.blogspot.com');"  rel='external nofollow' class='url'>விஜயநரசிம்மன்</a> wrote:</p><p>கவிதை அழகென்றால், அந்தக் குட்டிக் கவிதாயினி அதைவிட அழகு...</p><p>அழகான நிகழ்வு... ஒரே ஒரு சின்ன வருத்தம், குழந்தை ஆங்கிலத்தில் எழுதியது, ”குழந்தைக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் - கவிதை எழுதும் அளவிற்கு” -என்று நான் உங்களைக் கேட்டுக்கொண்டால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்! அழகான ஒரு குட்டிக் கவிதாயினி கிடைக்கப்பெற்றால் தமிழ் மிகவும் பேறுபெறும் - அதற்காகவே சொல்கிறேன்!</p><p>பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!</p><p>விஜய் :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-533">February 9, 2010</a>, கலை wrote:</p><p>பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.</p><p></p><p>விஜயநரசிம்மன்!</p><p></p><p>மகள் தமிழில் நன்றாக கதைக்கவும், அத்தோடு கொஞ்சமாய் எழுதவும், வாசிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாள். சின்ன சின்ன கவிதைகள்கூட எழுதியிருக்கிறாள். அம்மம்மா, தாத்தாவிற்கு, (தனக்குத் தெரிந்த) அழகு தமிழில் குட்டிக் கவிதை கூட எழுதிக் கொடுத்திருக்கிறாள். தொடர்ந்து தமிழில் எழுத உற்சாகப்படுத்தி வருகின்றேன். பார்க்கலாம்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-551">March 6, 2010</a>, Karitha Shalee wrote:</p><p>மிகவும் அருமையான பதிவு</p><p>வாழ்த்துக்கள்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-596">April 24, 2010</a>, பாலாஜி (மேம்) wrote:</p><p>என் குட்டிம்மா நினைவு வந்து விட்டது! </p><p></p><p>மனமார்ந்த நன்றி!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/#comment-597">April 24, 2010</a>, <a href="http://tamilsowimya.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://tamilsowimya.blogspot.com');"  rel='external nofollow' class='url'>VELU.G</a> wrote:</p><p>அருமையான பதிவு </p><p></p><p>இது போல் குழந்தைகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமனாலும் படிக்கலாம்</p><p></p><p>நன்றி</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/02/en-chella-kuttymma/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>என் குட்டித் தேவதையின் நாடு!</title>
		<link>http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comments</comments>
		<pubDate>Wed, 16 Dec 2009 08:40:42 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Kids world]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=525</guid>
		<description><![CDATA[&#8220;அம்மா! நான் எனக்கு ஒரு country வைச்சிருக்கிறன்” என்று மகள் வந்து என்னிடம் சொன்னபோது, எனக்கு சரியாகப் புரியவில்லை. பிறகு &#8216;என்ன அது&#8217; என்று விளக்கமாக கேட்டபிறகு புரிந்தது. அவள் தனக்கு பிடித்தமான வகையில் ஒரு நாட்டை கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள்.
அந்த நாடு ஒரு மழைத்துளி வடிவமாம். அழகாத்தான் இருக்கும். நாங்க இலங்கையை மாங்காய் வடிவம் என்று படித்தது நினைவுக்கு வந்தது. அதன் பெயர் &#8221;தாய் மிலோ கனாய் ரோ&#8217; (Thai Milo Canai Ro) வாம். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>&#8220;அம்மா! நான் எனக்கு ஒரு country வைச்சிருக்கிறன்” </strong>என்று மகள் வந்து என்னிடம் சொன்னபோது, எனக்கு சரியாகப் புரியவில்லை. பிறகு &#8216;என்ன அது&#8217; என்று விளக்கமாக கேட்டபிறகு புரிந்தது. அவள் தனக்கு பிடித்தமான வகையில் ஒரு நாட்டை கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள்.</p>
<p>அந்த நாடு ஒரு மழைத்துளி வடிவமாம். அழகாத்தான் இருக்கும். நாங்க இலங்கையை மாங்காய் வடிவம் என்று படித்தது நினைவுக்கு வந்தது. அதன் பெயர் &#8221;தாய் மிலோ கனாய் ரோ&#8217; (Thai Milo Canai Ro) வாம். ”என்னம்மா இப்படி ஒரு வாயில நுழையாத பெயராக்கிடக்கு? என்று நான் கேட்டேன். “அது Chinese மாதிரி ஒரு language. ஆனா Chinese இல்லை. அதான் அப்பிடிப் பேர்” என்று பதில் கிடைத்தது. அட, ஏதோ புரியாத மொழியில் (அவளுக்குமே தெரியாத மொழிதான், <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ) அந்த நாட்டின் பெயரை எழுதி வேறு காட்டினாள். ஏதோ கோடுகோடா எழுதினாள். (இந்த இடுகையை எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரெனத் தோன்றியதால், அந்தப் பெயரை கூகிளின் மொழி மாற்றியில் போட்டுப் பார்த்தேன். இப்படி வந்திருக்கு 泰国米洛煎饼滚装 . <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  யாராவது சீனமொழி தெரிந்தவர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லிட்டுப் போங்கப்பா).</p>
<p>மகள், அவளுடைய மாமாக்கும் தன்னுடைய நாட்டைப் பற்றி சொல்லியிருந்தாள். மாமா அவளுக்கு அனுப்பின வாழ்த்து அட்டையின் உறையில The Little Princess, Thai milo kanai ro என்று எழுதியிருந்தார். பார்த்து அவவுக்கு நல்ல மகிழ்ச்சி.</p>
<p>சரி, அவளுடைய அந்த நாட்டின் பெயருக்கு அவள் கொடுத்த ஆங்கிலப் பெயர் The Dragen City. நானும் Thai Milo Canai Ro என்ற பெயர் எதை குறிக்கும் என்று தேடிப் பார்த்தேன். வேறு என்ன வேலையில்லாத வேலைதான் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . Thai என்பதை தேடியபோது, அது முதலாவதா, ஆங்கில விக்கிப்பீடியாவில் தாய்லாந்து பற்றின கட்டுரையில் கொண்டுபோய் விட்டது. அங்கே இப்படி Thai க்கு விளக்கம் கொடுத்திருக்கு.</p>
<p>The word <em>Thai</em> (<a title="wikt:ไทย" href="http://en.wiktionary.org/wiki/%E0%B9%84%E0%B8%97%E0%B8%A2">ไทย</a>) is not, as commonly believed, derived from the word <em>Tai</em> (<a title="wikt:ไท" href="http://en.wiktionary.org/wiki/%E0%B9%84%E0%B8%97">ไท</a>) meaning &#8220;freedom&#8221; in the <a title="Thai language" href="http://en.wikipedia.org/wiki/Thai_language">Thai language</a>; it is, however, the name of an <a title="Ethnic group" href="http://en.wikipedia.org/wiki/Ethnic_group">ethnic group</a> from the central plains (the <a title="Thai people" href="http://en.wikipedia.org/wiki/Thai_people">Thai people</a>).<sup style="white-space: nowrap;" title="This claim needs references to reliable sources from November 2007">[<em><a title="Wikipedia:Citation needed" href="http://en.wikipedia.org/wiki/Wikipedia:Citation_needed">citation needed</a></em>]</sup> A famous Thai scholar argued that Tai (ไท) simply means &#8220;people&#8221; or &#8220;human being&#8221; since his investigation shows that in some rural areas the word &#8220;Tai&#8221; was used instead of the usual Thai word &#8220;khon&#8221; (<a title="wikt:คน" href="http://en.wiktionary.org/wiki/%E0%B8%84%E0%B8%99">คน</a>) for people.<sup id="cite_ref-12"><a href="http://en.wikipedia.org/wiki/Thailand#cite_note-12"><span>[</span>13<span>]</span></a></sup> The phrase &#8220;Land of the free&#8221; is derived from Thai pride in the fact that Thailand is the only country in Southeast Asia never colonized by a European power.</p>
<p>பரவாயில்லை, என்னமோ தேடிப் போய், இன்றைக்கு புதுசா ஒரு விசயம் தெரிந்து கொண்டன். <strong>தென்கிழக்காசிய நாடுகளிலேயே காலனியாதிக்கத்துக்கு உட்படாத ஒரே நாடு தாய்லாந்தாம்.</strong> &#8216;Thai&#8217; என்பது ‘சுதந்திரம்&#8217; என்பதைக் குறிக்குமாக இருந்தால், மகள் தன்ரை நாட்டுக்கு மிகப் பொருத்தமாத்தான் பெயர் வைச்சிருக்கிறாள் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>அடுத்து Milo க்கு அவள் சொன்ன உச்சரிப்பு ‘மிலோ&#8217;. ஆனால் எனக்கு இதைப் பார்த்தால் நினைவு வருவது மைலோ. Chocolate கலந்த பால் மா. இலங்கையில இருக்கேக்கை அது குடிச்சிருக்கிறன். அதை தேடினால், அதுவும் அந்த பானம்பற்றி சொல்கிறது. மகளும் தன்னுடைய நாட்டு chocolate பற்றி சொல்லியிருக்கிறாள். அது பிறகு சொல்லுறன்.</p>
<p>அடுத்தது, Canai என்னெண்டு தேடினால், சிங்கப்பூர், மலேசியாவின் ஒரு வகை ரொட்டி உணவாம். அடுத்தது Ro வைத் தேடினால் என்னவோ முக்கியமில்லாமல் வந்தது. அதனால அவளுடைய நாட்டை அவள் விபரிச்ச விதத்துக்கு இப்ப போவம்.</p>
<p>அடடா, நான் எழுதியதில் ஒரு பிழை விட்டிட்டேனாம். ம்ம்ம். தன்னுடைய நாடு எப்படி என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாள் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . Thai milo kanai ro என்று எழுத வேண்டுமாம். எழுத்துப் பிழையில்லாம, சின்ன எழுத்து பெரிய எழுத்து வேறுபாட்டோட எழுத வேணுமாம் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . Kanai என்று தேடினால், Mika Kanai என்ற யப்பான் நாட்டு பாடகரைப் பற்றி வருகிறது.</p>
<p>அவளுடைய நாட்டுல Government என்று பெரிதாக ஒன்றுமில்லையாம். ஏனெண்டால் ஆக்களெல்லாம் நல்ல சுதந்திரமா இருக்கினம். ரெண்டே ரெண்டு பேர்தானாம் Govt. ல ஒன்று அவள். இன்னொரு ஆளை இப்பதான் தேடிக் கொண்டு இருக்கிறாவாம். அங்க எல்லாம் எல்லாருக்கும் சொந்தமாம்.</p>
<p>எல்லா பழங்களும் ஒரே மரத்தில காய்க்குமாம். தனித்தனி மரமெல்லாம் இல்லையாம். அங்க Chocolate மாதிரி வெள்ளை நிறத்தில ஒரு உணவு இருக்காம். அது இனிப்பாக இருந்தாலும், அதிகம் உண்டால், உடலுக்கு தீங்கு தரக்கூடிய sugar இல்லையாம். அங்க பொதுவான இடங்களிலெல்லாம் மரக்கறி பயிரிட்டிருக்குமாம். யாரும் எங்கயிருந்தும் எடுத்துக் கொண்டு போகலாமாம். அதனால கடையில் மரக்கறி வாங்கத் தேவையில்லையாம். தனிய மீன், இறைச்சி வகைகள்தான் கடையில வாங்க வேணுமாம். அந்த நாட்டில அடிக்கடி Food festival நடக்குமாம்.</p>
<p>அங்க மின்சாரம் எடுக்க solar energy, geothermal energy, windmill, biomass தான் பாவிக்கிறாங்களாம். மோட்டார் வண்டிகளில எல்லாம் solar panels பூட்டி இருக்குமாம். அதுல இருந்து எடுக்கிற சக்தியிலதான் வண்டிகள் ஓட்டப்படுமாம்.</p>
<p>அங்க மரமெல்லாம் வெட்ட சட்டம் அனுமதிக்காதாம். அதால ஒருவரும் வெட்டுறதில்லையாம்.</p>
<p>நாட்டு தேசிய உடையை என்னவோ நிறைய சொல்லி விபரித்தாள். அது கொஞ்சம் யப்பான் உடையும், கொஞ்சம் இலங்கை உடையும் கலந்து இருக்குமாம்.</p>
<p>நாட்டின் காலநிலை, இலங்கையில் மாதிரி நிறையநாள் சூரியன் வருமாம். சில நாட்கள் மட்டும் மழை பெய்யுமாம். சில இடங்களில snow உம் இருக்குமாம். அப்பதானே snow விளையாட்டுகளும் விளையாடலாம்.</p>
<p>Currency பற்றியும் நிறைய விளக்கம் கொடுத்தாள். அந்த currency க்குப் பெயர்&#8230; (ம்ம்ம், இப்ப மறந்து போனன், பிறகு கேட்டு எழுதுறன்).</p>
<p>இப்படி இன்னும் என்னென்னவோ இரசிக்கும்படியான விசயங்கள் எல்லாம் நடக்குது அவளின்ரை நாட்டில.</p>
<p>நல்ல நாடுதான், இல்லையா?</p>
<hr><h2>10 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comment-484">December 16, 2009</a>, <a href="http://http//wwwammachi.sornavalli@blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://http//wwwammachi.sornavalli@blogspot.com');"  rel='external nofollow' class='url'>kavitha</a> wrote:</p><p>ungal kutti devathaiyin naadu migavum alagu </p><p></p><p>knjm recomment pannunga </p><p></p><p>engalukkum konjam idam koddukka solli</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comment-486">December 16, 2009</a>, <a href="http://http//wwwammachi.sornavalli@blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://http//wwwammachi.sornavalli@blogspot.com');"  rel='external nofollow' class='url'>kavitha</a> wrote:</p><p>alaguuuuuuuuuuuuuuuuu</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comment-487">December 16, 2009</a>, <a href="http://http//wwwammachi.sornavalli@blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://http//wwwammachi.sornavalli@blogspot.com');"  rel='external nofollow' class='url'>kavitha</a> wrote:</p><p>knjm recommend pannunga </p><p></p><p>engalukkum konjam idam kodukka solli </p><p></p><p></p><p>ungal kutti devathaiyidam</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comment-491">December 16, 2009</a>, <a href="http://aalamaram.blogspot.com/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://aalamaram.blogspot.com/');"  rel='external nofollow' class='url'>திரு</a> wrote:</p><p>泰国米洛煎饼滚装 = Thailand Milo pancake Ro-Ro (source: google translator) :)</p><p></p><p>குழந்தைகளின் கற்பனைகளில் தான் எவ்வளவு சமத்துவமும், இயற்கை பேணலும்.  குழந்தைகளால் மட்டுமே இத்தகைய உலகை உருவாக்க முடிகிறது. ஆனாலும்  வாசிப்பு, கேள்வி, அனுபவ அறிவுகளின் பாதிப்பு குழந்தைகளின் கற்பனைகளிலும் இருக்கிறது. </p><p></p><p>மகளின் கற்பனை வளம் அருமை. குழந்தைகளிடமிருந்து அறிய நிறையவே இருக்கிறது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comment-492">December 16, 2009</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>மிகவும் அருமையான கற்பனை! </p><p>மகளின் கற்பனைத்திரண் வியக்க வைக்கிறது! வாழ்த்துகள்!!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comment-493">December 16, 2009</a>, <a href="http://adaleru.wordpress.com/2009/12/14/book-review-thalaisumai/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://adaleru.wordpress.com/2009/12/14/book-review-thalaisumai/');"  rel='external nofollow' class='url'>அடலேறு</a> wrote:</p><p>குழந்தைகளின் உலகம் தான் எவ்வளவு அழகானது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comment-496">December 16, 2009</a>, `மழை` ஷ்ரேயா wrote:</p><p>அந்த நாட்டில குடியேற என்ன செய்ய வேணும்? :O)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comment-497">December 16, 2009</a>, கலை wrote:</p><p>ஆம், உண்மைதான், குழந்தைகளின் உலகம் மிக மிக அழகானது. அதை மீண்டும் அடைய முடியாதா என்ற ஏக்கம் எப்போதும் என்னிடம் இருக்கிறது.</p><p></p><p>//அந்த நாட்டில குடியேற என்ன செய்ய வேணும்? :O)//</p><p></p><p>கொஞ்சம் பொறுங்கோ, மகளிட்டை கேட்டுச் சொல்லுறன். ஏனெண்டா, அவள்தான் அங்க Govt. ல இருக்கிற ஒரே ஆள் :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comment-500">December 16, 2009</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>//எல்லா பழங்களும் ஒரே மரத்தில காய்க்குமாம். தனித்தனி மரமெல்லாம் இல்லையாம்.//</p><p></p><p>இந்த மாதிரி யோசனை எல்லாம் ஏன் நமக்கு வர மாட்டேன்குது? உண்மையிலேயே பெரியவர்கள் கற்பனை வறண்டு போனவர்கள் தான். </p><p></p><p>ஆனா, எனக்கு இப்ப ஒன்னு தோணுது. </p><p></p><p>அவங்கட நாட்டில் ஒரே ஒரு இறுவட்டு வாங்கினா உலகின் எல்லா படம் காட்டுற மாதிரி, ஒரே ஒரு புத்தகம் வாங்கினா உலகின் எல்லா இலக்கியங்களும் படிக்கிற மாதிரி வசதி உண்டா :)</p><p></p><p>//அங்க பொதுவான இடங்களிலெல்லாம் மரக்கறி பயிரிட்டிருக்குமாம். யாரும் எங்கயிருந்தும் எடுத்துக் கொண்டு போகலாமாம். அதனால கடையில் மரக்கறி வாங்கத் தேவையில்லையாம்.//</p><p></p><p>இப்பவும் உலகின் பழங்குடிப் பகுதிகளில் இப்படித்தான்.  நகர நாகரிகம் தான் சமத்துவத்தைக் குலைத்து விட்டது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/#comment-510">December 19, 2009</a>, Karitha shalee wrote:</p><p>Really Nice, Dream of your girl will come true.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/12/my-little-angels-country/feed/</wfw:commentRss>
		<slash:comments>10</slash:comments>
		</item>
		<item>
		<title>குட்டி இளவரசன்!</title>
		<link>http://kalaiarasy.com/2009/11/the-little-prince/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/11/the-little-prince/#comments</comments>
		<pubDate>Mon, 30 Nov 2009 08:43:03 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Kids world]]></category>
		<category><![CDATA[The Little Prince]]></category>
		<category><![CDATA[human nature]]></category>
		<category><![CDATA[life]]></category>
		<category><![CDATA[அன்பு]]></category>
		<category><![CDATA[கதை]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=522</guid>
		<description><![CDATA[&#8216;The Little Prince&#8217; புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் கதை அழகாக பயணிக்கிறது.
The little Prince கதையில, கதையைச் சொல்பவர், தான் 6 வயதில் ஒரு படம் வரைந்ததாகவும், அந்தப் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>&#8216;The Little Prince&#8217;</strong> புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் கதை அழகாக பயணிக்கிறது.</p>
<p>The little Prince கதையில, கதையைச் சொல்பவர், தான் 6 வயதில் ஒரு படம் வரைந்ததாகவும், அந்தப் படம் பெரியவர்களுக்குப் புரியவில்லை என்றும் சொல்லிவிட்டு, பெரியவர்களுக்கு எதுவும் இலகுவாக புரியாதென்றும், அவர்களுக்குப் புரியுற மாதிரி எதையும் செய்யுறது இலகுவான காரியமில்லை என்றும் சொல்கிறார். பெரியவர்களுக்கு புரிய வைக்கிறதென்றால், பெரிய விளக்கங்கள் எல்லாம் கொடுக்க வேணுமாம் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . மகள் சில விசயங்களை எனக்கு சொல்ல முயற்சித்துவிட்டு, “என்ன நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கேல்லையா” என்று பொறுமையிழந்து கேட்பதுதான் எனக்கு நினைவில் வந்தது.</p>
<p>ஆறு வயதில தான் வரைந்த படத்தை ஒருவரும் பொருட்படுத்தாமல் விட்டதால, தான் பெரிய ஒரு ஓவியராக வரும் ஆசையை, தனக்கு மிகப் பிடித்த தொழிலை தான் துறந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். பிறகு பெரியவர்களுக்குப் பிடித்த மாதிரி நான் ஒரு விமான ஓட்டியாக ஆகிவிட்டேன் என்கிறார். இந்த இடத்தில மகள் முதன் முதலில் வரைந்த படத்தை மிகவும் கவனமாக வைத்திருந்து, இப்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவளுடைய பாடசாலை வேலைக்காக, &#8216;Time line of my life&#8217; செய்வதற்கு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு முதலும் வரைந்திருந்தாலும் (அல்லது கிறுக்கியிருந்தாலும்), இன்னதுதான் என்று சொல்லி வரைந்த முதல் படங்கள் இவைதான்.</p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2009/11/Untitled.jpg"><img class="alignleft size-full wp-image-443" title="அஞ்சலியின் மரம்" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2009/11/Untitled.jpg" alt="அஞ்சலியின் மரம்" width="189" height="250" /></a></p>
<p>இது ஒரு மரமாம்.</p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2009/11/Untitled2.jpg"><img class="alignleft size-full wp-image-496" title="Untitled" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2009/11/Untitled2.jpg" alt="Untitled" width="217" height="120" /></a></p>
<p>இது ஒரு பெண்மணியின் முகமாம்.</p>
<p>அது மட்டுமில்லை, The Little Prince கதையில அவர் மேலும் சொல்கிறார், பெரியவர்களுக்கு எதையும் எண்களுடன் சேர்த்துத்தான் யோசிக்கத் தெரிகிறதாம். அதுக்கு ஒரு உதாரணமும் சொல்கிறார். ஒரு புதிய நண்பனைப் பற்றி பெரியவர்களிடம் சொன்னால், “அவனது குரல் எப்படி இருக்கும்? அவனுக்கு என்ன விளையாட்டுகள் பிடிக்கும்? அவன் வண்ணத்துப் பூச்சிகள் சேகரிக்கிறானா?” என்றெல்லாம் கேட்பதை விடுத்து, “அவனுக்கு எத்தனை வயது? அவனுக்கு எத்தனை சகோதரர்கள்? அவனது அப்பா எவ்வளவு உழைக்கிறார்?” என்று ஏதாவது எண்களுடன் தொடர்பாகவே பேசிகிறார்களாம். பலர் பேசும்போது இதை உண்மையிலேயே இலகுவாக அவதானிக்க முடியும். வெறும் எண்களையே அவர்கள் மனம் சிந்திக்கிறது. அப்படி பலரும் பேசுவதுடன் நின்று விடாமல், எண்களை நோக்கியே தமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றார்கள். குழந்தைகள் உலகம் தனித்துவமானது. எத்தனை எளிமையானது. பெரியவர்களானதும் எப்படி நாமும் குழந்தைகளாக இருந்தோம் என்பது மறந்து போகிறது.</p>
<p>ஒருவர் எத்தனை பெரிய காரியத்தைச் செய்தாலும் சூழலுக்கேற்ற அவரது நடை, உடை, பாவனை முக்கியம் என்பதை, 1909 இல் B-612 என்ற சிறுகோளை கண்டுபிடித்த ஒரு துருக்கி வானியலாளரின் அறிக்கையை, அவர் துருக்கி ஆடையில் சென்று வெளியிட்டபோது முதலில் ஏற்றுக் கொள்ளாதவர்கள், பின்னர் நாகரீகமான உடையில் சென்று வெளியிட்டபோது, அதே அறிக்கையை ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார்.</p>
<p>கதையைச் சொல்பவர் விமான ஓட்டியாக இருக்கையில் ஒரு விபத்தில், யாருமற்ற ஒரு பாலைவனத்தில் தனியாக இருக்க வேண்டி வரும் சூழலில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே அவர் மிகச் சிறிய உருவத்தில் ஒரு குட்டி இளவரசனை சந்திப்பதாகவும், அந்தக் குட்டி இளவரசன் ஒரு குட்டியூண்டு கிரகத்தில் இருந்து வந்தவனாகவும், அந்த குட்டி இளவரசனும், கதை சொல்பவரும் சேர்ந்து செலவளிக்கும் நாட்களிலும், அந்த இளவரசன் சொல்லும் அனுபவங்களையும் வைத்தே கதையும் போகின்றது.</p>
<p>அந்த குட்டி இளவரசன் இவரிடம் ஆடு வரைந்து தரச் சொல்லிக் கேட்கிறார். முதலில் ஒவ்வொரு குறை சொல்லிய பின்னர், ஒரு பெட்டியை வரைந்து, அதனுள் ஆடு இருப்பதாகச் சொல்ல, அது இளவரசனுக்கு பிடித்துப் போவதுடன், புரியவும் செய்வது அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பெரியவர்களுக்குப் போல் விளக்கம் கொடுக்கத் தேவையில்லாமல் இருப்பதுவே காரணம்.</p>
<p>அந்த குட்டி இளவரசன் கேள்விகளுக்கு சரியாக பதில் கொடுக்காவிட்டாலும், அவன் கூறும் விசயங்களில் இருந்து விமான ஓட்டி சிறிது சிறிதாய் அவனது கோளைப் பற்றியும், அவனது வாழ்க்கை பற்றியும் புரிந்து கொள்கிறார். குட்டி இளவரசன் ஒரு பூவை தனது இடத்தில் வளர்த்து வந்ததையும், அதனை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டதையும், ஆனால் அந்த பூ சொன்ன சில வார்த்தைகள் அவனது மனதை சிறிதாய் காயப்படுத்தியதையும் புரிந்து கொள்கிறார். ஆனாலும் அவர் வரைந்து கொடுக்கும் ஆடு ஒருவேளை தனது பூவை உணவாக எடுத்துக் கொள்ளுமோ என்று இளவரசன் பயப்படுகின்றான். அதனால் ஆட்டுக்கு வாய்க்கட்டு ஒன்றையும், அத்துடன் பூவைச் சுற்றி வேலியும் வரைவதன் மூலம் பூவை பாதுகாக்க உதவுவதாக விமான ஓட்டி இளவரசனுக்கு உறுதி அளிக்கிறார்.</p>
<p>அந்த குட்டி இளவரசன் பூமிக்கு வந்து இவரைச் சந்திக்க முன்னர் வெவ்வேறு கிரகங்களுக்குப் போய் வந்த அனுபவங்களில் பல்வேறுபட்ட மனிதர்களின் இயல்புகளை கதை காட்டுகின்றது.</p>
<p>முதலாவது கிரகத்தில், தன்னைத் தவிர வேறெவரும் இல்லாத கிரகத்தை ஆட்சி செய்ய நினைக்கும் ஒரு அரசன். அரசனின் கட்டளைகள் விசித்திரமானவை. ஒருவரால் எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே கட்டளையாகப் பிறப்பிக்கும் அபூர்வ, புரிந்துணர்வுள்ள அரசன். இந்த குட்டி இளவரசன் எதை செய்ய விருப்பமில்லை என்றாலும், அதுபற்றிய தனது கட்டளையை மீளப் பெறும் அந்த அரசன், குட்டி இளவரசன் செய்ய விரும்புவதை மட்டுமே கட்டளையாக சொல்கிறான். அந்த அரசன் சொல்லும் முக்கியமான ஒரு விசயம்<strong> &#8216;எவருக்கும் இன்னொருவரை judge பண்ணுவதை விட தன்னைத்தானே judge பண்ணுவதுதான் மிகவும் கடினமானது. எப்போது ஒருவனால் தன்னைத்தானே சரியாக எடைபோட /சீர்தூக்கிப் பார்க்க முடிகிறதோ, அப்போதே அவன் ஒரு உண்மையான அறிவுள்ள/விவேகமுள்ள மனிதனாகிறான்&#8217;</strong>. ஆனால் அரசனுக்கு தனது அதிகாரத்தை மற்றவர்மேல் செலுத்துவதில் அத்தனை விருப்பம். சிலருக்கு தன்னுடைய அதிகாரத்துக்கு கீழ் மற்றவர் இருப்பதில் அத்தனை விருப்பம். ஏன் குடும்ப அமைப்புக்களிலும் இதை நாம் பார்க்க முடிகிறதே. வெறும் அதிகாரம் செலுத்த உரிமை கொடுத்தாலே அவர்கள் சமாதானமாகி இருப்பார்கள். அந்தக் குட்டி இளவரசன் அந்த கிரகத்திலிருந்து புறப்பட ஆயத்தமாகும்போது, அரசன் அவனைத் தடுக்கிறான். மறுக்கும் இளவரசனிடம் “உன்னை இந்தக் கிரகத்தின் Ambassador ஆக்குகிறேன் என்கிறான். குட்டி இளவரசன் நினைக்கிறான் ‘இந்த பெரியவர்களே விசித்திரமானவர்கள்தான்&#8217;.</p>
<p>அகம்பாவம் அல்லது போலித் தற்பெருமை கொண்ட ஒரு மனிதனை அடுத்த கிரகத்தில் இளவரசன் சந்திக்கிறான். தன்னைப்பற்றி மற்றவர் புகழ்பாடுவது தவிர வேறெதையும் கேட்க அவனுக்கு ஆர்வமில்லை. இதுக்கு உதாரணமாக தற்போதைய பல அரசியல் தலைவர்கள் மனதில் வந்து போனார்கள். அந்த தற்பெருமைக்காரனைப் பார்த்து இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் நிச்சயமாய் விநோதமானவர்கள்தான்&#8217;.</p>
<p>அடுத்த கிரகத்தில் ஒரு குடிகாரன். அவன் ஏன் குடிக்கிறான் என்று கேட்டால், தான் குடிப்பதையிட்டு வருந்துவதாயும், அந்த கவலையை மறக்க குடிப்பதாயும் கூறுகிறான். சிலபேர் குடிப்பதற்காகவே தமக்கு கவலையை /காரணத்தை உருவாக்கிக் கொள்வதை கண்டிருக்கிறேன். ஊரில் வாழ்ந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் ஒரு குடிகாரன். தினமும் குடித்து விட்டு வந்து ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, மனைவிக்கு அடிப்பது. மனைவி தன் பெற்றோரிடம் போய் விட்டால், மறுநாள் அந்தக் கவலையில் குடிப்பதாகச் சொல்லி குடிப்பது. அல்லது தங்கைமாரிடம் ‘உங்களாலதான் அவள் போய்ட்டாள்&#8217; என்று சொல்லி அடிப்பது. &#8216;சே என்ன மனிதன் இவன்&#8217; என்று வெறுப்பாக இருக்கும். கவலையில் குடிக்கிறேன் என்பவர்களிடம் கேட்கத் தோன்றும், &#8216;குடித்த பின்னர் கவலையில்லாமல் இருக்கிறீர்களா&#8217; என்று. குடித்துவிட்டு கவலையில் அரற்றிக் கொண்டுதானே இருக்கிறார்கள். அந்தக் கிரகத்தை விட்டு வெளியேறும்போது, இளவரசன் நினைக்கிறான் ‘பெரியவர்கள் சந்தேகமேயில்லாமல் மிக மிக விசித்திரமானவர்கள்தான்&#8217;.</p>
<p>அதற்கடுத்து குட்டி இளவரசன் செல்லும் கிரகத்தில் சந்திப்பது வணிகர் ஒருவரை. குட்டி இளவரசன் வந்ததைக் கூட நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல், ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறார். அவர் நட்சத்திரங்கள் தனக்கு சொந்தமானவை என்றும் அவற்றை எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பதிலுமே பொழுதை கழிக்கிறார். குட்டி இளவரசனுடன் பேசக் கூட நேரமில்லாமல் நட்சத்திரம் எண்ணுகிறார். அவருக்கு சொந்தமான அந்த நட்சத்திரங்களை வைத்து அவர் என்ன செய்வார் என்றால் மேலும் நட்சத்திரங்கள் வாங்குவாராம். அவர் தனக்கு &#8216;முடிவுகளை அல்லது பலன்களைப் பற்றி (matters of consequence) மட்டுமே அக்கறை&#8217; என்கிறார். பல பணம் சேர்க்க விரும்பும் பணக்காரர்கள் கதையும் இதுதானே? ஓடி ஓடி கோடிக்கணக்கில் சேர்க்கிறார்கள். பேசக் கூட நேரமில்லாமல் அப்படி சேர்ப்பதில்தான் என்ன பலன்? இளவரசன் அவரிடம் ”அதெப்படி நட்சத்திரங்கள் உனக்கு சொந்தமாகும்?” என்று கேட்பதற்கு அவர் கூறும் பதில் “யாருக்கும் சொந்தமில்லாத வைரத்தை நீ கண்டெடுத்தால், அது உனக்கு சொந்தமாகும். யாருக்கும் சொந்தமற்ற தீவை நீ கண்டு பிடித்தால் அது உனக்குச் சொந்தமாகும். எவருக்கும் வராத யோசனை உனக்கு வந்தால், அதற்கான உரிமை உனக்குத்தான். அதேபோல் நட்சத்திரங்களை உரிமையாக்கும் எண்ணம் எனக்கே முதலில் வந்ததால், நட்சத்திரங்கள் எனக்கே சொந்தமானவை&#8217;. எமக்கு பிடித்தவற்றை நமக்கே சொந்தமாக்கிக் கொள்ளவே விரும்புகிறோம். அங்கிருந்து புறப்படும் இளவரசன் தனக்குள் ‘பெரியவர்கள் மிக நிச்சயமாய் அசாதாரணமானவர்கள்தான்&#8217; என்று நினைத்தபடி போகின்றான்.</p>
<p>இன்னொரு சிறுகோளில், கடமையே கண்ணாக இருக்கும் ஒரு விளக்குப் போட்டு அணைப்பவரை சந்திக்கிறான் குட்டி இளவரசன். ஆரம்பத்தில் அந்தக் கோள் மெதுவாகச் சுற்றியபோது இரவில் விளக்குப் போட்டு, காலையில் அணைத்துக் கொண்டிருந்த அவர், அந்தக் கோள் மிக விரைவாக சுற்ற ஆரம்பித்த பின்னர் தொடர்ந்து விளக்குப் போடுவதும், அணைப்பதுமாகவே இருக்கிறார். அந்த கோள் ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை முழுச்சுற்றை செய்வதால், அவருக்கு ஓய்வெடுக்கவே நேரமற்றுப் போகிறது. குட்டி இளவரசனுக்கு அவனே அபத்தமில்லாதவனாகத் தெரிகின்றான். காரணம் <strong>அவன் தன்னைப்பற்றி மட்டும் எண்ணாமல் வேறு விடயங்களுக்கும் முக்கியத்துவம் தருகின்றான்</strong>. எனக்கும்தான் அவனை மிகவும் பிடித்துப் போனது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . குட்டி இளவரசனுக்கு அவனுடன் நட்பாகி அங்கேயே தங்கி விட விருப்பமிருந்தாலும், அந்த கோள் மிகச் சிறியதாக, இரண்டு பேருக்கு இடமற்று இருப்பதால், தனது பயணத்தை தொடர்கின்றான்.</p>
<p>அதற்கும் அடுத்த கிரகத்தில் அவன் சந்தித்தது ஒரு புவியியல் ஆராய்ச்சியாளர். அவர் தனக்கு நிறைய விடயங்கள் தெரியும் என்று நம்புகிறார். ஆனால் ஒரே இடத்தில் இருந்தபடியே எல்லாவற்றையும் செய்யப் பார்க்கிறார். மற்றவர்களின் உழைப்பில் தான் பெயரைப் பெற்றுச் செல்ல விரும்பும் மனிதர்களை நினைவு படுத்தினார். சில ஆராய்ச்சியாளர்களும் இப்படி இருக்கிறார்கள். தமக்கு கீழ் வரும் மாணவர்களின் உழைப்பில் தாம் பெயரைத் தட்டிச் செல்வார்கள்.  சில அமைப்புக்கள், நிறுவனங்களின் பெரிய பொறுப்பில் இருப்பவர்களும் தாம் எதையுமே செய்யாமல், கீழ் உள்ளவர்களின் உழைப்பை தமதாக பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். அந்த புவியியலாளரே குட்டி இளவரசனுக்கு பூமிக்குப் போகும்படி அறிவுரை சொல்கின்றார்.</p>
<p>இறுதியில் பூமிக்கு வரும் அந்தக் குட்டி இளவரசன் முதலில் ஒரு பாம்பை சந்திக்கிறான். பாம்பிடம் மனிதர்கள் எங்கே என்று விசாரிக்க, பாம்பு அது பாலைவனமென்றும், மக்கள் அங்கே இல்லை என்றும், பூமி மிகப் பெரியது என்றும் கூறுகின்றது. அதன் பின்னர் ஒரு பூக்கன்றை கண்டு ‘மனிதர்கள் எங்கே?&#8217; என்று விசாரிக்கிறான். அதற்கு பூக்கன்று, மனித இனம் அழிந்துகொண்டு போகும் இனமாக கூறுகின்றது. ஒருவேளை எதிர்காலத்தை கற்பனையில் கண்டு எழுதியிருப்பாரோ? <strong>மனிதர்களுக்கு வேர்கள் இல்லாமையால், அவர்கள் காற்றோடு எடுத்துச் சொல்லப்படுவதாகவும், அதனால் அவர்களது வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாய் இருப்பதாகவும் அந்த பூக்கன்று சொல்கின்றது.</strong></p>
<p>பின்னர் ஒரு மலையில் ஏறும் அந்தக் குட்டி இளவரசனுக்கு அவன் சொல்லும் வார்த்தைகளே எதிரொலியாக கேட்கின்றது. அப்போது அந்தக் குட்டி இளவரசன் <strong>‘இந்தப் பூமி மிகவும் வரண்டதாகவும், அங்குள்ளவர்கள் கற்பனையற்றவர்களாகவும் இருக்கிறார்கள்&#8217; என்று நினைத்துக் கொள்கின்றான். </strong>பிறகு நெடுந்தூரம் நடந்து சென்று, குட்டி இளவரசன் ஒரு பெரிய ரோசாப்பூத் தோட்டத்தை அடைகின்றான். அப்போது தன்னுடைய கிரகத்தில் தனியாகத் தான் விட்டு வந்த பூவை நினைக்கிறான். அந்தப் பூவோ தான் மட்டுமே இந்த முழு பிரபஞ்சத்திலும் இந்த வகையிலுள்ள ஒரே ஒரு பூ எனக் கூறியிருந்தது. அவனும் தன்னிடம் தனித்துவமான ஒரு ஒரு பொருள் இருப்பதாக பெருமை கொண்டிருந்ததையும், ஆனால் அது ஒரு பொதுவான ரோசாதான் என்றும் எண்ணிக் கொள்கின்றான். அதேவேளை அந்த ரோசாவை தனியே விட்டு வந்ததை எண்ணி கவலையும் கொள்கின்றான்.</p>
<p>அதன் பின்னர் அவன் சந்திக்கும் ஒரு நரி அவனுக்கு பெரிய தத்துவத்தையே சொல்லிக் கொடுக்கிறது. நரி அவனை, தன்னுடன் நட்பாகும்படியும், <strong>மனிதர்கள் எதையும் புரிந்து கொள்ளும் மனநிலையை இழந்து விட்டார்கள் என்றும், தயார் செய்யப்படும் பொருட்களை (ready-made) கடைகளில் வாங்குகின்றார்கள், ஆனால் நட்பை வாங்கும் கடைகள் இல்லாமையால் நட்பை மறந்து விட்டதாகவும் கூறுகின்றது.</strong> நட்பாவதற்கு எதையும் பேசாமல் இருப்பதே நல்லது என்றும், <strong>வார்த்தைகளே மனவேற்றுமைகளுக்கு காரணம்</strong> என்றும் அந்த நரி சொல்கின்றது. ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அண்மித்து வருவதனால் நட்பாகலாம் என்று நரி சொல்வது போலவே, குட்டி இளவரசன் நரியுடன் நட்பாகின்றான். ஆனால் குட்டி இளவரசன் போக வேண்டிய நேரம் வரும்போது நரி நட்பை விட்டுப் பிரிவதை எண்ணி கவலை கொள்கின்றது. அப்போது, குட்டி இளவரசன் ”நான் உனக்கு எந்த கெடுதலும் செய்ய நினைக்கவில்லை. ஆனால், நீதான் என்னை நட்பு கொள்ளச் சொன்னாய்” என்று நரியிடம் சொல்கின்றான். நரியோ “ஆம், அது அப்படித்தான். நீ இப்போது அந்த ரோசாத் தோட்டத்துக்கு போய் வா” என்று சொல்கிறது. அங்கே போனபோதுதான் அவனுக்குப் புரிகிறது, &#8216;அங்கே ஆயிரக் கணக்கில் ரோசாக்கள் இருந்தாலும், அவனது ரோசா தனித்துவமானதுதான். காரணம் அந்த ரோசாமேல் அவன் கொண்டிருக்கும் பாசம். நரியிடம் நட்பு கொண்டதாலேயே, பார்க்கும் எல்லா நரிகளைப் போல அல்லாமல், குறிப்பிட்ட அந்த நரி தனித்துவமானது ஆகியதைப் போல&#8217;. அவன் மீண்டும் நரியிடம் வந்தபோது நரி ஒரு இரகசியத்தை சொல்வதாக சொல்கின்றது <strong>“இதயத்தால் மட்டுமே சரியாகப் பார்க்க முடியும். கண்களுக்கு முக்கியமானவை தெரியாது. மனிதர்கள் இந்த உண்மையை மறந்து விட்டார்கள். </strong>நீ உனது ரோசாவுக்காக செலவு செய்த நேரமே, அந்த ரோசா உனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லும். உனக்கு அந்த ரோசாவில் உள்ள அன்பினால், நீ அந்த ரோசாவுக்கு பொறுப்புள்ளவனாகின்றாய்”. நாங்கள் யார்மேல் உண்மையான அன்பைச் செலுத்துகிறோமோ, அவர்களே எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்களாகவும், தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.</p>
<p>பின்னர் ஒரு தொடர்வண்டி நிலையத்தை அடையும் அந்தக் குட்டி இளவரசன், ஒரு தொடர்வண்டியில் ஏராளமான மனிதர்கள் போவதைக் கண்டு ”இவர்கள் எங்கே அவசரமாகப் போகின்றார்கள்?” என்று அங்கிருப்பவரிடம் கேட்க, அவர் ”அது யாருக்கும் தெரியாது” என்று சொல்கின்றார். பின்னர் மறு புறமிருந்து ஒரு தொடர் வண்டி வர, ”போனவர்கள் ஏன் திரும்பி வருகின்றார்கள்?” என்று கேட்க, ”இவர்கள் வேறு மனிதர்கள்” என்று பதில் கிடைக்கிறது. ”ஏனப்படி” என்றதற்கு, “அவர்கள் தாம் இருக்குமிடத்தில் திருப்தி அடைவதில்லை” என்கின்றார். ‘இக்கரை மாட்டுக்கு, அக்கரை பச்சை&#8217; <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . அப்போது குட்டி இளவரசன் நினைக்கிறான், &#8216;குழந்தைகளுக்கு மட்டுமே தமக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும்&#8217;.</p>
<p>ஒரு வியாபாரி, தாகம் எடுப்பதைத் தவிர்க்க குழிகைகள் விற்பதைக் காண்கின்றான். ஏனிப்படி என்று கேட்டால், ”தாகம் தீர்க்க எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தி அந்த நேரத்தில் விரும்பியதைச் செய்யலாம்” என்று வியாபாரி சொல்கின்றார். அப்போது அந்த குட்டி இளவரசன் நினைக்கிறான், அப்படி தனக்கு அந்த நேரம் மிச்சப்படுமானால், &#8216;அந்த நேரத்தில் நன்னீர் கிடைக்கும் இடத்தை நோக்கி அமைதியாக நடந்து செல்லலாம்&#8217; என்று. நாம் சில சமயம் (அல்லது பல சமயம்) நேரத்தை மிச்சம் பிடிப்பதற்கு ஏதேதோ செய்வோம். ஆனால் அந்த மிச்சம் பிடித்த நேரத்தில் உருப்படியாக எதையும் செய்வதில்லை.</p>
<p>இந்த அனுபவங்களைக் கேட்ட விமான ஓட்டி (கதையை சொல்ல ஆரம்பித்தவர்), குட்டி இளவரசனின் அனுபவங்கள் சுவாரசியமானவை என்கிறார். அந்த அனுபவங்கள் மூலம் நிறைய உண்மைகளை அந்த குட்டி இளவரசன் அவருக்குப் புரிய வைக்கிறான். சில சமயம் எல்லோரையும் ஒரே விதமாகப் பார்த்து, ஒரே விதமாக நட்புகொள்வது நல்லதுதான். இந்த கருத்து வந்த இடத்தை வாசித்தபோது என் செல்ல குட்டி மகள் ஒருநாள் என்னிடம் வந்து “அம்மா, ஒரு best friend இருக்கிறது நல்லதா? அல்லது எல்லாரோடயும் ஒரே மாதிரி friends ஆ இருக்கிறது நல்லதா?” என்று கேட்டது நினைவில் வந்தது. நான் அதற்கு பல விதமாய் யோசித்தேன். அதற்கு அவளே சொன்னாள் “நான் நினைக்கிறன் எல்லாரோடயும் friends ஆ ஒரே மாதிரி இருக்கிறதுதான் நல்லது. ஏனெண்டா நாங்கள் ஒராளோட மட்டும் best friend ஆ இருந்தால், அவ எங்கயாவது போய்டால், கவலையா இருக்கும்தானே?”. நல்ல ஆழமாத்தான் யோசிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் எல்லோரிடமும், எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாதே? அதனால் இரண்டும்தான் சரியாகத் தெரிகிறது. என்னுடைய ஒரு நெருங்கிய தோழியை விட்டுப் பிரிந்து கவலைப்பட வேண்டி வந்த ஒரு தருணத்தில் நான் எடுத்த முடிவும் எனது மகளுடையதுதான் என்பதும் கூடவே நினைவு வந்தது. அதற்குப் பின்னர் எவருடனும் நெருங்கி அன்பு செலுத்துவதில்லை என்பதுதான் அந்த முடிவு. ஆனால் அதை என்னால் சரி வர செய்ய முடியவில்லை என்பதும் உண்மையே.</p>
<p>[சரி என்ரை கதையை விட்டுட்டு குட்டி இளவரசனின் கதையின் முடிவுக்கு வாறன் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .]</p>
<p>அந்தக் குட்டி இளவரசனை காண முடியாமல் போன ஒரு காலைப் பொழுதில் அந்த விமான ஓட்டி, அவன் தனது கோளுக்கு திரும்பிப் போய், தனது ரோசாவை கவனமாகப் பார்த்துக் கொள்வான் என்று நம்புவதாக கதையை முடிக்கிறார்.<br />
<strong><br />
Matters of importance must be given the priority over the matters of consequence.</strong></p>
<p>எனக்கு கதை மிகவும் பிடித்தது. கதை இணையத்தில் கிடைக்கிறது. <a href="http://www.cs.swan.ac.uk/~cswill/The_little_prince.pdf">The Little Prince (pdf file)</a> ஐத் தரவிறக்கிப் படித்துப் பாருங்களேன்!<br />
நான் இந்தக் குட்டி இளவரசன் கதை வாசிக்க முன்னர் என் குட்டித் தேவதை தனது &#8221;கற்பனை நாடு&#8217; பற்றிய கதை ஒன்று சொன்னாள். அந்த அழகான நாடுபற்றி அடுத்த பதிவில்&#8230;&#8230;</p>
<hr><h2>1 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/11/the-little-prince/#comment-501">December 16, 2009</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>நானும் குட்டி இளவசரன் படித்த பிறகு குழந்தைகளின் உலகத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.</p><p></p><p>ஆனால், கூடி வரும் ஊடக ஆக்கிரமிப்புகள் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைச் சீக்கிரமே சாகடித்து விடுகின்றன :(</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/11/the-little-prince/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
	</channel>
</rss>
