<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	>

<channel>
	<title>உயிர்ப்பு</title>
	<atom:link href="http://kalaiarasy.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kalaiarasy.com</link>
	<description></description>
	<pubDate>Mon, 03 Nov 2008 09:51:59 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.7</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>எரியும் நினைவுகள் - யாழ் நூலகம்!</title>
		<link>http://kalaiarasy.com/burning-memories/</link>
		<comments>http://kalaiarasy.com/burning-memories/#comments</comments>
		<pubDate>Mon, 03 Nov 2008 09:50:43 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
		
		<category><![CDATA[அறிமுகம்!]]></category>

		<category><![CDATA[இலங்கை]]></category>

		<category><![CDATA[சமூகம்]]></category>

		<category><![CDATA[படங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=190</guid>
		<description><![CDATA[எரியும் நினைவுகள்!
எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் &#8216;எரியும் நினைவுகள்&#8217; என்ற விவரணப் படம் பார்த்தேன்.
நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, இப்படி ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்த வேண்டும் என்று தோன்றியது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விடயமே.
பிரசித்தி பெற்ற, பழம் பெருமை வாய்ந்த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #993366;"><strong>எரியும் நினைவுகள்!</strong></span></p>
<p><span style="color: #0000ff;">எமது யாழ்நூலக எரிப்பு பற்றி, சோமீதரன் என்ற இளைஞனின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் &#8216;எரியும் நினைவுகள்&#8217; என்ற விவரணப் படம் பார்த்தேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">நாட்டின் அமைதியற்ற சூழ்நிலையில், யாழ் நூலகம்பற்றி பல்வேறுபட்ட தகவல்களையும் சேகரித்து, இவ் விவரணப் படத்தை அவர் தயாரித்ததே பெரிய விடயம் என தோன்றியது. யாழ் நூலக எரிப்புக்கு சில நாட்கள் முன்னரே பிறந்த இவருக்கு, இப்படி ஒரு வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்த வேண்டும் என்று தோன்றியது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விடயமே.</span></p>
<p><span style="color: #0000ff;">பிரசித்தி பெற்ற, பழம் பெருமை வாய்ந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது பலருக்கும் வேதனை கொடுத்த ஒரு நிகழ்வு. பழைய நூலகம் இருந்த அதே இடத்தில், நூலகம் எரிக்கப்பட்டதற்கான  அடையாளங்களை முற்றிலும் மறைத்து புதிய நூலகத்தை கட்டி எழுப்பியதன் மூலம், வரலாற்று சாட்சி்யம் ஒன்றை  அழித்து விட்டார்கள் என்பது பலரது ஆதங்கம். ஆனால் சோமீதரன் தனது இந்த விவரணப் படம் மூலம், அந்த சாட்சிக்கு உயிர் கொடுத்து வைத்திருக்கின்றார். அதையிட்டு அவர் பெருமை கொள்ளலாம்.</span></p>
<p><span style="color: #0000ff;">இப்படியான அவரது பணிகள் மேலும் தொடரட்டும்.</span></p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/burning-memories/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>குழந்தையின் பெயர்!</title>
		<link>http://kalaiarasy.com/anjali/</link>
		<comments>http://kalaiarasy.com/anjali/#comments</comments>
		<pubDate>Fri, 17 Oct 2008 09:28:06 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
		
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>

		<category><![CDATA[குழந்தை]]></category>

		<category><![CDATA[நினைவில்..]]></category>

		<category><![CDATA[பாசம்]]></category>

		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=162</guid>
		<description><![CDATA[இன்றைக்கு இந்தப் பதிவைப் பார்த்தேன். நகைச்சுவையோட நிறைய விசயம் சொல்லியிருந்தார். அங்கே ஒரு பின்னூட்டம் போடப் போன இடத்தில, அட இதை என்னுடைய பதிவேட்டிலயும் (அதான் என்னுடைய வலைப்பதிவு) ஒரு இடுகை  போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய  வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது :).  
ரவி கீழ்வருமாறு எழுதியிருந்ததுதான் இந்தப் பதிவுக்கு காரணம் :). 
//பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-family: Verdana;"><span style="color: #0000ff;">இன்றைக்கு </span><a href="http://blog.ravidreams.net/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-2368" target="_blank"><span style="color: #800080;">இந்தப் பதிவைப்</span></a><span style="color: #0000ff;"> பார்த்தேன். நகைச்சுவையோட நிறைய விசயம் சொல்லியிருந்தார். அங்கே ஒரு பின்னூட்டம் போடப் போன இடத்தில, அட இதை என்னுடைய பதிவேட்டிலயும் (அதான் என்னுடைய வலைப்பதிவு) ஒரு இடுகை  போடலாமே என்ற எண்ணம் வந்தது. நானும்தான் எத்தனை நாளுக்கு என்னுடைய  வலைப்பதிவில எதுவுமே எழுதாமல் இருக்கிறது :).  </span></span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;"><span style="color: #800080;"><a href="http://blog.ravidreams.net/" target="_blank">ரவி</a></span> கீழ்வருமாறு எழுதியிருந்ததுதான் இந்தப் பதிவுக்கு காரணம் :). </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">//பிள்ளை பிறந்த பிறகு எழுத்துப் பார்த்து பெயர் வைக்கிறத விட பிள்ளை பிறக்கிறதுக்கு முன்னாடியே அம்மாவும் அப்பாவும் இந்தப் பேர் தான்னு யோச்சிச்சு வைச்சு பேர் வைச்ச பிள்ளைங்களையும் பார்த்து இருக்கேன். அந்த குழந்தைகள்ட்ட ஒரு சந்தோஷத்தையும் பார்த்திருக்கேன். //</span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">குழந்தை கிடைப்பதற்கு 4 வருடத்திற்கு முதலே பிறக்கப் போகும் குழந்தைக்கு ஒரு பெயர் நினைத்தாயிற்று. ஆசைப்பட்டது பெண் குழந்தை. பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்காமலே, பெண்ணாக இருக்க வேண்டும் என்ற ஆசையிலும், பெண்தான் பிறக்கும் என்ற ஏதோ ஒரு  நம்பிக்கையிலும்  குழந்தைக்கு அதே பெயரை வைப்பது என்று குழந்தை 3 மாதக்கருவாக இருக்கும்போதே முடிவாகி மற்றவர்களிடம் சொல்லியுமாச்சு. </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">என்ன குழந்தை என்று அறிய வேண்டுமா என்று வைத்தியர் கேட்டதற்கு, வேண்டாம் என்றும் சொல்லியாச்சு. நாள் செல்ல செல்ல, என்ன குழந்தை என்று பார்த்திருக்கலாமோ, கடைசி நேரத்தில் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால், அது ஏமாற்றமாகப் போய் விடுமோ என்று சின்னதாய் ஒரு தவிப்பும் வந்தது. அப்படி என்னதான் பெயர்? அந்தப் பெயர் &#8221;<strong>அஞ்சலி</strong>&#8220;.</span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">ஆனால், நல்ல வேளையாக ஆசைப்பட்டபடியே பிறந்தது பெண் குழந்தை. குழந்தை பிறந்தபோது நான் மயக்கத்தில். கண்விழித்த முதல் கணத்தில், அரைகுறை மயக்கத்தில் நான் கேட்ட முதல்கேள்வி, &#8220;அஞ்சலிதானே?&#8221;. &#8220;ஆம்&#8221; என்ற பதில் தந்த ஆனந்தத்திற்கு அழவேயில்லை :).  </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">கண்விழித்தபோது குழந்தையை என்னிடம் காட்டினார்கள். தலை நிறைந்த தலை முடியுடன் இருந்த மகளுக்கு தாதிமார், ribbon எல்லாம் கட்டி, அலங்காரம் செய்திருந்தார்கள். மகளை முதன்முதல் பார்த்த அந்த நேர உணர்ச்சியை வார்த்தைகளில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">குழந்தை பிறக்கப்போவதுபற்றி மற்றவர்களிடம் அறிவித்தபோது, &#8220;அஞ்சலி பிறந்திட்டாள்&#8221;, என்று சொல்ல முடிந்தது. அதைவிட குழந்தை பிறந்ததுபற்றி அறிந்த ஒருவர் தொலைபேசியில், &#8220;என்ன, அஞ்சலி பிறந்தாச்சா?&#8221; என்று கேட்டது மிகுந்த மகிழ்ச்சி. </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">மகளுக்கு, தனக்கு பெயர் வைத்த விதம்பற்றி கேட்கும்போது பெருமையும், மகிழ்ச்சியும். அவளுக்கு தான் பிறந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் இப்போதும் தணியாத ஆர்வம். நல்ல வேளையாய் அவளுக்கும் அந்தப் பெயர் மிகவும் பிடிச்சிருக்கு :).  மற்றவர்கள் அவளது பெயரைக் கேட்டுவிட்டு, &#8220;அழகான பெயர்&#8221; என்று சொன்னால் அவள் முகத்தில் மகிழ்ச்சிப் புன்னகை வரும். தமிழ் தெரியாதவர்கள்கூட, ஒரு தடவை பெயரை மீண்டும் சொல்லிப் பார்த்து &#8216;அழகான பெயர்&#8217; என்று சொல்லும்போது மகிழ்ச்சி. தவிரவும் ஒரு சிலர் &#8220;It sounds like &#8216;angel&#8217;&#8221; என்று சொல்வார்கள். அதில் அவளுக்கு இன்னும் பெருமை கூடிவிடும். </span></p>
<p><span style="color: #0000ff; font-family: Verdana;">எனக்கும் அழகான தமிழ் எழுத்துக்களுடன் கூடிய தமிழ்ப் பெயர்கள்தான் அதிகம் பிடிக்கிறது :).</span><span style="color: #0000ff;"> </span></p>
<p><span style="font-family: Verdana;"> </span></p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/anjali/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>இலங்கைத் தமிழர் பிரச்சனையில்!</title>
		<link>http://kalaiarasy.com/tamils/</link>
		<comments>http://kalaiarasy.com/tamils/#comments</comments>
		<pubDate>Tue, 14 Oct 2008 11:30:50 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
		
		<category><![CDATA[இலங்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=158</guid>
		<description><![CDATA[இன்று காலையில் மின்னஞ்சல் பெட்டியை திறந்தால் ஒரே ஒரு மின்னஞ்சல். கூடப் படித்த ஒரு சிங்கள நண்பரிடமிருந்து வந்திருந்தது. அந்த நண்பர்பற்றி  கூற  வேண்டுமானால்,  மிகவும் நல்லவர். கூடப் படித்த காலங்களில் சக தமிழ் மாணவர்களுக்காக எல்லா  விதத்திலும் பேசவும், உதவிகள் செய்யவும் தயங்காதவர். தமிழர்களுக்கு எங்கே துன்பம் நேர்ந்தாலும், எங்களுக்கு முதலேயும், எங்களை விடவும் அதிகமாயும் அதற்காக கவலை கொள்பவர்.
சில காலத்திர்கு முன்னர், அவருடனும், வேறு சில அவரைப் போன்ற சில சிங்கள நண்பர்களுடனும், மின்னஞ்சல் மூலமாக இலங்கைப் பிரச்சனைபற்றி ஒரு பெரிய தொடர் விவாதம் போய்க் கொண்டிருந்தது. Australia வில் வாழும், தமிழர்களுக்காக குரல் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #008000;">இன்று காலையில் மின்னஞ்சல் பெட்டியை திறந்தால் ஒரே ஒரு மின்னஞ்சல். கூடப் படித்த ஒரு சிங்கள நண்பரிடமிருந்து வந்திருந்தது. அந்த நண்பர்பற்றி  கூற  வேண்டுமானால்,  மிகவும் நல்லவர். கூடப் படித்த காலங்களில் சக தமிழ் மாணவர்களுக்காக எல்லா  விதத்திலும் பேசவும், உதவிகள் செய்யவும் தயங்காதவர். தமிழர்களுக்கு எங்கே துன்பம் நேர்ந்தாலும், எங்களுக்கு முதலேயும், எங்களை விடவும் அதிகமாயும் அதற்காக கவலை கொள்பவர்.</span></p>
<p><span style="color: #008000;">சில காலத்திர்கு முன்னர், அவருடனும், வேறு சில அவரைப் போன்ற சில சிங்கள நண்பர்களுடனும், மின்னஞ்சல் மூலமாக இலங்கைப் பிரச்சனைபற்றி ஒரு பெரிய தொடர் விவாதம் போய்க் கொண்டிருந்தது. Australia வில் வாழும், தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் Brian Seneviratne என்பவரது ஒரு அறிக்கையை யாரோ எனக்கு அனுப்பியிருந்தார்கள். அதை நான் பலருக்கும் அனுப்பி வைத்தேன். ஒரு சிங்கள நண்பருக்கும் அந்த மின்னஞ்சல் போனதில், இந்த விவாதம் ஆரம்பித்தது.</span></p>
<p><span style="color: #008000;">அந்த விவாதத்தில் பல வகையான கருத்துக்கள் பலருடனும் பரிமாறிக்  கொள்ளப்பட்டன. சிங்கள நண்பர்களிடையே, அவர்களுக்குள்ளேயே பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் எல்லோரும் நண்பர்களாக இருந்ததில், ஒரு நட்புடனே அனைவரும் கருத்துக்களை சொன்னார்கள். அதிலே எனக்கும் அவர்களுக்குமிடையே, பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் நல்ல நண்பர்கள் என்ற முறையில், அவர்களிடம் எனது கருத்துக்களை தயக்கமின்றி சொல்ல முடிந்தது. எனது தமிழ் நண்பர்கள் சிலர், &#8220;இவங்களிட்டை இதுகளை கதைக்காதையுங்கோ. எங்க கொண்டுபோய் எப்படி மாட்டி விடுவாங்களோ தெரியாது&#8221; என்று சொன்னார்கள். ஆனால் அந்த சிங்கள நண்பர்கள் விடயங்களை சொல்லும் விதத்திலும், தமிழர்கள் மேல் உண்மையான அக்கறையோடு  அவர்கள்  பேசியதாலும்,  ஏற்கனவே அவர்களைப்  பற்றி  நான்  தெரிந்து  வைத்திருந்ததாலும், அவர்கள்  மேலுள்ள  நம்பிக்கையாலும், அந்த விவாதத்தில் என் கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வந்தேன்.</span></p>
<p><span style="color: #008000;">இப்படி நாம் பேசிக்கொண்டே இருக்காமல், இந்த போரை நிறுத்த நாம் ஏதாவது செய்தால் என்ன என்று ஒருவர் கேட்டார் (அதாவது இன்று மின்னஞ்சல் போட்டிருந்த அதே நண்பர் முன்னரும் கேட்டிருந்தார்). சிங்கள, தமிழ் நண்பர்கள் அனைவரும்கூடி அதை செய்ய வேண்டும் என்று சொல்லி, அவர் சில விடயங்களை முன்மொழிந்திருந்தார். அதிலுள்ள சில கருத்து வேறுபாடுகளை சொல்லிவிட்டு, இவையெல்லாம் நாம் செய்து நடை முறை சாத்தியமாகுமா என்ற எனது சந்தேகத்ததயும் அவரிடம் தெரிவித்திருந்தேன். அதேபோல்  மற்றவர்களும், முழுமையான ஈடுபாட்டைக் காட்டாததால், அந்த  தொடர்  விவாதம்  அத்துடன் நின்று போனது.  </span></p>
<p><span style="color: #008000;">இன்று அதே நண்பர் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன், சில விடயங்களை முன்மொழிந்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அவரது இந்த முன் மொழிதல்கள்பற்றி மற்றவர்கள் நினைப்பதுபற்றி அறிய வேண்டும் போல் இருக்கிறது. அதனால் அவரது மடலை கீழே இணைத்திருக்கிறேன். பார்த்துவிட்டு, உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.</span></p>
<p><span style="color: #008000;">அவர் சிங்களவராய் இருந்தும், இத்தனை அக்கறையெடுத்து ஏதாவது செய்ய முயற்சிக்கும்போது, பாதிக்கப்படும் (அல்லது அதிகமான பாதிப்புக்குட்படும்) தமிழராய் இருந்து நாம் அதில் ஏதாவது செய்ய வேண்டாமா என்ற கேள்வி எழுந்து உறுத்துகின்றது. அதே வேளை நாம் எதையும் செய்து எதையாவது சாதிக்க முடியுமா, அது சாத்தியமா என்ற அவநம்பிக்கையும் எழுகின்றது. அவருக்கு என்ன பதில் எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கருத்துக்கள் எனக்கும் வழி காட்டலாம்.</span></p>
<p><span style="color: #008000;">&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;.</span></p>
<p><span style="color: #800080;">Hope you guys are doing fine.</span></p>
<p><span style="color: #800080;">I had been planning to write this note for several weeks, but did not get a time<br />
till today. This is again about the ethnic issue. I will make this as short as<br />
possible.</span></p>
<p><span style="color: #800080;">According to my little knowledge, I feel that today every human should force the<br />
govt and LTTE to stop their military campaigns immediately “once and for all”<br />
and “in a genuine and practical way”. By saying “once and for all” I mean that<br />
both parties should come to an ever lasting peace. By saying “genuine and<br />
practical”, I mean that both groups should do this NOT to cheat each other<br />
until they can regroup and resolidify.</span></p>
<p><span style="color: #800080;">I believe this is the responsibility of each Sri Lankan or each citizen on this<br />
earth, who is concerned about continuing loss of lives, blood and every penny<br />
with this war.</span></p>
<p><span style="color: #800080;">When I wrote you guys earlier, I proposed about appealing to the Govt. to stop the war and for implementing the 13th amendment (Rajeev formula) as the first step. That appeal<br />
was mainly aimed at the govt, so, a Sinhalese could have initiated or lead that campaign. However, today, our appeals must be directed both to the govt and LTTE. We must urge both of them to stop their campaigns. Accordingly, the Tamil friends of ours should take the initiative to appeal to LTTE while our singhalese friends must take the initiative to appeal to the govt.</span></p>
<p><span style="color: #800080;">According to my understanding, today we can do the following:<br />
1.      Appeal the govt of SL to pardon every member of LTTE including Prabhakaran<br />
and Pottu Amman, get them pardoned by the Indian law enforcement agencies,<br />
release all LTTE members in custody, hold provincial council elections for<br />
North, and implement every step of the 13th amendment.</span></p>
<p><span style="color: #800080;">2.      Appeal LTTE to give up their military campaign, give up every piece of<br />
weapon, and accept the 13th amendment as an initiating step for a political<br />
solution</span></p>
<p><span style="color: #800080;">Please kindly think about this and let me know if there is any value of what I am writing, or if this is another naïve idea. Let me know if you have any kind of alternative ideas.</span></p>
<p><span style="color: #800080;">Hope I am not opening a can of worms. Please disregard this message if this is a useless idea. Sorry if I bothered you.</span></p>
<p><span style="color: #800080;">With regards,<br />
&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;&#8230;</span></p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/tamils/#comment-370">October 14, 2008</a>, I Know them more than you wrote:</p><p>As you can read over the two tasks specified by him, He point the finger to ltte not  GOSL. This clearly say that whatever ltte doing is wrong. He doesnt accept out legitimate concern.</p><p></p><p> He might be UNP supporter. This is the way UNP thinks.  </p><p></p><p>If we are ready to accpt 13th amendement only, why we should fight now. We would have get more than that from Oslo declaration.</p><p></p><p>So dont be fooled. If you know him personally, I might be wrong. but if you dont, keep him away.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/tamils/#comment-371">November 3, 2008</a>, Rupan Ananthan wrote:</p><p>I think the 'Interim Governing Body' which is discussed during the peace talk would be a better.</p><p></p><p>The 13th amendement never accept by any of the Tamil reps at the time and it was an expired settelement. We can't even think about to impliment that kind of the settelement at this time.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/tamils/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மொக்கை பத்தின மொக்கை!!</title>
		<link>http://kalaiarasy.com/mokkai/</link>
		<comments>http://kalaiarasy.com/mokkai/#comments</comments>
		<pubDate>Tue, 23 Sep 2008 12:26:11 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
		
		<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=146</guid>
		<description><![CDATA[நீண்ட நாள் கழிச்சு, 3 நாட்களுக்கு முன்னால, நான் ஒரு இடுகை போட்டிருந்தேன். அதைப் பாத்துட்டு என் தம்பி எனக்கு சொன்னது &#8220;உன்னோட இடுகை பார்த்தேன்கா, ஆனா அது ஒரு பெரிய மொக்கை&#8221;. மொக்கைன்னா என்னன்னு ஓரளவுக்கு புரிஞ்சிருந்ததுனால, &#8220;என்னோட இடுகைகள் எல்லாமே மொக்கைதானேடா. இதுல புதுசா என்ன மொக்கை போட்டுட்டேன்&#8221;னு கேட்டேன். &#8220;அப்படியில்லை, உன்னோட இடுகைகள்ல ஏதாவது ஒண்ணு சொல்லியிருப்பதான&#8221; அப்படின்னு சொன்னான். அப்படியே அசந்து போய்ட்டேன் :). ஏன்னு கேக்கிறீங்களா? அட, எனக்கே தெரியாம [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #008000;">நீண்ட நாள் கழிச்சு, 3 நாட்களுக்கு முன்னால, நான் ஒரு இடுகை போட்டிருந்தேன். அதைப் பாத்துட்டு என் தம்பி எனக்கு சொன்னது &#8220;உன்னோட இடுகை பார்த்தேன்கா, ஆனா அது ஒரு பெரிய மொக்கை&#8221;. மொக்கைன்னா என்னன்னு ஓரளவுக்கு புரிஞ்சிருந்ததுனால, &#8220;என்னோட இடுகைகள் எல்லாமே மொக்கைதானேடா. இதுல புதுசா என்ன மொக்கை போட்டுட்டேன்&#8221;னு கேட்டேன். &#8220;அப்படியில்லை, உன்னோட இடுகைகள்ல ஏதாவது ஒண்ணு சொல்லியிருப்பதான&#8221; அப்படின்னு சொன்னான். அப்படியே அசந்து போய்ட்டேன் :). ஏன்னு கேக்கிறீங்களா? அட, எனக்கே தெரியாம நான் ஏதேதோ சொல்லியிருக்கேன் போல இருக்கேன்னுதான் :).</span></p>
<p><span style="color: #008000;">சரி, அப்ப அதைப் பத்தியும் ஒரு மொக்கை பதிவு போடலாமேன்னுதான் இப்போ இந்த இடுகை எழுத வந்தேன். மொக்கைன்னா என்னன்னு சரியா தெரிஞ்சுக்காம எதையும் எழுதிடக் கூடாதின்னுட்டு, &#8220;மொக்கைன்னா என்ன?&#8221; அப்படிங்கிற மிக முக்கியமான கேள்வியை கூகிளிடம் கேட்டேன். அவர் கொடுத்த பதில் ஒண்ணே ஒண்ணுதான். அது </span><a href="http://findarun.blogspot.com/2007/01/blog-post_29.html"><span style="color: #008000;">இதுதான்</span></a><span style="color: #008000;">. என்னோட தம்பி எனக்கு சொன்னதன் முழு அர்த்தமும் அந்த இடுகையின் முதல் வரியிலேயே புரிந்து போனது :). அந்த முதல் வரியில இருந்தது, இதுதான். <strong>&#8220;பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. ஆனா சரக்கு எதுவும் இல்ல. அதனால இந்த மொக்கை :)&#8221;.</strong> நானும் பதிவு எழுதி ரொம்ப நாளாச்சே, எதையாவதுபத்தி எழுதுவமேன்னுதான் அந்த இடுகையை எழுதினேன் :). அப்ப மொக்கைதான்.</span></p>
<p><span style="color: #008000;">மொக்கை + அகராதி ன்னு போட்டு இன்னொரு தடவை கூகிளிடம் கேட்டேன். அங்கே  முதலாவதா இது  வந்தது.  &#8216;கணிமை:  தமிழ்  வலைப்பதிவர்  கலைச்சொல்&#8217;  னு  வந்தது.  அங்கே போய் அழுத்தினால், ஒன்றையும் காணோம் :(. இத்துடன் மொக்கைக்கான தேடல் முடிவடைந்தது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<p><span style="color: #008000;">பி.கு. &gt; இப்படி ஒரு இடுகை போடப் போவதுபத்தி சொன்னதுக்கு தம்பியின் comment, &#8220;அப்ப நீ எதையுமே எழுதாம இருந்துடுக்கா&#8221; :). நல்லதை யாரும் சொல்லி கேக்கலாமா? அதான் இடுகையை போட்டுட்டேன். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/mokkai/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>என்னோடு பாட்டு பாடுங்கள்!</title>
		<link>http://kalaiarasy.com/ennodupaaddu/</link>
		<comments>http://kalaiarasy.com/ennodupaaddu/#comments</comments>
		<pubDate>Sat, 20 Sep 2008 23:19:59 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
		
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>

		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=142</guid>
		<description><![CDATA[எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு.
ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு பொழுதுபோக ஏதாவது வேண்டுமே என்று தமிழ் தொலைக்காட்சி எடுத்தாச்சு. நாங்கள் எல்லோரும் வேலை, பாடசாலை என்று போனதும், அவர் தனியாக இருப்பது கடினமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #0000ff;">எங்க வீட்டுல தமிழ் தொலைக்காட்சி எதுவும் இதுவரை நாட்கள் இருக்கவில்லை. எந்த தமிழ் channel உம் எடுத்து வைத்திருக்கவில்லை. முதற் காரணம், அதெல்லாம் பார்க்க நேரம் வருமா என்பது, இரண்டாவது முக்கிய காரணம் இந்த தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் பார்க்க நேர்ந்ததில், கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட வெறுப்பு.</span></p>
<p><span style="color: #0000ff;">ஆனால் இப்போ வீட்டில் வந்திருக்கும் புதிய உறுப்பினரான முதியவருக்கு பொழுதுபோக ஏதாவது வேண்டுமே என்று தமிழ் தொலைக்காட்சி எடுத்தாச்சு. நாங்கள் எல்லோரும் வேலை, பாடசாலை என்று போனதும், அவர் தனியாக இருப்பது கடினமாக இருக்குமென்பதால் இந்த ஏற்பாடு.</span></p>
<p><span style="color: #0000ff;">Sun TV, கலைஞர் TV, Jeya TV, தீபம் தொலைக்காட்சி, தென்றல், இன்னும் சில மலையாள TV எல்லாம் வீட்டினுள்ளே வரத் தொடங்கி இரண்டு கிழமையாச்சு. இருந்தாலும், அவற்றை போய் உட்கார்ந்து பார்ப்பதில்லை. செய்திகள் போகும்போது சில சமயம் உட்கார்ந்து பார்த்ததுண்டு. அங்கே இங்கே நடந்தபடி, அல்லது வேலை செய்தபடி, இடை இடையே அங்கே கண்ணையும், காதையும் வைத்ததோடு சரி.</span></p>
<p><span style="color: #0000ff;">இன்றைக்கு கலைஞர் TV ல &#8216;வேட்டையாடு விளையாடு&#8217; படம்னு சொன்னாங்க. படம் எப்படி, கதை என்ன ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும், அட நான் தமிழ் படம் பாத்து நீண்ட நாளாச்சே. இன்றைக்கு பார்க்கலாம் என்று திட்டம் போட்டேன். ஆனா, அந்த படம் தொடங்க கொஞ்ச நேரம் முதல் Jeya TV ல பாலசுப்ரமணியம் நடத்தும், &#8216;என்னோடு பாட்டு பாடுங்கள்&#8217; இசை நிகழ்ச்சி இருக்குன்னு தெரிஞ்சது. அதைப் பார்க்கிற ஆசையில், படத்தை துறந்து விட்டு, அதைப் பார்த்தேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">முதலில் எனக்குப் பிடித்தமான ஒரு பாடலை ஒரு பெண் பாடினார். &#8216;காக்க காக்க&#8217; படத்திலிருந்து, &#8216;தூது வருமா தூது வருமா&#8217; பாடல். அதை அவர் பாடிய விதம் மிக அருமையாக இருந்தது. ஆனால், அவர் பாடி முடிந்ததும், அதுபற்றி பாலசுப்ரமணியம் எந்த கருத்துமே சொல்லாமல் அடுத்தவரை கூப்பிட்டது கொஞ்சம் கவலையாகி விட்டது. அத்தனை அருமையாகப் பாடினாரே, எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டாரே என்று இருந்தது. ஆனால் தொடர்ந்து வந்த நிகழ்ச்சியில் அவர் பொதுவாகவே எந்த கருத்தையும் சொல்லவில்லை. நிகழ்ச்சியில் நடுவர்களின் முடிவில் தான் தலையிடக் கூடாதென்று நினைத்திருப்பாரோ. இடை இடையே வேறு விடயங்களை நகைச்சுவையாகவும், சுவாரசியமாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.</span></p>
<p><span style="color: #0000ff;">ஆறு பேர் பாடினார்கள். அனைவரும் நன்றாகப் பாடினாலும், எனக்கென்னவோ, முதலில் பாடியவர் எல்லா விதத்திலும் அருமையாக பாடியதாகவே தோன்றியது. இடையில் அதிக விளம்பரங்கள் எதுவும் வராமல் இருந்ததும் நன்றாக இருந்தது.</span></p>
<p><span style="color: #0000ff;">நடுவர்களான இசையமைப்பாளர் M.S.Visvanathan, இயக்குனர் பாலாவும், இடை இடையே தமது சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். M.S.Visvanathan சொன்ன ஒரு விடயம், ஒரு பாடல் இந்த தலை முறைக்கு என்றில்லாமல், எல்லா தலை முறையினரையும் ரசிக்க வைக்குமானால், அதுவே பாடலின் வெற்றி என்று. அதற்கு ஒரு உதாரணமும் சொன்னார். ஒரு இசைநிகழ்ச்சியில் 18 வயது ஆண் ஒருவர், அந்த சமயத்தில் 38 வயதான பாடலான, நெஞ்சில் ஓர் ஆலயம் படப் பாடல் ஒன்றை விரும்பிக் கேட்டாராம். உண்மைதான், சில பாடலகள் எத்தனை தலைமுறை கடந்தாலும், மனதில் நிறைந்திருக்கத்தான் செய்கின்றது. &#8216;எண்ணப்பறவை சிறகடித்து&#8217; பாடலும் அப்படிப்பட்ட பாடலில் ஒன்று என்று நினைத்துக் கொண்டேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">இரண்டாம் சுற்றில், பாலசுப்ரமணியம் ஒரு பாடலின் மெட்டை இடையில் கொடுக்க, அந்த பாடலைக் கண்டு பிடித்து பாட வேண்டும். எல்லோரும் இலகுவாக கண்டு பிடித்துப் பாடினார்கள். அவர்கள் பாடும்போது பாலசுப்ரமணியமும், அவர்களுடன் இணைந்து பாடியது இன்னும் அழகாக இருந்தது. அதில கடைசிப் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடலான &#8216;இளையநிலா பொழிகிறது&#8217;.</span></p>
<p><span style="color: #0000ff;">முடிவில் நான் எதிர் பார்த்தபடி முதலில் &#8216;தூது வருமா தூது வருமா&#8217; பாடிய பெண்ணே தேர்ந்தெடுக்கப்பட்டார். எனக்கும் மகிழ்ச்சி. இறுதியில், அந்த பெண்ணுடன் பாலசுப்ரமணியம், இன்னொரு அழகான பாடலைப் பாடினார்.</span></p>
<p><span style="color: #0000ff;">&#8216;ஓ butterfly butterfly<br />
ஏன் விரித்தாய் சிறகை வா வா<br />
ஓ butterfly butterfly<br />
ஏன் விரித்தாய் சிறகை<br />
அருகில் நீ வருவாயோ<br />
உனக்காக திறந்தேன் மனதின் கதவை&#8217;</span></p>
<p><span style="color: #0000ff;">பாடலைப் பாடியபடியே, அந்தப் பெண்ணை வாழ்த்தியும் வரிகளை மாற்றி பாலசுப்ரமணியம் பாடியது நன்றாக இருந்தது. அதுனால, முதலில் அவர் அந்த பெண்ணின் பாடலுக்கு கருத்து எதுவும் சொல்லலையே என்ற குறையும் தீர்ந்தது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<p><span style="color: #0000ff;">அந்த நிகழ்ச்சி முடிந்ததும், கலைஞர் TV யைப் போட்டால், கமலும், Jothika வும், தங்கள் தங்கள் அறைகளிலிருந்து வெளியே வந்து ஏதோ பேசிக் கொண்டார்கள். முன்னுக்கு போனது என்னவென்று புரியாததில், சரியாக விளங்கவில்லை. இருந்தாலும் கொஞ்ச நேரம் பார்த்தேன். படம் பிடிக்கலை. எழுந்து எனது வேலைகளை செய்யப் போனேன். ஆனாலும் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தபோது, &#8217;<span>உயிரிலே எனது உயிரிலே&#8217; பாடல் போனது. அட, இது ஒரு நல்ல பாடலாச்சே, அது இதில்தானா என்று நினைத்த போதுதான், &#8216;பார்த்த முதல் நாளே&#8217; பாடலும் இந்தப் படத்தில் என்பது நினைவுக்கு வந்தது. சரி, பாட்டு போகும்போது, கேட்கலாம் என்று இருந்தால், அந்த பாடல் வரவில்லை. முதலே போய் விட்டதுபோல. </span></span></p>
<p><span style="color: #0000ff;">வேலைகள் எல்லாம் முடிய, அதில் வந்து உட்கார்ந்தேன். கமல், Jothika விடம் &#8216;இனி நீயும் மாயாவும் என் சொந்தம்&#8217; என்று சொல்லிக் கொண்டிருந்தார். இனி ஒரு வேலையும் இல்லைத்தானே என்று அதிலேயே உட்கார்ந்து படம் முடியும்வரை பார்த்தேன். ஆனால் படம் பிடிக்கவில்லை. </span></p>
<p><span style="color: #0000ff;">&#8216;என்னோடு பாட்டு பாடுங்கள்&#8217; ஒவ்வொரு கிழமையும் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே எழுந்து வந்து இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கேன். :) </span></p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/ennodupaaddu/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>இன்றைய இணைப்பு :)</title>
		<link>http://kalaiarasy.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/</link>
		<comments>http://kalaiarasy.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/#comments</comments>
		<pubDate>Thu, 15 May 2008 07:11:08 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
		
		<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/?p=134</guid>
		<description><![CDATA[இன்று கிடைத்த அருமையான ஒரு மின்னஞ்சல் இணைப்பு.
http://www.raisingsmallsouls.com/wp-content/themes/179/form.html
எழுத முடியாவிட்டாலும், இவற்றையாவது இங்கே பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது.  

	Related posts
	
	No related posts.
	

]]></description>
			<content:encoded><![CDATA[<p>இன்று கிடைத்த அருமையான ஒரு மின்னஞ்சல் இணைப்பு.</p>
<p><a href="http://www.raisingsmallsouls.com/wp-content/themes/179/form.html">http://www.raisingsmallsouls.com/wp-content/themes/179/form.html</a></p>
<p>எழுத முடியாவிட்டாலும், இவற்றையாவது இங்கே பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>படங்களும், பாடலும்!</title>
		<link>http://kalaiarasy.com/pictures-and-song/</link>
		<comments>http://kalaiarasy.com/pictures-and-song/#comments</comments>
		<pubDate>Wed, 30 Jan 2008 14:23:19 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
		
		<category><![CDATA[அழகு]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2008/01/30/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[http://www.greatdanepro.com/Chiquitita/index.htm
இன்று காலையில் மின்னஞ்சலில் இந்த இணைப்பு வந்திருந்தது. அழகழகான படங்களும், ஒரு பாடலும். நன்றாக இருக்கிறது. கேட்டுப் பபருங்கள். ஆங்கிலத்தில் பாடலைக் கேட்க, பக்கத்தின் கீழே போய்ப் பாருங்கள்.

	Related posts
	
	No related posts.
	

]]></description>
			<content:encoded><![CDATA[<p><a target="_blank" href="http://www.greatdanepro.com/Chiquitita/index.htm"><strong><font size="4" color="#6600cc">http://www.greatdanepro.com/Chiquitita/index.htm</font></strong></a></p>
<p>இன்று காலையில் மின்னஞ்சலில் இந்த இணைப்பு வந்திருந்தது. அழகழகான படங்களும், ஒரு பாடலும். நன்றாக இருக்கிறது. கேட்டுப் பபருங்கள். ஆங்கிலத்தில் பாடலைக் கேட்க, பக்கத்தின் கீழே போய்ப் பாருங்கள்.</p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/pictures-and-song/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>புதிய வீடு!</title>
		<link>http://kalaiarasy.com/arimugam/</link>
		<comments>http://kalaiarasy.com/arimugam/#comments</comments>
		<pubDate>Wed, 19 Dec 2007 00:34:41 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
		
		<category><![CDATA[அறிமுகம்!]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=1</guid>
		<description><![CDATA[எனக்கு இந்த வீடு என் செல்ல தம்பி வாங்கிக் கொடுத்தது. வாங்கிக் கொடுத்து ரொம்ப நாளாகுது. வீட்டுல குடியேற இத்தனை நாளாச்சு.  


 
 


	Related posts
	
	No related posts.
	

]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #0000ff;">எனக்கு இந்த வீடு என் செல்ல தம்பி வாங்கிக் கொடுத்தது. வாங்கிக் கொடுத்து ரொம்ப நாளாகுது. வீட்டுல குடியேற இத்தனை நாளாச்சு. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<div></div>
<p><span style="color: #008000;"></p>
<p align="left"> </p>
<p> </p>
<p></span></p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/arimugam/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>சங்கடமான கேள்வி!</title>
		<link>http://kalaiarasy.com/children/</link>
		<comments>http://kalaiarasy.com/children/#comments</comments>
		<pubDate>Sat, 01 Dec 2007 11:43:42 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
		
		<category><![CDATA[குழந்தை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/12/01/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[அண்மையில் ஒருவர் என்னிடம் சொன்னார் &#8220;உங்கட மகள் உங்களை மாதிரியே இருக்கிறா. உங்களை மாதிரியே புன்னகைக்கிறார்&#8221;. நான் சிரித்தேன். அவர் மேலும் கேட்டார் &#8220;இப்படி நிறையப் பேர் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா?&#8221; என்று. நானும் சொல்லியிருக்கின்றார்கள் என்று சொன்னேன். இந்த கதையை நான் மகளிடம் பேசும்போது சொன்னேன். அவளுக்கு 9 வயது ஆகப் போகின்றது. அங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. 
அவள் வேறு யாரெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள், எப்படி சொன்னார்கள் என்று பெரிய விளக்கங்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அண்மையில் ஒருவர் என்னிடம் சொன்னார் &#8220;உங்கட மகள் உங்களை மாதிரியே இருக்கிறா. உங்களை மாதிரியே புன்னகைக்கிறார்&#8221;. நான் சிரித்தேன். அவர் மேலும் கேட்டார் &#8220;இப்படி நிறையப் பேர் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா?&#8221; என்று. நானும் சொல்லியிருக்கின்றார்கள் என்று சொன்னேன். இந்த கதையை நான் மகளிடம் பேசும்போது சொன்னேன். அவளுக்கு 9 வயது ஆகப் போகின்றது. அங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /><br />
அவள் வேறு யாரெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள், எப்படி சொன்னார்கள் என்று பெரிய விளக்கங்கள் கேட்டாள். நானும் சொல்லிக் கொண்டு வந்தேன். முன்னொரு தடவை அவளையும் என்னையும் ஒன்றாகச் சந்தித்த, என்னுடன் வேலை செய்யும் ஒருவர் &#8220;மகளை குளோனிங் செய்து எடுத்திருக்கிறாயா?&#8221; என்று கேட்டதை நினைவு கூர்ந்தேன். இப்படியே கதை போனபோது, குழந்தைகள் அப்பா மாதிரியோ, அம்மா மாதிரியோ இருப்பார்கள் என்று சொன்னேன் (தேவையா எனக்கு??). அவள் உடனே கேட்டாள், &#8220;நான் உங்கட வயித்தில இருந்துதானே வந்தேன். நான் எப்படி அப்பா மாதிரி இருக்க முடியும்?&#8221;. அதுக்கு நான் &#8220;அப்பாவுடைய cell இல இருக்கிற DNA யும், அம்மாவுடைய cell இல இருக்கிற DNA யும் சேர்ந்துதான் குழந்தையுடைய cell and DNA வரும். பிறகு அந்த cells பிரிந்து பிரிந்துதான் குழந்தை உருவாகின்றது&#8221; என்று சொன்னேன். ஏதோ மாட்டிக் கொள்ளாமல் குழந்தைக்கு சொல்லிவிட்டேன் என்ற இறுமாப்பு வேறு. விடுவாளா அவள், கேட்டாள் அடுத்த கேள்வியை. &#8220;நான் உங்கட வயித்துக்குள்ளே இருந்துதானே வந்தேன். பிறகெப்படி அப்பாடை cell and DNA வரும்.&#8221; தேவையா எனக்கு என்று என்னை நானே நொந்து கொண்டேன்.</p>
<p>எனக்கு ஒரு சின்ன idea வந்தது. &#8220;உங்களுக்கு DNA என்றால் என்ன என்று தெரியுமா?&#8221; என்று கேட்டேன். அதற்கு &#8220;அது ஒரு blood என்று பதில் வந்தது.&#8221; அது blood இல்லை என்று சொல்லி, DNA என்றால் என்ன என்று எளிமையாக விளக்க ஆரம்பித்தேன். பல இடங்களில் அவள் &#8216;விளங்கேல்லை&#8217; என்று சொன்னாள். &#8220;இப்ப உங்களுக்கு விளங்குறது கொஞ்சம் கஷ்டம். நீங்க இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், அடுத்தடுத்த வகுப்புக்கு போனால் கொஞ்சம் easy யா விளங்கப்படுத்தலாம். அதால நான் பிறகு உங்களுக்கு விளங்கப்படுத்துறேனே&#8221; என்று கேட்க அவளும் சரியென்று விட்டாள். அப்பாடா, இப்போதைக்கு தப்பியாச்சு. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு இல்லையென்றே தோன்றுகின்றது.</p>
<p>குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என்கின்றோம். அதை செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதுதான் அதிலுள்ள பிரச்சனை புரிகின்றது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> </p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/children/#comment-367">December 21, 2007</a>, <a href='http://vizhiyan.wordpress.com/' rel='external nofollow' class='url'>vizhiyan</a> wrote:</p><p>சிரமம் தாங்க..</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/children/#comment-366">January 18, 2008</a>, <a href='http://snegethyj.blogspot.com/' rel='external nofollow' class='url'>சினேகிதி</a> wrote:</p><p>:-)))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/children/#comment-368">August 18, 2008</a>, <a href='http://sandanamullai.blogspot.com/' rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>உண்மைதான்! கேள்வி கேட்க சொல்லியா தரணும்..:-) ..ஆனாலும், நல்லா சமாளிச்சிருக்கீங்க!! ;-)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/children/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>பெண்கள் vs ஆண்கள்!</title>
		<link>http://kalaiarasy.com/malesfemales/</link>
		<comments>http://kalaiarasy.com/malesfemales/#comments</comments>
		<pubDate>Sat, 01 Dec 2007 11:42:28 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
		
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/12/01/malesfemales/</guid>
		<description><![CDATA[பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார்.
1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் சம அளவில் shoping செய்து, தேவையில்லாத [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>பெண்களும், ஆண்களும் கிட்டத்தட்ட 50 க்கு 50 என்ற வீதத்தில் கூடியிருந்த அந்த informal meeting இல், ஒரு ஆண் சொன்ன விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. அவர் தான் கூறுகின்ற அத்தனையும் ஆராய்ச்சி முடிவுகள் என்ற முன்னுரையுடன் கூறினார்.</p>
<p>1. பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அது உண்மையா என்று பார்த்தபோது, ஆராய்ச்சி முடிவு, ஆண்களும், பெண்களைப் போல் சம அளவில் shoping செய்து, தேவையில்லாத பொருட்களை வாங்குகின்றார்கள் என்று சொல்கின்றதாம். ஆண்கள் வாங்கும் பொருட்களும், பெண்கள் வாங்கும் பொருட்களும் வேறு படலாம். ஆனால் தேவையற்ற பொருட்களை வாங்குவதில் இருபாலாரும், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்களல்ல <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /><br />
2. பெண்கள் ஆண்களை விட அதிகமாக கதைக்கின்றார்களா என்பதும் ஆராயப்பட்டிருக்கின்றது. பெண்கள் நாளொன்றுக்கு 20,000 சொற்கள் கதைப்பார்கள் என்று நம்பப்பட்டு வந்ததாகவும், அது உண்மையல்ல என்றும், சராசரியாக நாளொன்றுக்கு 16,000 சொற்கள் மட்டுமே (அம்மாடியோவ், அத்தனை சொற்களா) கதைக்கின்றார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கின்றதாம். அந்த ஆராய்ச்சி தரும் அதிகப் படியான தகவல், ஆண்களும் கிட்டத்தட்ட அதே 16,000 சொற்களைப் பேசுகின்றார்கள் என்பதுதானாம். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /><br />
3. ஆண்கள் பெண்களை விட புத்திசாலிகள் என்பது பலருடைய (பல ஆண்களுடைய) கருத்து. ஆனால் உண்மையில் பெண்களும் ஆண்களும், சம அளவிலேயே புத்திசாலித் தனத்தை கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த ஆராய்ச்சி முடிவாம்.</p>
<p>4. பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் sex பற்றி நினைப்பதாகவும், ஆண்கள் வெறும் 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மட்டுமே sex பற்றி நினைப்பதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவு சொல்கின்றதாம்.</p>
<p>5. ஆண்களா, பெண்களா அதிக காலம் வாழ்கின்றார்கள் என்று ஆராய்ந்த போது, பெண்களே ஆண்களை விட அதிக வாழ்க்கைக் காலத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரிய வந்துள்ளதாம். நோர்வேயில் பெண்களின் சராசரி வாழ்க்கைக்காலம் 81.6 ஆகவும், ஆண்களின் வாழ்க்கைக் காலம் 76.4 ஆகவும் இருக்கிறதாம்.</p>
<p>இத்தனையும் சொன்னவர் இறுதியில் பெண்களுக்கு அதிக வாழ்க்கைக் காலம் என்பதற்கு, பெண்களை நோக்கி கொடுத்த comment, &#8220;you deserve it ladies&#8221;.</p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/malesfemales/#comment-365">January 29, 2008</a>, <a href='http://xavi.wordpress.com/' rel='external nofollow' class='url'>சேவியர்</a> wrote:</p><p>//பெண்கள் ஆண்களை விட shoping செய்வதும், தேவையில்லாத பொருட்களை வாங்குவதும் அதிகம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை//</p><p></p><p>அப்படியே... பெண்கள் ஷாப்பிங் செய்யும் நேரத்தையும், ஆண்கள் ஷாப்பிங் செய்யும் நேரத்தையும் கூட ஆராய்ச்சி பண்ண சொல்லுங்களேன் :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/malesfemales/#comment-364">January 29, 2008</a>, கலை wrote:</p><p>சொன்னால் போச்சு. ஆனா பாருங்க, எங்க வீட்டுல, ஆண்தான் அதிக நேரம் செலவளிக்கிறார். எனக்கு அந்த பொறுமை கிடையாது. :)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/malesfemales/feed/</wfw:commentRss>
		</item>
	</channel>
</rss>
