இலையுதிர்க் காலத்தின் ஒரு நாள்!
இலைகளை உதிர்த்துவிடும் அவசரத்தில்,
பாதையோர மரங்கள் காற்றைத் துணைக்கு அழைக்க,
வீசிப் பறந்து வந்த காற்று சுழற்றியடித்ததில்,
மரங்கள் இலைகளை உதறிவிட்டு,
வெறுமையாகிக் கொண்டிருந்தன.
அழுக்கடைந்து போனோமே என்ற துயரத்தில்,
பாதைகள் மழையை அழைக்க,
உடன் சீறி வந்த மழையும்,
பாதைகளைக் கழுவிச் சென்றது.
சூப்பர்
LikeLike