இயக்குநர் சேரனுடன்!

Posted On மே 6, 2011

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள்
குறிச்சொற்கள்: , ,

Comments Dropped 2 responses

ஒஸ்லோவில் நடந்த தமிழ்த் திரைப்பட விழாவுக்கு வந்த இயக்குநர் சேரன் குடும்பத்தினர் நம்ம மழை நகரம் பேர்கனையும் பார்க்க வந்தார்கள். தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் சேரன் எங்களுடன் தங்கியதில் மகிழ்ச்சி. என்ன ஆச்சரியம், அவர்கள் வந்து நின்ற இரு நாட்களும் பேர்கனில் மழையே இல்லை :). அதனால் அவர்களையும் கூட்டிக் கொண்டு பேர்கன் சுற்றிப் பார்க்க முடிந்தது. இயக்குநருக்கு guide ஆக இருந்ததில் மகளுக்கும் மகிழ்ச்சி :).

சேரன் அவர்கள் மிகவும் எளிமையானவராக இருந்தார். அவரை படங்களில் பார்த்திருந்தாலும், நேரில் அவரில் ஒரு நல்ல அப்பாவைப் பார்க்க முடிந்தது.

நிறைய படங்கள் எடுத்திருக்கலாம். வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததனால் படங்களை எடுக்கத் தவறி விட்டேன். சில படங்கள் கீழே Slide show வாக உள்ளது. இவற்றில் நான் எடுத்தது மட்டுமில்லாமல் இயக்குநர் சேரன் எடுத்த படங்களும் உள்ளது. இயக்குநர் பேர்கனின் இயற்கை அழகை மிகவும் இரசித்தார்.

This slideshow requires JavaScript.

என்னமோ ஏதோ – கோ படப் பாடல்!

Posted On மே 6, 2011

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது நோர்வே
குறிச்சொற்கள்: , , ,

Comments Dropped 2 responses

கோ படத்தில் வரும் ‘என்னமோ ஏதோ’ பாடல் ரொம்பவே பிடித்திருக்கு. பாட்டு ரொம்ப நல்லா இருக்கிறது ஒரு புறம் இருந்தாலும், பாட்டு பேர்கனில் படமாக்கப்பட்டதும், படமாக்கப்பட்டதை நாங்க பார்த்ததும், நாங்க படமாக்கும்போது பார்த்த காட்சிகள் படத்தில் வந்திருப்பதும், அந்தப் பாடலில் வந்த அதே ‘Make up’ உடன் ஜீவாவுடன் நின்று மகள் படம் பிடித்துக் கொண்டதும் என்று பல விடயங்கள் பாடலை ரொம்ப பிடித்துப் போகச் செய்திருக்கிறது.

நான் பார்க்கும்போது படமாக்கப்பட்ட காட்சியில் பயன்படுத்தப்பட்ட பாடல் வரிகள்:

“Lady lookin like a cindrella cindrella………Naughty looku விட்ட தென்றலா? Lady lookin like a cindrella cindrella.. என்னை வட்டமிடும் வெண்ணிலா..”

படமாக்கப்பட்ட காட்சியை நான் எடுத்த படங்கள் கீழே :).

This slideshow requires JavaScript.

கைத்தொலைபேசியும் தமிழும்!

Posted On மே 1, 2011

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள், நோர்வே

Comments Dropped one response

எனக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் htc Hero mobile கிடைத்தது. ஆனால் அங்கே Unicode தெரியாமல் இருந்ததால், தமிழில் எதையும்  வாசிக்கவோ, எழுதவோ முடியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதை எப்படி என அறியும் ஆர்வம் இருந்து கொண்டே இருந்தாலும், அதற்கான மனநிலை இல்லாமல் இருந்ததால் அதனைச் செய்யாமல் இருந்து விட்டேன்.

சில நாட்கள் முன்னால் அதனை எப்படியும் செய்ய வேண்டும் என முயற்சித்ததில், முதலில் Opera Mini browser ஐ பதிவிறக்கம் செய்து கொண்டதில் தமிழில் வாசிக்க முடிந்தது. தமிழ் விக்கிப்பீடியாவை பார்க்க முடிந்தபோது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. பின்னர் ThamiZha’s Android TamilVisai 0.1 ஐயும் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தேன். இன்றுதான் முதன் முதலில் எனது கைத்தொலைபேசியில் இருந்து முதலாவது தமிழ் மின்னஞ்சலை எழுதியிருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

Android Operative system இருக்கும் கைத்தொலைபேசி கிடைத்து கிட்டத்தட்ட 8 மாதங்களின் பின்னர் தமிழில் எழுதவும், வாசிக்கவும் தொடங்கியுள்ளேன்.