முயற்சி செய்துவிட்டு சொல்லுங்கள்.

Posted On ஜனவரி 25, 2006

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது புதிர்

Comments Dropped 4 responses

1. ஐந்துக்கும் ஒன்பதுக்குமிடையிலுள்ள ஏதாவது ஒரு எண்ணை தெரிவு செய்யுங்கள்.
2. அதிலிருந்து ஐந்தைக் கழித்துக் கொள்ளுங்கள்.
3. வரும் எண்ணை மூன்றால் பெருக்கிக் கொள்ளுங்கள்.
4. இங்கே கிடைக்கும் எண்ணை, அதே எண்ணால் பெருக்கிக் கொள்ளுங்கள். அதாவது வர்க்கம் எடுங்கள்.
5. கிடைத்த எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கங்கள் இருப்பின், அவற்றை ஒரு இலக்கமாக வரும்வரை கூட்டிக் கொள்ளுங்கள். (உ.ம். 64: 6 + 4 = 10; 1 + 0= 1)
6. இந்த எண் ஐந்தை விட அதிகமானதாக இருந்தால், அதிலிருந்து 5 ஐ கழித்துக் கொள்ளுங்கள். ஐந்தை விடக் குறைவானதாக் இருந்தால், 5 ஐ கூட்டிக் கொள்ளுங்கள்.
7. வரும் எண்ணை மீண்டும் 2 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்.
8. இப்போது வரும் எண்ணிலிருந்து 4 ஐ கழித்துக் கொள்ளுங்கள்.
9. இங்கே வரும் எண்ணுக்கு ஒழுங்கிலுள்ள ஆங்கில எழுத்தை தெரிவு செய்யுங்கள். (உ.ம். 1=A, 2=B, 3=C, 4=D…26=Z, etc)
10. அந்த ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு நாட்டின் பெயரை நினையுங்கள்.
11. இந்த பெயரில் வரும் இரண்டாவது எழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு மிருகத்தின் பெயர் நினையுங்கள்.
12. அந்த மிருகத்தின் மிகப் பொதுவான நிறத்தை நினையுங்கள்.

நீங்கள் நினைத்த நாடு டென்மார்க், மிருகம் யானை, நிறம் சாம்பல் ஆக இருந்தால், நீங்கள் 90% க்கு மேற்பட்ட மனிதர்களைப் போலவே சிந்திக்கிறீர்கள்.

இங்கே வந்து பார்த்து முயற்சி செய்தவர்கள், நீங்கள் நினைத்தவை எவை என்பதை குறிப்பிட மறக்காதீர்கள்.

புதிரா??

Posted On ஜனவரி 3, 2006

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது புதிர்

Comments Dropped 14 responses

இது ஒரு சிறிய கணக்கு. இந்தக் கணக்கை மனதில் செய்து பாருங்கள். எழுதவோ, கல்குலேட்டரைப் பாவிக்கவோ வேண்டாம். மனதில் செய்து பார்த்ததும், முதலில் உங்களுக்கு தோன்றும் விடை சரியா என்று பின்னர் செக் பண்ணிக் கொள்ளுங்கள்.

பி.கு> இது ஒரு மிகச் சிறிய கணக்குத்தான். இருந்தாலும் இந்தக் கணக்கை மனதால் செய்யும்போது நமது மூளை நம்மை ஏமாற்றி விடுவதாகச் சொல்கிறார்கள்.

கணக்கு இதுதான். எங்கே கணக்கை மனதால் கூட்டி விடையை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் இரண்டாம் முறை கூட்டியோ, அல்லது எழுதிக் கூட்டியோ, அல்லது கல்குலேட்டர் பாவித்தோ பாருங்கள். (உங்கள் மூளை உங்களை ஏமாற்றியதா, இல்லை காப்பாற்றி விட்டதா என்று எனக்கும் கூறுங்கள். :))

1000 ஐ எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் 40 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் அதனுடன் ஒரு 1000 ஐ கூட்டுங்கள்.
அதனுடன் 30 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் 1000 ஐ கூட்டுங்கள்.
இப்போது அதனுடன் 20 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் ஒரு 1000 ஐ கூட்டுங்கள்.
மீண்டும் இதனுடன் ஒரு 10 ஐ கூட்டுங்கள்.
உங்களுக்கு வரும் மொத்தம் எவ்வளவு?

புதிர்!!!!

Posted On ஜனவரி 3, 2006

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது புதிர்

Comments Dropped 9 responses

அடாடா…. ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து. எனக்கு ஈமெயிலில் வந்த ஒரு புதிரை இங்கே இணைக்கலாம் என்று வந்தேன்.

This is a killer…..
5 minutes and you’re a genius. This is an IQ test commonly given to job applicants in Japan.

Instructions

(For those of you that cannot read Japanese)

Object
Everybody has to cross the river.

Rules
Only two persons on the raft at a time.

The father cannot stay with any of the daughters without their
mother’s presence.

The mother cannot stay with any of the sons without their father’s
presence.

The thief (striped shirt) cannot stay with any family member without
the presence of the policeman.

Only the father, the mother and the policeman know how to operate the
raft.

இந்த பக்கத்தில் புதிர் இருக்கு. போய் பாருங்கள். வெற்றி கிட்டினால், எனக்கும் சொல்லுங்கள்.

http://freeweb.siol.net/danej/riverIQGame.swf

To start, click on the big blue circle on the right.

To move the people, click on them.

To move the raft, click on the pole on the opposite side of the
river.

(It may get a little violent, so be prepared).

சும்மா ஒரு இடக்கு மடக்கு கேள்வி!

Posted On ஓகஸ்ட் 26, 2005

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது புதிர்

Comments Dropped 14 responses

இது ஒரு இடக்கு மடக்கு கேள்வி. “நல்ல கேள்வி எதுவும் கேக்க தெரியாதா? லொள்ளுக் கேள்வியா இருந்தா இங்க எதுக்கு போடணும்” அப்படின்னு சில குரல்கள் ஒலிக்கிறா மாதிரி இருக்கு. காரணம் இருக்கே, சும்மா போடுவனா என்ன? இந்த கேள்வியை என்கிட்டே ஒருத்தர் கேட்டப்போ நான் கொஞ்ச நேரம் குழம்பிப்போனேன். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ அப்படின்னு நினைச்சு, என்னைப்போலவே ஒரு சிலராவது, அட்லீஸ்ட் ஒரு சில நிமிஷமாவது குழம்பிப் போக மாட்டாங்களான்னு ஒரு சின்ன நப்பாசையோடவும், நல்லெண்ணத்தோடவும் இதை இங்க புளொக்ல போடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.

இந்த கேள்வி பார்த்ததும் ‘இதெல்லாம் ஒரு கேள்வியா’ அப்படின்னு திட்டுறவங்க பதிலே சொல்லாமே போயிடுங்க (பப்ளிக்கா நான் திட்டு வாங்கிட கூடாதில்லையா, அதுதான்). அப்புறம், கொஞ்ச நேரமாவது குழம்பி போறவங்க, தயவு செய்து ஒரு பதில் போட்டுட்டு போயிடுங்க. (எனக்கும் கொஞ்சம் திருப்தி வேணுமில்லையா?). கொஞ்ச நேரம் குழம்பிப்போனாலும், அதை இங்க பப்ளிக்கில காட்டிக்க விருப்பமில்லாதவங்க, அட்லீஸ்ட் அந்த நட்சத்திரத்துலே ஒரு குத்து வைத்து, மத்தவங்களுக்கும் கொஞ்சம் பரிந்துரை செய்துட்டு போங்க (எனக்கு இருக்கிற அந்த நல்லெண்ணம் உங்களுக்கும் இருக்கும் ன்னு நம்பறேன், ஹி ஹி, இன்னும் ஒரு சிலரை சேத்து குழப்பலாமே?).

“எல்லாம் இருக்கட்டும், இந்த முன்னுரை எல்லாம் நமக்கெதுக்கு அந்தக் கேள்விதான் என்ன?” அப்படின்னு கூக்குரல் எல்லாம் வருதுபோல இருக்கு. கேள்வி கடைசியாத்தான் வரும். அதுக்கு முன்னாலே ஒரு சின்ன கதை வருது, இருங்க.

ஒரு ஊருல அப்பன், சுப்பன் ன்னு ரெண்டு தொழிலாளிங்க, ஒரு முதலாளிகிட்டே வேலை செஞ்சாங்களாம் (தொழிலாளிங்கன்னா முதலாளிகிட்டேதான் வேலை பாப்பாங்க, இல்லாமெ ஒரு தொழிலாளி கிட்டேவா வேலை பாப்பாங்க, அப்படின்னு கடுப்பாயிடாதீங்க). அந்த முதலாளிகிட்டே ஒரு ஆடு இருந்துதாம். அந்த ஆடு ஒரு நாள் ரெண்டு குட்டி போட்டுதாம். ஆனால் அந்த ஆடு குட்டி போட்டதும் செத்துப் போச்சாம். அட அம்மா ஆடு இல்லாமே இந்தக் குட்டிகளை எப்படி வளர்க்கிறதுன்னு நினைச்ச அந்த முதலாளி, அந்த ரெண்டு குட்டிகளையும் விக்கிறதுக்கு முடிவு செஞ்சாராம். அந்த தொழிலாளிங்க ரெண்டு பேர்கிட்டேயும், அதை விக்கிறதுக்கு ஏற்பாடு செய்ய சொன்னாராம். அவங்களும் சரின்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போனாங்க. போற வழியிலே அவங்க ரெண்டு பேரும் யோசிச்சாங்க ‘அட இந்த ஆட்டுக் குட்டிங்கள நாமளே வாங்கி வளர்த்தா என்னா’ அப்படின்னு. அவங்க ரெண்டு பேரும், ஆளுக்கு 25 ரூபா போட்டு அந்த ஆட்டுகுட்டிங்க ரெண்டையும், 50 ரூபாவுக்கு முதலாளி கிட்டே வாங்கலாம்னு முடிவு பண்ணினாங்க. (இந்த விலைவாசியிலே 50 ரூபாவுக்கு யாரு ஆட்டுக்குட்டி, அதுவும் ரெண்டு குட்டிங்க தருவா அப்படின்னுன்னு தர்க்கம் எல்லாம் பண்ணாதீங்க. சும்மா ஒரு கணக்குக்குத்தானே, கண்டுக்காதீங்க). ஆங்… நான் எங்கே விட்டேன், ஆஆ… அப்படியே மறுநாள் முதலாளிகிட்டே போய் 50 ரூபா கொடுத்துட்டு, ரெண்டு ஆட்டுக் குட்டியையும் வாங்கிகிட்டு போனாங்க. அவங்க போனப்புறம்தான் முதலாளி யோசிச்சார், ‘அட, நம்மகிட்டே வேலை பாக்குற ஆளுங்களாச்சே, அதுனாலே கொஞ்சம் விலையை கொறைச்சுக்கலாமே’ அப்படின்னு. யோசிச்சவர் ஒடனேயே, அங்கே வேலை பார்த்துக்கிட்டு இருந்த கந்தனைக் கூப்பிட்டு, 5 ரூபாவைக் கொடுத்து, “இதை அவங்ககிட்டே திருப்பிக் கொடுத்துட்டு வா” அப்படின்னு கொடுத்து அனுப்பினார். அந்தக் கந்தன் என்ன பண்னினான்னா, அதுல 2 ரூபாவை அவன் எடுத்துக்கிட்டு 3 ரூபாவை மட்டும் அந்த அப்பன் + சுப்பன்கிட்டே கொண்டுபோய்க் குடுத்தான். அவங்க ரெண்டு பேரும், அதை பாதியாக்கி 1.50 ரூபாவா எடுத்துக்கிட்டாங்க.

சரி இதுதான் கதை. இப்போ கேள்வி என்னன்னா, அப்பனுக்கும், சுப்பனுக்கும், அவங்க அவங்க குடுத்த காசிலே 1.50 ரூபா திருப்பி கிடைச்சாசு. அப்போ, அவங்க ஒவ்வொருத்தரும் அந்த ஆட்டுக் குட்டிக்கு கொடுத்திருக்கிற காசு 25-1.50=23.50 ரூபா. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொடுத்திருக்கிற காசு 23.50 + 23.50 = 47 ரூபா, சரியா? இதுல கந்தன் எடுத்துக்கிட்ட காசு 2 ரூபா, சரியா? அப்போ 47 + 2 = 49 ரூபா ஆச்சா? அப்படின்னா, அந்த மிச்சம் 1 ரூபா எங்க போச்சு? இதுதான் கேள்வி.

என்ன? கவுண்டமணி, செந்திலோட வாழைப்பழ க
ணக்கு மாதிரி இருக்கா? இல்லையே அப்படின்னு சொல்லுறீங்களா? அப்போ பதிலை சொல்லிட்டு போங்க பார்க்கலாம்.